fredag 17. november 2017
torsdag 9. november 2017
சோக்ரா! chocra!
சோக்ரா! chocra!
நீண்ட சரிதை நாடகங்கள் அல்லது வாசாப்புகள் மேடை ஏற்றும் போது குறைந்தது இரண்டு நாட்கள் செல்லும், ஊரே கலை விழாவாக காட்சிதரும். இந்த வாசப்புகள் நாடகங்கள் இரவு இரவாக நடைபெறும். ஒரு காட்சி அமைப்புக்கு பின் இன்னொரு காட்சி அமைப்பு ஒழுங்கு செய்ய, தயாரிப்பாளருக்கு நீன்ட நேரம் செல்லும், இரவு நேரம் அல்லவா பார்வையாளர்கள், தூங்கிவிடக்கூடாது என்பதற்காக, அவ ர்களை விழிப்பாக வைத்திருக்க, நகைச்சுவை நேரத்தை ஒதுக்குவார்கள், அந்த நகைச்சுவை காட்சிகளை ஒழுங்கு செய்பவர்தான் இந்த சோக்ரா! எனது தந்தை ஒரு நகைச்சுவை ,கோமாளி நடிகர், இது அவரின் இன்னொ ரு வடிவம் ஆளுமை! இந்த நகைச்சுவைப் பண்பு, அவரின் பிள்ளைகளி டமும் இருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள், அவர்கள் உழைப்பதி லும், படிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாளராகவும் இருப்பார்கள். இந்த சோக்ரா என்ற கலைவடி வம், கோமாளித்தனமான காரியங்களை செய்து பார்வையாளைகளை சந்தோசப்படுத்திக்கொண்டு இருப்பார்கள், அவர்களின் உள்ளத்தில் சோகங்கள் நிறைய இருந்தாலும், அதனை வெளிக்க்காட்டாமல், பார்வை யாளர்களை சிரிக்கவைப்பார்கள், உலக புகழ்பெற்ற சார்ளி சப்ளின், நாடக மேதை சேகஸ்பியர் இவர்கள் எல்லோரும் சோகம் நிறைந்த மனி தர்கள்! இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற சமயம் ஐரோப்பிய மக்கள் இழப்புகளினால் மனம் வாடினின்ர வேளை, சார்ளி சப்ளின் அவர்களை பேசாத நடிப்பினால், நகச்சுவையினால் மீட்டு எடுத்தார்.
சோக்ரா என்றால் ஸ்பானிய மொழியில் வாய் பேசா நகைச்சுவையாளன் என்று பொருள் படும், எனது தந்தைக்கு இந்த பட்டத்தை வழங்கியவர் எமது கோவிலில் கட்டளைக்குருவாக இருந்த பொமிக்கல் சுவாமி அவர்களே எனது தந்தையை அன்பாக சோக்ரா என்று அழைப்பார் அதுவே நாளடைவில் எங்களது பட்டப்பெயராக மாறிவிட்டது. எனது தந்தைதை பெரிய படிப்பாளி அல்ல, பணக்காரரும் அல்ல, ஆனால் அவரைப்பற்றி நிறையவே கதைக்கலாம்,, அது பற்றி தொடரும் எனது பதிவில் எழுதுகின்றேன்,,,,,,,,,,,,
சென்ற பதிவில் சோக்ரா என்ற பட்டப்பெயருக்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தேன், இப்பொழுது அந்த சோக்ரா பற்றிய ஒரு முக்கிய விடயத்தை இங்கே கூறவிழைகின்றேன். எமது கோவிலுக்கு முன்பு கட்டளைக்காரர்கள் இருந்தார்கள், கட்டளை க்குருவானவரும் இருந்தார்கள், தற்பொழுது அது மாற்றப்பட்டு பங்கு மக்கள், பங்குகுரு, பங்குச்சபை இப்படியாகிவிட்டது. கட்டளைகார ர்களாக இருந்தாலும் சரி, பங்குச்சபையாக இருந்தாலும் சரி, கோவில் பணத்தையும் கோவில் சொத்துக்களையும் அட்டைபோடும் சம்பவங்கள் பல நடந்துள்ளன, நடந்துகொண்டிருப்பதாக்வும் கேள்வி? தற்பொழுது மன்னார் நகரிலே கம்பீரமாக சிரித்துக்கொண்டிருக்கின்றதே வெற்றி நாயகி கட்டிடம், அந்த கட்டிடம் எழும்புவதற்கு முன்பு அங்கே பேக்கரி ஒன்று இருந்தது. அந்த பேக்கரியை சோக்ரா எனும் என் தகப்பனார்தான் நடத்தி வந்தார். எனது தகப்பனார் பாண் கேக் இன்னும் பல சாப்பாடு களை செய்வதில் கைதேர்ந்தவர். கும்பா கேக் என்ற ஒரு பாரம்பரிய த்தை எனது தகப்பனார்தான் அறிமுகம் செய்துவைத்தவர். இந்த பேக்கரியை தனது சொத்தாக மாற்றுவதற்கு செவாலியர் வேதம் பல்தானோ அரும்பாடுபட்டார். அதற்காக தனது மகனை வக்கீலுக்கு கூட படிக்கவைத்தார். பெரும் பணக்காரர், சேவாலியர் இதனால் அவரை எதிர்க்க கட்டளை குருவுக்கோ, அப்போதுள்ள கட்டளைகாரர்களுக்கு தைரியம் இல்லை, இருந்தபோதும் எனது தகப்பானார் விட்டபா டில்லை.