நான் என் தாயின் பிள்ளை
தாய் இருந்தும் அனாதைப் பிள்ளை...
தகப்பன் பெயர் அறியாததால்
தாய் யாரென அறியாது
அறுதியாய் போனேன்...
காமப் பசியின் தீனியாய்
திணிக்கப்பட்டு தரணி
கண்டவள் நான்...
கால்வாய் எங்கிலும்
காகிதம் போல்
கசக்கி எறியப்பட்டவள் நான்...
ஒருவேளை சோற்றிற்காய்
தெருவெல்லாம் தவம்
கிடந்தவள் நான்...
ஆம்... நான் தான் பேசுகிறேன்
அனாதை தான் பேசுகிறேன்...
என்னை போன்றோர் எல்லாம்
கடவுளின் குழந்தைகளாம் யாரோ
கவிஞனின் ஆறுதல் ஒப்பாரி...
அது உண்மையாயின் அந்தக்
கடவுளுக்கும் தேவை குடும்ப கட்டுப்பாடு...
#அனாதை
வரிகள் :- Hudson Antony
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
இந்த செய்யுள் என் சிந்தையில் வரும் பொழுதெல்லாம், எனது பெசாலை மாகாவித்தியாலைய நினைவுகள் கூடவே தொற்றிக்கொள்ளும். அப்பொழுதெல்லாம் மன்னார் மா...
Ingen kommentarer:
Legg inn en kommentar