tirsdag 5. april 2011

அறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்

அறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்

My_school














இதுதான் பேசாலை மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிராதான மண்ட பத்தின் நுழை வாயில்! இதன் வலது பக்கத்தில் அமைந்துள்ள கட்டிடம் பின்னாளிலே தொழிலதிபராக இருந்து மறைந்த திரு, வெலிச்சோர் ஞானப்பிரகசம் டயஸ் அவர்க ளினால் நிர்மானிக்கப்பட்டது. பேசாலை மகாவித்தியாலய மனது தற்போது பல பெரிய கட்டிடங்களையும் பிரமாண்ட மான விளையாட்டுத்திடலையும் அரங்க மேடைகளோடு கம்பீரமாகத்திகழ்கின்றது! அறிவொளி அளித்துலகளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம் என்று காலைவெயில் முகத்தில் சுழிரென்று சுட, கூசும் கண்களோடு பாட சாலைக்கீதத்தை பாடும் போது இனம்புரியா சந்தோசம் மனதில் குடிகொள்ளும். அதிபர் அல்லது ஆசிரியர் ஒருவர் அன்றைய நாளுக்குரிய புத்திமதிகளையும் ஆலோசனை களயும் வழங்குவார். ஒவ்வொரு ஆசானும் தெய்வங்களகஎமக்குத்தெரி வா ர்கள் உண்மையும் அதுதான்! அப்படி தெய்வமாக் எனக்குத்தென்பட்ட ஒரு சிலர் ஆசிரியை திருமதி ஜெகநாதன், தலைமை ஆசிரியர் திரு சாமிநாதன், திரு, முகுத்தார் இப்படிப்பலர். ஒவ்வொருவருக்கும் அவரவர் பள்ளி வாழ்க்கை அற்புதமான காலங்களாகும். அதனைச் சொல்லும் பாணியானது சேரனின்அல்பம், பாலுமகேந்திராவின் அழியாதகோலங்கள் போன்ற திரைப்படங்களாக மனதில் விரியும். உங்களுக்கும் உங்கள் பாடசாலை பற்றிய நினைவுகள் மலருகின்றதா? அப்படியானால் அதனை பகிர்ந்து கொள்ளலாமே!

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...