torsdag 7. april 2011

நினைவில் நிலைத்தவர்கள் டயஸ் மாஸ்டர்!

வெள்ளை நிற மல்லிகையோ வேரெந்த மாமலரோ! வள்ளல் அடியினுக்கு வாய்த்த மலர் எதுவோ? வெள்ளைநிற மல்லிகையுமில்லை வேரெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது. இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் டயஸ் மாஸ்டரின் நினைவுகள் சுழன்றுவரும். காரனம் அவர் அணியும் ஆடை. ஆள்பாதி ஆடைபாதி என்பார்களே அது அவருக்கு நன்றாகப் பொருந்தும். அவர் ஆடைமட்டுமல்ல அவர் உள்ளம் கூட கள்ளம் கபடமற்ற வெள்ளைக்கமலம் போன்றது. ஆசிரியராக தோன்றுகின்ற ஓர் குழந்தை! அவர் வாயில் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் தாராளமா கப்புரளும். சரித்திர பாடம் படிப்பிக்கும் போது சுவாரஸ்யமாகப் படிப்பிப்பார். இலங்கையின் முதல் பிரதமர் டி எஸ் சேனநாயக்காவும் அவர் மகன் டட்லியும் இவரது கதாநாயகர்கள்! கிரிக்கட் விளையாடுவார் பொதுவாகச்சொன்னால் கிராமத்தில் வாழும் ஓர் பிரிட்டிஸ்காரன்!
                                                                        நேர்மை இவரது சிறந்த பண்பு அதற்கு ஒரு சான்று இங்கே! சிரிமா அரசாங்கம் காணி உச்சவரம்புச்சட்டம் அமுலாகிய போது தனக்கு அளவுக்கு மிஞ்சிய காணி இருப்பதாக அரசுக்கு அறிவித்து அதை அரசுக்கு வழங்கியவர் ஒருவேளை இது மடத்தனமாகத்தோன்றலாம் ஆனால் உண்மை நேர்மை இதற்குப்பின்னால் இருப்பதை நாம் கவனிக்கலாம். எங்கள் பேசாலையில் வாழ்ந்த வித்தியாசமான நல்ல மனிதர்களிள் இவரும் ஒருவர்!

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...