onsdag 14. februar 2018

விதி மீறும் காதல் தா......!கவிதையின் காதலன் பேசாலை


   விதி மீறும் காதல் தா......!   கவிதையின் காதலன்பேசாலை 
இது தான் நீதியோ !
வலி தான் என் சாதியோ!
மனக் கூட்டில் மண்டிக் கிடக்கும்

கவியே என் ஆறுதல்!
புலம்பல் காவியப் பூக்களில்
இன்று நான் புது மலர் !
வாடா வசந்தங்கள்
என்னுள் வந்திட
வரம் கேட்டு வருகின்றேன்!
நிராகரிப்புக் கோப்பையின்
நீராகாரம் நான் - என்னை
மண்ணில் தெளிப்பதும்
அமிர்த்தப் பாலாய்
அள்ளி நுகர்வதும்
உன் வாயிலே உள்ளது!
வெட்டுண்ட வாளைகள்,
துளிர் விட வாய்ப்பில்லை!
விதிமுறை மீறி காதல் கேட்கிறேன். இரவலாக அல்ல இதயமாக......!


இனிய காதலர் தின வாழ்த்துகள்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...