தனியொருவனாக தனித்தே எதிர்த்தார். அந்த பேக்கரியும் காணியும் மாதாவுக்கே சொந்தம் என்று போராடினார். அவரது உழைப்பு முழுவதும் கோட்டுக்கும், பொலிஸுக்குமாக கரைந்ததுதான் மிச்சம்! இதனால் எங்கள் தகப்பன் எங்களது படிப்பில் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டவில்லை. நிலமை இப்படியாக இருந்தவேளையில் தான், பேசாலைக்கு பொன்னையா சுவாமி வந்தார். பேசாலையில் பெரும் புரட்சி நடந்தது! புரட்சிகரமான புனித ஸ்நாப அருளப்பர் மன்றம் உருவானது, கூடவே சிங்கராயர் எனும் ஒரு சிங்கம் உதவிக்குருவாக இருந்தார். புனித ஸ்நாபக அருளப்பர் மன்ற இளையோரின் உதவியுடன் பொன்னையா சுவாமி, மன்னார் பேக்கரி விவகாரத்தை கையில் எடுத்தார். வெற்றியும் பெற்றார். அப்பொழுது அத்திவாரமாக இருந்து சோக்ரா அழுதார், இப்பொழுது கட்டிடம் ஜொலிக்கின்றது. எனது வெற்றி அன்னையும் மனமகிழ்ந்தாள், சோக்ராவின் முயற்ச்சி, அன்னையின் ஆசியாக அவரது ஆண் வாரிசுகளுக்கும், அவர்களது பிள்ளைகளையும் வந்தடைந்தது. அவரது பிள்ளைகள் பட்டதாரிகளாகவும், அவர்து பேரப்பிள்ளைகள் டாக்டர்களாகவும் , பொறியியலாளராகவும், விமான பொறியியலாளராகவும், வங்கி முகாமையாளராகவும், சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநணர்களாகவும், ஐரோப்பிய மண்ணிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்! சோக்ராவின் வாழ்வில் நடந்த பல முக்கிய பதிவுகளுடன் மீண்டும் உங்களை அடுத்த பதிவிலே சந்திக்கின்றேன். அன்புடன் உங்கள் அன்பு பேசாலைதாஸ்
சோக்ரா என்ற லோறன்ஸ் பீரிஸ்,,,,,
சென்ற பதிவிலே மன்னார் வெற்றி நாயகி கட்டிட காணி சம்பந்தமாக சோக்ராவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியிரு ந்தேன், இப்பொழுது சோக்ராவின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை பதியவிட ஆவலாக இருக்கின்றேன். மன்னார் பஸ் டிப்போவில் இருந்து, தலைமன்னார் நோக்கி பிற்பகல் மூன்று மணிக்கு செல்லவிருந்த பேருந்து, அன்று நாற்பத்தைந்து நிமிடம் தாமதாமாக புறப்பட்டது. அந்த பேருந்தில் சோக்ரா அவர்கள், தனது கேக், பாண், பனிஸ் பெட்டிகளை ஏற்றிக்கொன்டு தானும் புறப்பட்டார். ஏற்கனவே தாமதமாக புறப்பட்டதால், பேருந்தின் சாரதி படுவேகமாக பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தார். எருக்கலம்பிட்டியை அண்மித்துவிட்டது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவளது பத்து வயது பையனும், பேருந்தில் ஏறுவதற்காக, தரிப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பத்து வயது பையன் ஓடிவந்து, பேருந்தில் ஏறிக்கொண்டு, ஓடி வாங்க அம்மா என்று கத்திக்கொண்டிருந்தான், பாவம் அந்த கர்ப்பிணிப்பெண் என்ன செய்வாள்? மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தாள். அதனை பொறுக்க முடியாத பேருந்து நடத்துணர், வண்டியில் ஏறிய சிறுவனை இறக்கிவிட்டு, பிஸிலை ஊத, சாரதி விருட்டென்று வண்டியை வேகமாக ஓட்டினார். இதனை பார்த்த சோக்ராவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சாரதியோடும் பஸ் நடத்துணரோடும் வாய்த்தர்க்கம் செய்தார். சோக்ராவின் தர்க்கத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாரதி பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தார். சோக்ராவும் ஏனோ அமைதியாகிவிட்டார், இப்பொழுது பஸ் கரிசலைதாண்டிவிட்டது, திடிரென்று சோக்ரா எழுத்து உடனே பஸ்ஸை நிறுத்தும்படியும், தனக்கு மூத்திரம் வருகின்றது அடக்கமுடியவில்லை பஸ்ஸை நிற்பாட்டுங்கள் என்று கத்த, பஸ் வண்டி நிறுத்தப்பட்டது. சோக்ரா அவசர அவசரமாக் கீழே இறங்கி, அருகில் இருந்த ஈச்சை பற்றைக்குள் மறைந்து கொண்டார், அரைமணி நேரம் சென்றும் ஈச்சை பற்றையை விட்டு சோக்ரா வெளியே வரவேயில்லை. ஏற்கனவே பஸ் தாமதாமாகிவிட்ட படியால் பயணிகள் குழும்பிவிட்டார்கள். பின்பு சோக்ரா ஆறுதலாக வெளியே வந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டார். ஒரு கர்ப்பிணிப்பெண்ணை ஏற்ற ஐந்து நிமிடம் உங்களால் பொறுக்க முடியவில்லை, இப்பொழுது அரை மணித்தியாலம் வீணாக்கிவிட்டீர்களே! எனக்கு மூத்திரம் வரவில்லை உங்கள் செயலை கண்டு ஆத்திரம் தான் வந்தது என்று, பணிகளோ சாரதியோ யாரும் ஒன்றுமே சொல்லவில்லை, சோக்ராவின் செயலில் மனிதாபிமானம், நியாயம் இருப்பதை எல்லோரும் உணர்ந்து மெளனமானர்கள். யாரோ ஒரு கர்ப்பிணி பெண்ணுக்காக வாதடியவர்தான் இந்த சோக்ரா,,,,எவன் ஒருவன் அநீதியை கண்டு ஆத்திரப்படுகின்றானோ அவன் என் தோழன் என்றான் சேகுவேரா,,,, அன்புடன் உங்கள் அருமை பேசாலைதாஸ்
சோக்ரா வெற்றி அன்னையின் ஆசீர் பெற்றவன்!
சோக்ரா என்னும் பதிவில், சோக்ரா மன்னார் வெற்றிநாயகி கட்டிட க்காணி சம்பந்தமாக சோக்ராவின் தனிமனித போராட்டத்தையும், அதன் விளைவாக வெற்றி அன்னையின் அருளை பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பாக பதிவு செய்திருந்தேன், அந்த அன்னையின் அருளை எனது சொந்த வாழ்வில் உணர்ந்து மெய் சிலிர்த்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிரலாம் என என் உள்மன உணர்வு தூண்டுகின்றது. எமது பேசாலை மக்கள் எல்லோரும் மண்டப முகாமில் இருந்தவேளை, இந்தி யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருட்களை ஏற்றி இறக்கி வியா பாரம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஒரு முறை எனது கடைசி தம்பி சுவக்கின், செல்வம் மற்றும் பிலிப்பண்ணன் எல்லோரும் பேசாலையில் இருந்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது, பொருட்களை மொத்த மாக வாங்கும் மண்டபத்து ஆறுமுகத்தோடு நான் அந்த இரவு இராமே ஸ்வரத்தில் நிற்கின்றேன், அதிகாலை நான்கு மணிக்கு பேசாலையில் இருந்து சில போட்கள் வந்தன, அப்பொழுது ஒரு பேரதிர்ச்சி செய்தி எனக்கு கிடைத்தது அதாவது கடலில் நேவிக்காரன் பீரங்கியால் சுட்டதா கவும் அதில் சுவக்கினின் போட் சிக்கிக்கொண்டதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது, எனக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது, ஒன்றுமே புரியவில்லை ஓவென்று கதறி அழுகின்றேன், நிலைமையை புரிந்து கொண்ட ஆறுமுகம் டக்கென்று சாராயபோத்தலை திறந்து அப்படியே எனது தொண்டையில் ஊற்றுகின்றான் அதுதான் எனது முதல் அனுபவம், கொஞ்சம் வெறி தலைக்கேறுகின்றது, பிலிப்பண்ணனின் தகவலை திண்டுக்கலில் இருக்கும் எனது அண்ணிக்கு சொல்வதற்காக, விடிய ற்காலை நாகை செல்லும் கடுகதியில் ஏறிக்கொண்டேன், பஸ் நாகபட்ட ணத்தில் நின்றுவிட்டது, நான் அன்னைவேளாங்கன்னி ஆலயம் செல்கி ன்றேன், முகப்பு மண்டபத்தில் ஒரு தேவவசனம் *அன்னையின் பிள்ளை கள் அவலமாய்ச் சாகமாட்டார்கள் என்பதே அந்த வசனம்! எனக்கு ஆறுதலாக இருந்தது, ஆம் நாங்கள் வெற்றி அன்னையின் பிள்ளைகள் என்பதை எனது மனம் ஆயிரம்தடவை உச்சரித்து க்கொண்டது.
