onsdag 24. januar 2018

கற்பிழந்தவன் கல்லறை கேட்கிறேன்


கற்பிழந்தவன் கல்லறை கேட்கிறேன்


ஏன் செல்கிறாய் எனைக் கொல்கிறாய் 
ஆண் காதலில் துகில் கொள்கிறாய் 
ஆனாலுமே வதை செய்கிறாய் 
ஆகாததை அமிர்தென்கிறாய்

மென்மையைச் சீண்டித் துகிலுரித்தாய் - 
மெளனப் புன்னகை தந்தேன்.
உள்ளுணர்வை முள்கம்பி கொண்டிழுத்தாய் - 
குருதியிலும் கருணை சொரிந்தேன்.

தாயைப் பழித்து காதல் கோடு கிழித்தாய் - 
அழுதும் முகம் மலர்ந்தேன்.
காதலைப் பிழிந்து சாயம் வெளுக்கிறாய் - 
காய்ந்தும் சருகாய் உடன் அமர்கிறேன்.

வார்த்தை ஒறுத்து தனிமை செய்கிறாய் - 
மெல்லிசை நுகர்ந்து உன் திசை படிக்கிறேன்.
இதழ் மொழிகளில் வெறுப்பை உமிழ்கிறாய்- 
இலை பட்ட நீராய் துளிர் விட்டு நிற்கிறேன்.

வாழ்கைக்காக வாழ்வை வெறு என்கிறாய்- 
இலக்கை கழற்றி இதயம் கேட்கிறேன்.
ஊடலில் விருப்பில்லை தள்ளி நில் என்கிறாய்- 
காமக் களத்திலும் வேடிக்கை பார்க்கிறேன்.

கடைசி நொடி வரை காதல் பொய் என்கிறாய் - 
உடல் கிழித்து என் உள்ளத்தை காட்டினேன்.
வேலை அற்ற நீ வெறும் பயல் என்கிறாய்- 
தேடல் களத்தில் நான் முனைவன் என்கிறேன்.

சிதைக்கிறாய் , உதைக்கிறாய், வலிகளை தாங்கினேன். 
நற்பை பகைத்தும் உன் கற்பை பற்றினேன்.
கடைசியில் சொல்கிறாய் வக்கற்றவனுக்கு 
வாழ்க்கை எதற்கென்று  இழப்பினில் இதயம் வெடித்து
கற்பிழந்தவன் நான் கல்லறை கேட்கிறேன். 

கவிதையின் காதலன்    பேசாலை

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...