நான் என் தாயின் பிள்ளை
தாய் இருந்தும் அனாதைப் பிள்ளை...
தகப்பன் பெயர் அறியாததால்
தாய் யாரென அறியாது
அறுதியாய் போனேன்...
காமப் பசியின் தீனியாய்
திணிக்கப்பட்டு தரணி
கண்டவள் நான்...
கால்வாய் எங்கிலும்
காகிதம் போல்
கசக்கி எறியப்பட்டவள் நான்...
ஒருவேளை சோற்றிற்காய்
தெருவெல்லாம் தவம்
கிடந்தவள் நான்...
ஆம்... நான் தான் பேசுகிறேன்
அனாதை தான் பேசுகிறேன்...
என்னை போன்றோர் எல்லாம்
கடவுளின் குழந்தைகளாம் யாரோ
கவிஞனின் ஆறுதல் ஒப்பாரி...
அது உண்மையாயின் அந்தக்
கடவுளுக்கும் தேவை குடும்ப கட்டுப்பாடு...
#அனாதை
வரிகள் :- Hudson Antony

Ingen kommentarer:
Legg inn en kommentar