திண்டுக்கலுக்கு பஸ் எடுத்து அங்கே சென்றேன் எனக்கு அங்கே ஆச்சரியம் காத்திருந்தது, இறந்திருப்பரோ என்று நினைத்த பிலிப்பண்ணன் அங்கே நிற்கின்றார். நடந்த நிகழ்வு களை விபரிக்கின்றார். நேவிக்காரன் பீரங்கியால் சுட்டதும் போட்டின் முற்பகுதியில் தான் சேதம் ஏற்பட்டது உடனே இயந்திரத்தை நிறுத்தி விட்டு இருட்டிலே அப்படியே நின்றுவிட்டோம் , சுவக்கின் கடலில் பாய்ந்துவிட்டான் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது, நான் இன்னொரு படகு மூலமாக இராமேஸ்வரம் வந்து சேது எக்ஸ்பிரஸ் மூலாமாக இங்கு வந்துவிட்டேன் என்றார், மனதுக்கு ஒரு ஆறுதல் ஆனாலும் சுவக்கினின் கவலை தொட்டுக்கொண்டது, இப்போது நான் மண்டபம் நோக்கி புறப்படுகின்றேன், அங்கே நான் போய்ச்சேர்ந்ததும் நல்லதோர் செய்தி எனக்கு கிடைத்தது, அதாவது கடலில் பாய்ந்த சுவக்கின் தலைமன்னார் கரை ஒதுங்கினான் என்பதே அந்த நல்ல செய்தி, அன்னையின் அருட்கரம் பேசாலை மக்களை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றி உள்ளது, பேசாலை ஆலையத்தில் நடந்த குண்டு தாக்குதல் நல்லதோர் புதுமையான சம்பவம் என்பதை என் ஊர்மக்கள் அறிவார்கள்! அன்னையின் பிள்ளைகளாக என்றும் சுகமாக பாதுகாப்பாக நாம் எல்லோரும் வாழ்வோம் அன்புடன் பேசாலைதாஸ்
சோக்ரா (லோறன்ஸ் பீரிஸ்),,,,,,,,, சோக்ரா அல்ல சோக்ரட்டீஸ்!
சென்ற சில பதிவுகளில் சோக்ரா பற்றிய அனுபவ குறிப்புகளை பதியவிட்டேன். இன்னும் சில குறிப்புகளை உங்கள் பார்வைக்கு பதியவிடுகின்றேன். சோக்ரா வயோதிப காலம் வந்தபோது, தன்னிச்சையாக வாழ்த்தலைப்பட்டார். தான் உழைப்பதை தானே அனுபவித்துக்கொண்டு, குடித்துக்கொண்டும் வாழ் நாளின் இறுதிப்பாகத்தை கழித்தார். யாராவது என்ன லோறன்ஸ் குடித்துக்கொண்டு திரிகின்றாயே என்று கேட்டால் போதும்,,,, எனக்கு என்ன கவலை, எட்டு சிங்கங்களையும், ஒரு இராசாத்தியையும் பெற்றேன், எனக்கென்ன கவலை போய்ப்படுங்கடா,, என்று வெகு அலட்சியமாக பேசுவார். தான் பெற்ற ஆண்பிள்ளைகள் வாழ்வில் போராடி முன்னுக்கு வருவார்கள் என்பதில் அவருக்கு அசைக்கமுடியா நம்பிக்கையும், வெற்றி அன்னையின் தைரியமும் அவருக்கு இருந்தபடியால், தன் உடல் நிலையை கவனிக்காமல் குடியில் காலத்தை கழித்தார். மது போதையில் இருக்கும் போது, அவர் பாட்டுபாடுவார், வசனம் பேசுவார். தந்து சரணகொட, துந்துக்கவால,, துந்து சரணகொட இப்படி ஏதோ சிங்கள மொழி பாடலை பாடிவிட்டு வசனம் பேசுவார் " எண்ணிய எண்ணம் எங்கே? இலக்கண குமாரன் எங்கே? கன்னனும் தேரும் எங்கே? கண் கொள்ளாப் படைகள் எங்கே? எங்கே? என்று கேட்டு தெருவில் போவோர் வருவோரிடம் கேள்வி கேட்பார். எதுவுமே நிரந்தரம் இல்லை. கேள்விகள் மட்டுமே நிரந்தரம் என்று சொல்லுவார். இப்போது நினைத்தால் கூட சோக்ரா அல்ல சோக்ரட்டீஸ் ஞாபகத்துக்கு வரும்! மகாபாரதப்போரிலே, வீழ்ந்து கிடக்கும் துரியோதனனைப்பார்த்து, கிருஸ்ணர் கேட்கும் கேள்விகளைத்தான் சோக்ரா அந்த காலத்தில் கேட்டார்? நாடோடியாக இலங்கை எங்கும் அலைந்து திரிந்ததினால் சோக்ராவுக்கு சிங்களம் நன்றாக பேசவரும், ஆனால் இலக்கிய ஆர்வம் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புரியவில்லை. சோக்ரா தன் சின்ன வயதில் தாய் தகப்பனை இழுந்து, அண்ணன் எலியாஸ் பீரிஸ் அவர்களின் கண்கானிப்பில் இருந்தபடியால் இறுதிவரை எதிலும் பற்று அற்றவராக வாழ்ந்து மடிந்தார். அன்புடன் பேசாலைதாஸ்
søndag 22. oktober 2017
கோச்சு வண்டியும் அப்புகாமியும்!
