tirsdag 23. januar 2018

கண்ணீர்

கண்ணீர்
ஆனந்தமே கொண்டாலும்
அழுகையுமே என்றாலும்
கண்களில் கண்ணீர் கசியுமே//
கண்ணீர் சிந்தி சிதற
கண்ணோரம் கரையுண்டு
கண்ணீர் சிந்தும் மக்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கடல் நீர் முட்டி மோத
கடற்கரை உண்டு
கடலில் வாழ்வுக்காக
தத்தளிக்கும் மீனவர்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கண்ணோரம் ஆயிரம் கதைகள்
பேசுமே கண்ணம்மா !
கதைகள் முற்றிப்போனால்
மனது விசும்பி ஏங்குமே //
கண்ணகியின் கண்ணீர்
மதுரையை எரித்தது
ஒற்றை கால் சிலம்பையும்
அறுத்து எறிந்தது //
கற்காலம் தொடங்கி
தற்காலம் வரை கண்ணீரின்
மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்
மனித வாழ்விலே தொடர்
கோடுகளே தோழமைகளே //

இவண்.
CROOS.A.H
Amburose Croos Roy

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...