fredag 16. februar 2018

கல் முகட்டில் காருண்ய தெய்வம்.....!

கல் முகட்டில் காருண்ய தெய்வம்.....! 
கவிதையின் காதலன் பேசாலை
கல்வாரி மாமலையில்
மேகத் தோழர்களின்
இரங்கல் கூட்டம்!
கொடுமுடிக் குன்றின்
தேவயாத்திரைக்கு
சோக கீதங்கள் பாட
கண்ணீரோடு விரைகின்றன!
முள்முடிக் கிரீடம் அணிந்து,
அன்பரசர் செல்கையில்,
அடர் வனங்கள் வாடும்,
புட்கள் முகாரி ராகம் பாடும்!
வியர்வைத் துளிகள்
வழியில் வீழ்ந்து
வரள் நில மலையை
பசுமை வனமாய் மாற்ற,
பாரச் சிலுவை தூக்கி
தேவமகன் செல்கிறார்!
பாவம் பட்டு சிதைந்த நாவாய்,
வதைக் கடல் சுழலில்
சிக்கி நகர்ந்திடும் வேளையில்,
மானுட பாவப் பெட்டகம்,
மறு நொடியில் நொறுங்கி
மண்ணில் உதிரும்!
நாதன் சிந்தும் வியர்வை பட்டு,
கோரச் சிலுவை முகம் சிவக்க,
கல்முகட்டின் முகாரியில்
கருணை தெய்வம்
கரைவது பாரீர்!
இறைவன் திருவுடல்
தன் மேல் பட்டதும்,
உருகும் மெழுகாய்
கழுமரம் கண்ணீர் விடும்,
ஆணியின் கூர்முனைகள்
ஆண்டவன் குருதிச் சதை ஏந்தி
மார்பில் அடித்து அழும்!
இங்கு வலிகளே வழித்துணை,
காயங்களே மருந்தாய் மாறும்
அதிசயம் நிகழுது!
புண்பட்ட இதயங்கள்
திருரத்த துளியை
மருந்தாய் பெற்றிட,
சினேகர் வரும் வழியெங்கும்
தவமாய் கிடக்குது!
நானிலம் நோக்கிய
மானிடப் பயணத்தின்
மரண காண்டத்தின்
துன்பம் தாங்கி,
மலைச் சிகரக்
கொடும் பாறையில்
சாந்த தெய்வம்
உதிரம் சொட்ட
பாதம் வைக்கிறது!
காருண்ய தெய்வத்தின்
புனிதப் பயணத்தில்
நாமும் இணைவோம்....!
தவக்காலத்து குருதி நீரூற்றில் பாவங்களைக் கரைப்போம்...!
# கவிதையின் காதலன் பேசாலை.
இணைச் சொற்கள்
கொடுமுடிக் குன்று _ கடினமான உயர்ந்த மலைக் குன்று,
தேவயாத்திரை - புனித பயணம்,
சோக கீதம் - சோகப்பாடல், விரை- செல், அடர்வனம் - அடர்ந்த காடுகள், கிரீடம் - தலையணி , புட்கள்- பறவைகள், முகாரிராகம் - சோகமான ராகம், வரள் நிலம் - வரண்ட பூமி, வனம் - காடு, நாவாய் - படகு , குருதி , உதிரம் - இரத்தம், சினேகர் - இயேசு, நானிலம் - உலகம், காருண்யம் - கருணை

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...