வாடியடி வசந்தக்காற்று..
சதையைக் கூர்முனை கிழிக்க
பிண்டங்கள் வெயிலில் பிரளுது,
இங்கு நாற்றங்களே நறுமணத் தென்றல்,
உப்புத்தூளை உரசி உரசி
வெள்ளை பூத்த கைகள் என்று வாடியடியே
இவளின் வசந்த லோகம்.
மீனுக்கு இரையான புழுவைப் போல்
நெழிந்து செல்லும் வாழ்க்கை இது,
வாரக்கடைசியின் லோன் காசு,
வறுமையிலும் பிள்ளைக்கு வசதிக்கட்டணம் ,
பலசரக்குக் கடை பாக்கி என்று
பொருளாதார நெருக்கடிக்கு
பஞ்சமில்லாமல் பயணிக்கிறாள்.
வலைகுருகிற்று என்டதும் திண்ட
சோத்துக்கும் விடுமுறை கொடுத்து
காக்காய் குழியலால் கை நனைத்து
கரைக்கு விரைகிறாள், வலை இழுத்தவனுக்கு
பிளேன்டி, சம்மாட்டிக்கு அட்டப்பாண் என்று
வயிற்றைச் சுருக்கி வேலை பார்த்தா தான்
வீட்டு அடுப்புல மரக்கறி வேகும்.
வெந்த சோத்த வறுத்து திண்ணும்
நாட்டுல வெயில் சூட்டுல வெந்தவ
வேதனை கணக்கில இல்லாத கருவாட்டுக் கூடைதான்.
கணவரின் நண்டு வலை பாசி என்று
நாலு நாளா தொழிலும் இல்லை ,
மால் கயிறு வாங்கி வர அடகுக் கடை போனதால
வலை தட்டி சேத்த காசு வட்டி கட்டியே கரைஞ்சு போச்சு.
மாசம் இரு கல்யாணம், மடிச் சீலைக்கு
பணம் வேணும் ஞாயிற்று கிழமை ஆச்சுதுனா,
இறச்சி கறி காச்ச வேணும், பங்கு காசு பிரிச்சதால
சீட்டு காசு கட்ட வேணும் தோட்டு சுரை துலைஞ்சதால
வேப்பங்குச்சி சொருக வேணும், வாழ்க்கை சுமை குறைக்க
இவ கடகரைக்கு போனதால பாச சுமை குறஞ்சிடுச்சு,
குடும்ப பிழவு தொடங்கிடுச்சு..
கடல் தாய் அங்க, பெத்த பிள்ள இங்க,
பாசக் குளத்தில வறுமைக் கல் எறிஞ்சு
அன்பு தெளிவ குழப்பினதால் பிரிவு அலை விரல் நனைக்க
பொடி நடையா குடை பிடித்தாள், மழை நனைத்த கருவாட்டுக்கு .....
கவிதையின் காதலன்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
இந்த செய்யுள் என் சிந்தையில் வரும் பொழுதெல்லாம், எனது பெசாலை மாகாவித்தியாலைய நினைவுகள் கூடவே தொற்றிக்கொள்ளும். அப்பொழுதெல்லாம் மன்னார் மா...
Ingen kommentarer:
Legg inn en kommentar