கோச்சு வண்டியும் அப்புகாமியும்!
அப்புகாமி பெயர்தான் சிங்களம் ஆனால் சிங்களம் தெரியாத தமிழ் மட்டும் பேசும் கரையோரச்சிங்கள சமூகம் சார்ந்தவர், எனது ஊருக்கு பருவகால இடம்பெயர்ந்து மீன்பிடி க்கும், சிலாபம் புத்தளம் நீர்கொ ழும்பு, வென்னப்புவா இப்படிப்ப ட்ட இடங்களில் இருந்து மீன்பிடிப்ப தற்காக வருவார்கள், பின்னர் பருவ காலம் முடிந்ததும் வள்ளம் வலைகளோடு சார சாரையாக அவரவர் இடங்களுக்கு சென்றுவிடு வார்கள், ஒரு சிலர் தொடர்ந்தும் என் கிராமத்தில் தங்கி எங்களில் ஒருவராக மாறிப்போவார்கள், அப்படி மனம் மாறி இதயத்தால் என் ஊரோடு சங்கமமானது அப்புகாமியின் குடும்பம், 1964 ஆண்டு வீசிய புயலில் அப்புகாமியின் அப்பா காணாமல் கடலில் தொலைந்தவர்தான்! அதன் பின் அப்புகாமியின் அம்மா இடிய ப்பம் விற்றுத்தான் வறுமையோடு போராடினார்கள். அப்புகம்மையின் அம்மா, அக்கா, அவரது பெரியதாய் இவர்கள் எல்லோரையும் நாங்கள், நோனா அக்கா என்றுதான் செல்லமாக அழைப்போம், நோனாக்களின் இடியப்பம் அதைவிட நோனாக்கா செய்யும் சம்பல் தனிச்சுவை, அப்பு காமியும் நானும் பள்ளித்தோழர்கள், இன்றும் இணைபியா நணபர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை அன்பைத்தவிர, ஒரு முறை துரம் மாஸ்டர் நிராவியால் புகையிரத இஞ்ஜின் இயங்குகிறது, அந்த நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் ஸ்டீவன்சன் என்று எங்களுக்கு சொன்னார், அந்த நாள் சொல்லிவைத்தது போல என் கிராம த்துக்கு கரிக்கோச்சு வந்தது, நானும் அப்புகாமியும் அந்த கரிக்கோச்சை ஆவலோடு பார்க்கின்றோம் ஏதோ ஒரு மெக்கனிக் போல கீழே குனிந்தெ ல்லாம் அப்புகாமி ஆரச்சிபண்ணுகின்றான். கரிக்கோச்சியும் போய்வி ட்டது, அப்புகாமிக்கு ஒரு ஐடியா வந்தது அடே மச்சான் நாமும் சின்ன தாய் ஒரு கரிக்கோச்சி செய்துதால் என்ன என்றான். நானும் ஆமோதி த்தேன். திட்டம் தயாரானது. முதலில்பெரிய லக்ஸ்பிரே டின்னில் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக ஈயத்தால் ஒட்டி அடத்தோம், சிறிய வண்டியும் தயாரானது. இப்போது அதனை இயக்கவேண்டும், அப்பொ ழுது எனது வீட்டுக்கு முன்பாக வி ஜீ டயஸ் அவர்களின் மீன்வாடியும் அதற்கு பின்னால் ஒரு கிணறும் இருந்தது. (இப்போது தேவராஜ் வீடுக ட்டும் இடம்) அந்த கிணற்றடியில் தான் நாங்கள் கோச்சுவிட தயாரா னோம். குளிக்கவந்தவர்கள், தண்ணிற் மெண்டுகொண்டு போக வந்த வர்கள் எல்லோரும் கூட்டமாக கூடிவிட்டார்கள். நான் பெருமையாக சொன்னேன் இடோ பாருங்கள் இந்த வண்டி மெதுவாக நகரும் என்று சொல்லி, வண்டியில் உள்ள நெருப்பை ஊதுகின்றேன். உடனே அப்பு காமியின் அக்கா சின்ன நோனா, நான் ஊதுகின்றேன் என்று சொல்லி ஒரு ஊது குழலோடு வந்து நெருப்பை ஊதுகின்றாள், அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என்பதில் எல்லோருக்கும் ஆவல், சனம் கூட்டமாக் நெருங்கிவிட்டார்கள், நோனா நன்றாக ஆர்வமாக் ஊதுகின்றாள், நானும் இன்னும் நல்ல என்று ஊக்குவிக்கின்றேன். திடீரென்று பாரிய சத்த த்தோடு லக்ஸ்பிறே டின் வெடிக்க, சுடுதண்ணி எல்லோர்மீதும் பட, சனம் செய்வதறியாது விழுந்தடித்து ஓடினார்கள். கடைசியில் நோனா அக்கா ஆஸ்பத்திரியில், நானும் அப்புகாமியும் காட்டுக்குள் தலைமறவு.எங்களின் விசித்திரமான ஆராய்ச்சி இப்படி சோகத்தில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்த நாளை இன்னமும் சிந்தித்துப்பா ர்க்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்
fredag 20. oktober 2017
டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,
டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,
