fredag 26. januar 2018

மண்முகட்டில் மருந்து பூச வா!

 # மண்முகட்டில் மருந்து பூச

பாலைவனத்தின் கள்ளிக்காடு நான்,
பாசம் கற்று வேரூன்றியவன் இன்று
வறட்சி போக்க முத்த மழை கேட்கவில்லை, சருகுப் புண் ஆற்ற வார்த்தைப் பனி பொழியக் கேட்கிறேன்.

 மண் மாதாவின் மடியில்
மயிரிழையில் ஊசலாடும்
காதல் அடிமையைப் பார்!
என் ஏக்கம் என்னவென்றாவது கேள் !
ஓ உன்னத புராணம் இசைக்கும் காதல் துளிர் விட்ட சக பேரீச்சைகளே..!
சாகத்தான் வழியில்லை..
 வாழ என்னவள் வாசலுக்கு,
வசந்தக் காற்றையாவது
அனுப்பி வையுங்கள்!

உதிரம் சுட்டு, உண்டி சுருங்கிடும்
வறுமை வாசி நான்..,
காதல் கொஞ்சம் கடனாய் ஈந்தாள்
கால் வயிரேனும் கழுவிக் கொள்வேன்!
கட்டியணைத்த பொழுதுகள்
கரை தட்டிய மணல்மேடாய் கற்சிலையானதே!
என் மணல் மேட்டுப் புழுதிக் காற்றில் மல்லிகை வாசம் பூக்காதா?
என் கள்ளிப் பூவைச் சுவைக்க
என் கன்னிக் காதலி துணிய மாட்டாளா?

 ஒட்டகத்தின் தாடைகள்
சேர்த்து வைத்த நீர்
கெட்டுப் போனதுண்டோ? இவை போல்
என்னுள் ஒட்டியுள்ள காதலும்
உன் ஒன்றை வார்த்தைக்காய்
செத்திடாமல் வாழுதடி..!

மேகங்கள் என்னை நிழலிடையில் கொடுத்தனுப்பிய கடிதங்கள்
உன் மீது என் வலிகளைத்
தூவாமல் போனது ஏனடி ?
இன்று ஏக்கக் குறிகள் தாக்க,
பாலைத் தென்றலின் ஏழனச் சிரிப்பில்
என் தூக்கம் கொள்ளை போனதே!

காதலில் கரைந்த இம் மண்முகட்டுத் தாவரத்தை, ஈற்றில் சருகான பின்
அள்ளிப் போடவாவது தரிசனம் தா! அதுவரை என் கள்ளித் தோட்டத்தின்
தேகப் புண்கள் வெயிற் காற்றை
மருந்தாய் பூசட்டும்...!

கவிதையின் காதலன்..

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...