søndag 25. mars 2018

கல்வாரி மைந்தனுக்கு
கலையிழந்த நிலையா!
காலங்கள் கண்ணீர் கடலில்
கரை தேடிய நொடியா!
வாடிய பூக்கள் இந்நொடியில் பூத்திருக்கலாமென புலம்பியதா!
வானிருண்ட மேகங்களும்
கல்வாரி மலைப் பாறைகளும்
கண்ணீரில் மூழ்கியதோ!
நாதனே எங்கள் பாவங்களின்
விடுதலை நாயகனே விடை தாரீரோ!

கடைக்கண் பார்வையால்
எம் பாவக் கரை துடைத்து
பரிசுத்தம் ஆக்கிடுமே!
நல்லாயனே நசரேத்தூர் நாயகனே
உம்மை நம்பியே எம் நம்பிக்கைகளை கையேந்தி உம்மிடம் வருகின்றோம்.
உம்மிடம் ஒப்படைக்கின்றோம்!
ஆமேன்…………………………

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...