torsdag 30. november 2017

இந்த பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது?

இந்த  பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது? 

என்  இனிய உறவு களே! எனது கேள்வி உங்களுக்கு ஆச்சரி யமாக இருக்கின்ற தா?  இது தெரியாதா? வேறு யாருக்கு, பேசாலை மக்களின் உழைப்பிலே கட்டப் பட்டதால் இது பேசாலை மக்களுக்கு சொந்தமானது என்று நீங்கள் சொல்லக்கூ டும்! அதுதான் தவறு என்று நான் சொல்கின்றேன். திருச்சபைக்கு என்று ஒரு சட்டம் உள்ளது அதாவது The canon law of the Catholic Church (Latin: jus canonicum) என்று சொல்வார்கள். அந்த சட்டத்தின் பிரகாரம் எமது பேசாலை வெற்றிநாயகி ஆலையம் திருச்சபைக்கு சொந்தமானது. அதாவது மன்னார் மறை மாவட்ட பரிபா லகராக இருக்கும் ஆயருக்கும், அவரது நேரடி அதிகாரத்துக்கு உட்பட்ட பேசாலை பங்கு குருவே பேசாலை வெற்றிநாயகி ஆலையத்தின் நேரடி உரிமையாளர் ஆவார் ஆயினும் இர ண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின் இந்த உரிமைகளும் அதிகாரங்களும், பங்கு மக்கள் ஊடாக, பங்கு குரு செயல்ப டுத்தும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதால் ஆலைய‌ அதிகாரங்கள், பங்கு சபையால் குருவோடு சேர்ந்து பரிபாலி க்கப்படுகின்றது. இதை இங்கு நான் ஏன் பதிவு செய்ய முய ற்ச்சிக்கின்றேன் என்றால் நோர்வே நாட்டில் ஓஸ்லோ மற்றும் பேர்கன் பங்கு சபைகளில் நான் செயலாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இங்கே பங்கு சபையானது பொது சபையின் உத்தரவாத்துடன் ஒரு நிறைவேற்று சபையாக செயல்படுகின்றது. பொதுக்கூட்டத்தில் தமது செயல்பாடு களுக்கான கேள்விகள் விமர்சனங்களுக்கு அது தார்மீக பொறுப்போடு விளக்கம் அளிக்கின்றது.
                                                                                      பங்கு சபைக்கு என்று ஒரு யாப்பு இருத்தல் அவசியம், அந்த யாப்பின் ஒவ்வொரு சரத்தும் பொதுமக்களின் அனுமதியுடன், அவர்களது அபிப்பி ராயங்களை உள்வாங்கி உருவாக்கப்படல் வேண்டும். இந்த யாப்பை உருவாக்க ஒரு யாப்பு நிர்ணய சபை இருக்கவே ண்டும். அந்த நிர்ணய சபையில் கல்விமான்கள், எமது பங்கை சார்ந்த குருக்கள், கன்னியாஸ்திரிகள், பொது நிலையினர் இப்படி பலதர்ப்பட்டவர்கள் அங்கத்துவம் பெற்று அவர்கள்து ஆலோசனை பெறப்படவேண்டும். ஆக மொத்தத்தில் பங்கு சபையின் நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்பதை ஜனநா யக அடிப்படையில், அறிக்கைகள் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும். பங்கு சபையின் நிர்வாகம் மற்றும் பங்கு குரு மீது அண்மையில் பல விமர்சனங்கள் முக நூலிலே பதி வானதினாலே இதை நான் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்ட து. நல்ல விமர்சனங்கள் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதுதான் ஆனால் அதுவே வீண் குழுப்பங்களை தோற்றுவிக்கக்கூடாது. எனவே நமது ஆலையம், நாம் என்ற உணர்வுடன்( We feeling) செயல்படுவோம், இந்த‌ நாம் என்ற உணர்வுத்தத்துவம் We feeling philosophy பற்றி லண்டன் புறுனல் பல்கலைக்கழ்கத்தில் நான் எழுதிய ஒரு ஆய்வு கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்ப த்தில் பதிய விடுகின்றேன். 
அதுவரை அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...