mandag 5. mars 2018

விக்டரியன்ஸ் கொடி பறக்கும்.... # கவிதையின் காதலன்.

 விக்டரியன்ஸ் கொடி பறக்கும்....

வெற்றிக் கோயில் மணியடிக்க
 எட்டுத்திக்கும் அனல் பறக்க,
நடந்து வரும் படையை பாரு!
இவர் திறனுக்கு முன்,
துணிந்து நின்று
திணறியவர் கதைய கூறு!

மொத்த தீவும் நடு நடுங்க,
ஒத்த கொடி பிடிச்சு கொண்டு
விக்டறியன் நடந்து வந்தா,
கத்தும் கடல் புலன் அடக்கும்,
வெட்டும் தீயின் பொறி பறக்கும்.

பத்திமாவில் அடிய வச்சு,
கபடி சொல்லி கால் மடிச்சா,
லூர்த்து பாட்டில் வெடிமுழங்கும்!
கெபியடியும்  நடுநடுங்கும்!
மணல் பறக்க அடியெடுத்து,
கடல் மடியில தடிய நட்டு,
மட்டைப் பந்து அடிக்கையிலே
மேகத் தட்டும் குல நடுங்கும்
வழி கொடுத்து ஒதுங்கி நிக்கும்.

தடகளத்தில் மிதிய வச்சு
தசைகள் எல்லாம் நடுநடுங்க,
விசையை கொண்டு
ஓட்டம் கண்டால்
திசைகள் எல்லாம் பறபறக்கும்
 பேசாலை சிலு சிலுக்கும் .

வசவுகளை உதறித் தள்ளி
நெசவுகளாய் உறவை அள்ளி
விக்டரியன்  விசையின் புகழ் விண்வரைக்கும் முழங்கி நிற்க,
ஊர்ச்சோலை மரங்களெல்லாம்
பேசாலைப் புகழ் படிக்கும்!

# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...