lørdag 3. februar 2018

வெண் பருதிச் சுவாலை

வெண் பருதிச் சுவாலை ...கவிதையின் காதலன்

மரக் கவண்கள் நடுவே 

வெண் பருதிச் சுவாலை ஒன்று 
மெல்லத் துளிர் விட, 
பக்க வாட்டின் மைக் குழம்பு வாயுக் 
கரைவாய் பரிதிக் கதிரில் கலவி கொள்ள 
ஒளியின் பிறப்பில், 
இரவின் முகை முகம் முகிழ்த்தெழுகிறது. 

ஒளிக்கீற்றின் மோகப் பார்வை 
கடலின் மடியை காமுறவே, 
வெண்பனிச் சாலை ஒன்றில் 
மீனினக் கூட்டமொன்று 
கும்மாள யாத்திரை செல்லும், 
தென்றல் இதமும் தென்னங் கதிரும் 
ஊடல் களத்தில் உலவும், 
மெய் ஞானக் கிறுக்கலை 
ஆழித் கரையினில் 
அழகிய நண்டுகள் வரையும்..

முற்றக் கூடலில் முத்துக் குழந்தைகள் 
முத்தக் குளியலில் திளைக்க, 
உணவுப் பானையின் உருண்டைச் சோறும் 
நிலவில் பாட்டியின் வடை சுடும் காட்சியும் 

குழந்தை நாவில் தவழும், 
கிணற்றுத் தடாகத் தடியில் 
ஆங்கே காதல் தவளை தம்பதி ஒன்று 
காமக் கழிப்பில் இளைப்பாறல் கொள்ளும், 
புது மோக அத்தியாயம் சொல்லும்.

நாதச் சுரங்கப் பொக்கிசப் புதையலை ,
நாரைக் கூட்டம் நாவிலிசைக்க, 
நாளிகை பார்த்து நாணல் காட்டில் 
நானம் பூண்ட ஓர் நன்னிலவின் காட்சி.
தேன்னிலவின் முத்தத்தை முன்பொழுதில் 
இரவல் பெற்றிட, தென்திசை விரைகிறான் 
தேய்பிறைக் காதலன் ஒருவன்.

மஞ்சளும் வெண்மையும் மெல்லக் கலப்புற, 
பொன்னிற தேகம் பூமணம் பூத்திட, 
பூவையின் இதழினில் மெல்லப் புதைகிறான் 
புன்கண்கள் மறந்த புரட்சிக் காதலன். 

உணர்ச்சியின் புனர்ச்சி விதியை 
உருத்தெரியாமல் சிதைத்த பூரிப்பு, 
மனிதச் சாதியின் அதி உயர் சினுங்கலாம் 
வெட்கத்தைச் சீண்டியதால் இவனும் புரட்சியாளனே!

மலை முகட்டின் நுனியோ, 
மதுக் கிண்ணக் குழியோ, 
சம விகிதச் சுடரொளி பரப்பி நின்றாலும், 
நிலவுக் காட்சியை உணரும் 
மாந்தர்தம் நிலமை என்னவோ வேறுபாட்டுக் கூறுகளே! 
வறுமை, தனிமை, இயலாமை, காதல்,கலவி, 
ஆடம்பரம், ஆனந்தம் என உணர்வின் 
பரிணாமம் மாறி மாறி ஆட்டிப் படைக்க 
இரவுக் குளத்தில் 
ஆனந்தக் குழியல் கொள்கிறாள் வெண்மதியாள்...

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...