onsdag 21. mars 2018

#கவிதைகளின்_பிறந்த_நாள்

#கவிதைகளின்_பிறந்த_நாள்

கண்ணை மூடினாலும் நீயே!
கண்ணைத் திறந்தாலும் நீயே!
கனவிலும் நீயே நினைவிலும் நீயே!
காலங்கள் கடந்து வியாபித்திருப்பதும் நீயே!

காய்ந்த சருகுக்கு உயிரளித்ததும் நீயே!
கம்பீரமான மரத்தைக் காலடியிட்டதும் நீயே!
கரைந்து போன இரவுகளின் காவலனும் நீயே!
கண்ணீர்த்துளிகளின் ஆறுதலும் நீயே!

நிலாமுற்றத்தில் என் பெயரும் உன்னாலே!
கவி மலர்களில் மலராகியதும் உன்னாலே!
சந்திரோதயத்தில் சஞ்சரித்ததும் உன்னாலே!
உன்னாலே உன்னாலே எல்லாமே உன்னாலே!

கவிஞர்கள் உருப்பெற்றதும் உன்னாலே!
இன்றைய நாள் இனியதானதும் உன்னாலே!
ஏனென்றால் கவிதையின் பிறந்த நாள்……
கவிதைகளுக்கு இன்று பிறந்த நாளாம்……

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...