tirsdag 6. mars 2018

நிழல் தேடிய பயணத்தில் CROOS.A.H


நிழல் தேடிய பயணத்தில்
நினைவான நிலவே
என் நிறைவேறாத
ஆசைகள் எத்தேனையோ!

பூமி வாழ் மானிடன் நான்
அருகில் வர தொட ரசிக்க
ஏக்கங்கள் கோடியே
ஆனாலும் தெருக்கோடியே!

நீ என்றாவது என்னைப் பற்றி
சிந்தித்ததுண்டா என்னைக் காண
பூமி தரையிரங்கி வந்ததுண்டா
எப்போ வருவாய் பதிலுரை!

என்னைப் போலே எண்ணற்ற
எண்ணங்களுடன் எண்ணற்ற
மனிதர்களின் எண்ணங்களுக்கு
எப்போது விடை தருவாய்!

வான் வீதி விட்டு மண் வீதி
இறங்கி வா மதியே
பதில் தா கேள்விகளுக்கு
ஏமாற்றாதே நான் ஏமாந்திடுவேனே!

CROOS.A.H

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...