உலகத்தமிழர் பேரவைத்தலைவர் அருட்திரு இம்மனுவேல் அடிகளாரின் இலங்கை விஜயம் குறித்து தமிழ் மக்களிடையே கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எனது பதிவை இங்கே எழுதுகின்றேன்.முள்ளிவாய்க்காலில் கடுமையன போர் நடந்து கொண்டிருக்கின்றது, மே 18 திகதி பிரபாகன் இறந்துவிட்ட அரசு செய்தியுடன் போர் முடிவுக்கு வருகின்றது அதற்கு முன்னைய நாள் நோர்வேயின் தேசிய நாள் மே 17, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பிரமாண்டமான பேரணி தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படுகின்றது, அதற்கு உரையாற்ற அருட்தந்தை அவர்கள் ஓஸ்லோ வந்திருந்தார். அவரோடு அன்று போராட்ட நிகழ்வுகள் குறித்து நீண்ட நேரம் அவரோடு உரையாடினேன். அப்போது அருட்தந்தையின் உணர்வுகளை என்னால் துள்ளியமாக எடைபோட முடிந்தது. தேசியதலைவரின் கணிப்புக்கும், அவரின் மரியாதைக்கும் இன்றும் என்றும் அருட்தந்தை அவர்கள் உரித்தானவர் தான். அருட்தந்தை அவர்களை இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்வதை இலங்கை அரசு தடை செய்தது, ஏன் இந்தியா கூட அவரின் இந்திய விஜயத்தில் குறுக்கிட்டது. இப்படிப்பட்ட ஒருவர் இன்று கொழும்பில் இலங்கை அரசு மற்றும் அமெரிக்க தூதுவர்களோடு கைகுலுக்கி பேசுகின்றார் என்றால் இதன் பிற்புலத்தில் ஏதோ ஒரு நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்பது மட்டும் உறுதியாகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், சிங்கள பெளத்த மத பிரிவேனாக்களின் ஆதரவோடு தான் இலங்கை அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இலங்கையின் தேசியவாத உணர்வு, மாகாவம்ச போதனையுடன் சிங்கள இனவெறியாக உருமாற்றப்பட்டுள்ளது. நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வு எவரிடமும் இல்லை அது வளர்த்து எடுக்கப்படவும் இல்லை. பெளத்த மத தலைவர்களை எதிர்த்து, இலங்கையின் தேசிய நலனை முன்னெடுக்க எவரும் துணியவில்லை அதற்கான ஆளுமையும் அருகதையும் சிங்கள அரசியல்வாதிகளிடம் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென்றால் அது சிங்கள பெளத்த மத பீடத்தின் மனமாற்றதிலும், சிங்கள மக்கள் மீது ஏற்படும் ஒற்றுமை விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது. ஆயுத போராட்டம் தமிழ் மக்களிடம் சிங்கள அரசினால் திணிக்கப்பட்டது என்ற மாபெரும் உண்மையை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ளன அதன் விழைவாக தமிழ் மக்கள் கடுந்துயர் அடைந்த கதை சிங்கள மக்களின் காதுகளுக்கு சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. போர்குற்றம் பற்றிய விழிப்புணர்வு சிங்கள மக்களிடையே விதைக்கப்படவேண்டும் என்று அருட்தந்தை கொழும்பில் கூறியதை இங்கு மீண்டும் கோடிட்டு காட்டவிரும்புகின்றேன். சிங்கள மதபீடத்தின் கடும் போக்கில் இருந்து அது இறங்கிவரவேண்டும் அவ்வாறு வருவதன் ஊடாகவே இனப்பிரச்சினை தீர்வில் காத்திரமான முன் எடுப்புகள் சத்தியமாகும். கடும் போக்கில் இருந்து பெளத்த மதபீடம் இறங்கி வரவேண்டுமானல் அதற்கான சமிஞ்சைகளை தமிழ் தரப்பிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.அந்த வகையில் தமிழ் இனப்பிரச்சனையில் கத்தோலிக்க கிறிஸ்தவ அருட்குருக்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.அருட்திரு இம்மானுவேல் அடிகளார் முன்னோடியாக இருப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு இருக்கையில், தமிழ் தரப்பு சாதாகமாக மத தலைவர்கள் சற்று இறங்கிவந்து நல்லெண்ண சமிக்ஞைகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது, அதனையே சர்வ தேச சமூகமும் எதிர்பார்க்கின்றது. அதனை கருத்தில் கொண்டு அருட்குருவானவருக்கு கத்தோலிக்க உயர் பிடமான வத்திக்கான் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது. மற்றப்படி தேசியதலைவரின் கடிகாரம் அருட்குரு இம்மானுவேல் அவர்களின் இடது கையில் டிக் டிக் டிக் என்று அடிதுக்கொண்டுதான் இருக்கிறது, கூடவே அவரின் இதயமும் டக் டக் டக் என்று தமிழுக்காகா அடித்துக்கொண்டுதான் இருக்கின்றது அன்புடன் பேசாலைதாஸ்
torsdag 19. oktober 2017
என் நினைவில் நிற்கும் ஆசிரியை!
