torsdag 22. februar 2018

ஆரணங்கே_நாணமோ!



ஆரணங்கே_நாணமோ!

நுனி மேவிய புனலினில் தலை சாய்ந்த
புல் போலே நாணிக் குனிந்த ஆரணங்கே
நாணலின் காரணம் யாரணங்கே
தாய் மாமனோ தனியே வந்தவனோ!

கண்ணிலே மின்னொளி
கழுத்திலே நகையொளி
முகத்திலே காதலொளி
அகத்திலே யாரொலியோ!

மார்புக் கச்சை விலகியதே
கொங்கைகளின் ஏக்கங்களில் ஏகாந்தமோ
உடுக்கை போலே சிறுத்த இடை மாமனையும் மயக்குமே
உன் அடி வருடி வந்தவனையும்
இழுக்குமே
அந்தப்புர அழகை ரசிக்க ஓராயிரம் கண்கள்  போதாதே!

றோய் குருஸ் அம்புரோஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...