என் நினைவில் நிற்கும் ஆசிரியை!
என் பள்ளி வாழ்வில் பல ஆசிரியர்களை என்னால் மறக்கமுடிவதில்லை அவர்களிள் ஒருவர் தான் திருமதி ஜெகநாதன் ஆசிரியை, அவரின் கணவர் பேசாலை டின் மீன் தொழிற்சாலையின் முகாமையாளாராக பணிபுரிந்தவர். ஜெகநாதன் ஆசிரியை பேசாலைக்கு வந்தபின்புதான் வெற்றித்தாயின் அனுக்கிரகத்தால் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள்! அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், வெற்றி அன்னையின் அருளால் தான் ஒரு மகனை பெற்றெடுத்ததாக அவரே கூறுவதுண்டு. ஜெகநாதன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அதேவேளை ஒரு தாய்க்குரிய கருனை அவரிடம் எப்பொழுதும் உண்டு.தன் மாணக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்று அறிவுறை கூறுவதுண்டு. அவர் தந்த ஊக்கமே எனக்கு லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில் M.A பட்டம் படிக்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளித்தது என்றால் அது மிகையாகது! ஜெகநாதன் ஆசிரியை பார்க்கும் போதெல்லாம் மஞ்சள் குங்குமம் பொங்கும் மகா லட்சுமியை நினைவுக்கு கொண்டுவரும். அவர் எங்களுக்கு தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் படிப்பிக்கும் பாங்கு மிக நேர்த்தியானது. ஒருபோதும் பிரம்பை கையில் தொட்டதே இல்லை ஆனால் டீச்சர் பார்க்கும் ஒரு பார்வையே போதும், மாணவர்களுக்கு உள்ளூர வியர்த்து கொட்டும். எவ்வளவுதான் கண்டிப்பாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாக எங்களோடு உரையாடுவதுண்டு. எங்கள் வகுப்பிலே சகாயன் சில்வா என்ற குறும்புக்கார மாணவர் இருந்தார். அடிக்கடி ஏதாவது ஆங்கில வசனத்தை எடுத்துவிடுவான் அதற்கு உரிய அர்த்தம் அவனுக்கே தெரியாது. ஒரு முறை சகாயன் சில்வா, எமது சக மாணவியான மிரியம் குருஸுடன் வாய்த்தர்க்கம் செய்தான் அப்பொழுது திடீரென்று I don't care என்று ஒரு ஆங்கில வசனத்தை எடுத்துவிட்டான்.அப்பொழுது நண்பி மிரியம் அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று சகாயன் சில்வாவிடம் கேட்ட பொழுது அவன் மிகச் சர்வ சாதாரணமாக நான் ஒரு சாதாரண மனிதன் என்று சொன்னான். அவன் சொன்னதை நாங்களும் நம்பிவிட்டோம், அதே நேரம் பார்த்து வகுப்பறைக்குள் நுழைந்த ஜெகநாதன் டீச்சர் சாகயன் சில்வாவிடம் I don't care என்றால் அதன் அர்த்தம், நான் பொருட்படுத்தவில்லை என்று விளக்கம் கொடுக்க, உடனே சகாயன் சில்வா அதைத்தான் டீச்சர் நான் ஆங்கிலத்தில் சொன்னேன் என்று டக்கென்று பதில் சொன்னதும் டீச்சர் உட்பட நாங்கள் அனைவரும் குழுங்கி குழுங்கிச் சிரித்தோம்.பள்ளி வாழ்க்கையே வண்ணமயமான கனவுக்கலவைதான்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
அந்த நாள்!
அன்பர்களே! நம் ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பருவ வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஏக்கம் மனதுக்குள் குடி கொள்ளும் அந்தக்காலம் திரும்பவராதா! என்ற அந்த ஏக்கம் தான் அது! நான் என் கிராமத்தை விட்டு 1978 ஆண்டில் இருந்தே பிரிந்துவிட்டேன், குருமடவாழ்வு, பல்லகலைக்கழக வாழ்வு, பின்னர் இந்தியாவில் சில வருடங்கள் அஞ்ஞாத வாசம் ( ஒரு போராளியாக) பின்னர் ஐரோப்பிய புலம் பெயர்வு, இப்படியே வாழ்க்கை அலைக்கழிந்துவிட்டது! இருந்தாலும் என் கிராமத்தின் நினைவுகள் இப்பவும் பசுமரத்தாணி போல மனதில்,,,,, இப்போது இருக்கும் கிராமம் என் மனப்பதிவில் இல்லை, இருப்பதெல்லாம் 1978 ஆண்டுகளுக்கு முன்பிருந்த என் கிராமத்து பதிவுகளைகளைத்தான் இப்பவும் நான் மீட்டிக்கொண்டிருக்கின்றேன். ஆலமரங்கள் இருக்கும், ஊஞ்சலாடிக்கழிக்க நீள விழுதுகள் தொங்கும், அருகிலே குட்டைக்குளம் இருக்கும், அதிலே பனைமரக்குற்றிகளை கப்பல் என நினைத்து அதில் ஏறிக்குதிக்கும் சின்னஞ்சிறார்கள், ட்ரெக்டர் வண்டியாய், கத்தாளை, அயலை என ஏரளமாய் மீன் பாயும் என் அழகான ஊர் இப்போது இல்லை. அப்போது உறவுக்காய் வாழ்ந்த உள்ளங்கள் இப்போது இல்லை, இப்போது இருப்பதெல்லாம் வரட்டு கெளரவமும் ஏளனம் கலந்த உள்ளங்கள் நிறையவே என் ஊரில் உண்டு, அந்த ஓலங்கள் இப்போது எதற்கு? விசயத்துக்கு வருகின்றேன். என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு ஓணான் பல்லி கிளிக்குஞ்சு அணில் குஞ்சு இவைகளில் அலாதி ஆசை, மற்ற நண்பர்கள் இந்திய சாரம் சரசரக்க தெருவெல்லாம் பருவங்களை சுற்றிய காலத்தில், இப்படி நான்!
அப்போ நான் ஒரு லூசுதானே! இருக்கட்டும், அணில் குஞ்சு பிடிக்க பள்ளிக்குட ஆலமரதின் கீழ் முட்டி வைத்து தேங்காய் சொட்டு, மிளகாய் வாட்டி அத்ற்குள் வைத்திருந்தேன். அதனை காக்கா கஸ்பார் பார்த்துவிட்டான்! மணி அடித்ததுதான் தாமதம் கஸபர் ஓடினான் என்முட்டியை எடுப்பதற்கு, முட்டியும் கவிழ்ந்து இருந்தது, நான் காக்கா கஸபாரை துரத்துகின்றேன். களைப்பாய் ஓடிய கஸ்பார் ஒரே மூச்சில் முட்டிக்குள் கைவிட்டு இழுத்தான் ஒரு பெரிய பாம்பு அவன் கையில்! நல்ல காலம் பாம்பு அவனை தீன்டவில்லை, அப்படி நடந்திரிந்தால் காக்க கஸப்பார் அமரர் கஸ்பாராகி 45 வருடங்கள் கழிந்திருக்கும், நினைக்க இப்பவும் அலாதி ஆனந்தம் தான் அன்புடன் பேசாலைதாஸ்
அப்போ நான் ஒரு லூசுதானே! இருக்கட்டும், அணில் குஞ்சு பிடிக்க பள்ளிக்குட ஆலமரதின் கீழ் முட்டி வைத்து தேங்காய் சொட்டு, மிளகாய் வாட்டி அத்ற்குள் வைத்திருந்தேன். அதனை காக்கா கஸ்பார் பார்த்துவிட்டான்! மணி அடித்ததுதான் தாமதம் கஸபர் ஓடினான் என்முட்டியை எடுப்பதற்கு, முட்டியும் கவிழ்ந்து இருந்தது, நான் காக்கா கஸபாரை துரத்துகின்றேன். களைப்பாய் ஓடிய கஸ்பார் ஒரே மூச்சில் முட்டிக்குள் கைவிட்டு இழுத்தான் ஒரு பெரிய பாம்பு அவன் கையில்! நல்ல காலம் பாம்பு அவனை தீன்டவில்லை, அப்படி நடந்திரிந்தால் காக்க கஸப்பார் அமரர் கஸ்பாராகி 45 வருடங்கள் கழிந்திருக்கும், நினைக்க இப்பவும் அலாதி ஆனந்தம் தான் அன்புடன் பேசாலைதாஸ்
tirsdag 16. mai 2017
எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்
எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்
அம்மா
இன்னுமொரு பிறவி இருக்குமேயானால்
என் தாயின் செருப்பாகப் பிறப்பேன்.
தேய்வதற்காகவல்ல என்னைச் சுமந்தவளை
ஒரு முறையேனும் சுமப்பதற்காக.....
இன்னுமொரு பிறவி இருக்குமேயானால்
என் தாயின் செருப்பாகப் பிறப்பேன்.
தேய்வதற்காகவல்ல என்னைச் சுமந்தவளை
ஒரு முறையேனும் சுமப்பதற்காக.....
சொர்க்கம்
தாயின் கருவறையை பார்த்தபின்பு முடிவுக்கு வந்து விட்டேன் இருட்டாய் இருப்பது நரகம் மட்டுமல்ல சொர்க்கமும்தான்
புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன் ... ......அம்மா
அம்மாவுக்கென்று தனியாக கவிதை வேண்டாம் அன்பாகப்பழகிப்பார் அம்மாவே கவிதைதான்
உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வம்
அம்மா........
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வம்
அம்மா........
உயிர் எழுத்தில் அ எடுத்து
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர்மெய் எழுத்தில் மா எடுத்து
அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து அம்மா
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர்மெய் எழுத்தில் மா எடுத்து
அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து அம்மா
Abonner på:
Innlegg (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...

-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...