mandag 20. november 2017

நமது ஞான மேய்ப்பர்கள்!

நமது ஞான மேய்ப்பர்கள்!

என் அன்பிற்கினிய பேசாலை உறவுகளே! நாம் வெற்றி அன்னையின் பிள்ளைகள், எமது ஆலையத்தில் நாம் மிகப்பெ ரிய பற்றுதல் கொண்டுள்ளோம். எமது பங்குச் சபை மன்னார் மறைமாவட்டத்தில் நிதிவளம் பெருகிய  ஓர் பங்குச்சபை, இந்த பங்கு சபையிலே நிதி நிர்வாகம் என்பது பெரும் பிரச்ச னைக்குரிய விடயம் தான்.  பங்கு நிதியிலே ஒரு தவறு நட க்கும் போது வெறுமனே பங்கு குருவை குறை சொல்வதும், அவரிடம் காரனம் கேட்பதும் உண்மையில் ஜதார்த்தம் இல்லை. 

                                          ஒருவேளை பங்கு சபை நிதியை ஒருவர் முறைகேடாக பாவித்திருந்தால் அதனை வெளிப்படுத்து தல் ஒரு குருவானவரின் கடமை இல்லை. அவருக்கென்று சில தார்மீக பொறுப்புகள் இருக்கின்றது, அதைவிட பாவங்கள், தவறுகள் இது தொடர்பாக கத்தோலிக்க குருவானவருக்கெ ன்று சில நடமுறைகள் உள்ளன. அதனை நாம் ம‌திக்கவே ண்டும். உதாரணத்திற்கு பங்கு பணத்தை முறைகேடாக பாவி த்த ஒருவர், தனது தவறை தனிப்பட்ட ரீதியில் குருவானவரு க்கு தெரிவித்தால் அது தொடர்பாக குருவானவர் மெளனம் காக்கவேண்டியவராக உள்ளார் என்பதனை மறக்கவே ண்டாம். அதனை அவர் மீறுவாராக இருந்தால் அவர் பாவங்க ளை மன்னிக்கும் ஒரு குருவின்  அதிகாரத்ததை கேள்விக்குறி யாக்குகின்றார். 

                                    எனவே ஒரு பங்கு குருவை மன நோகடிப்பது நல்ல செயல் அல்ல, அப்படியானல் பங்கு நிதி நிர்வாகத்தை எப்படி பரிசீலிப்பது என்ற நடமுறை பிரச்சனை எழுகின்றது அல்லவா? அதற்கு எனது ஆலோசனை,  எமது பங்கிற்கு என்று தனியான ஒரு இணையத்தளம் இருக்கவேண்டும் அதில், நிதி துறைக்கென்று தனியான ஒரு பகுதி அமைக்கப்படவேண்டும், அந்த நிதி துறையை பேசாலை பங்கு மக்கள் மட்டும் பார்வை யிடுவதற்கான ஒரு முறையை அமுல்படுத்தவேண்டும்,  அவ ர்கள் ஏற்கனவே இணைத்தளத்தில் தங்களை பதிவு செய்து அதற்கான இரகசிய குறியீடை பெற்றுக்கொள்ளவேண்டும், நான் இங்கு ஒரு சர்வதேச அமைப்பின்  ஊடகத்துறைக்கு பொறுப்பாக இருந்தவேளை, எமது பங்கு மகன் அமலி வேலா யுதத்தின் மகன் அந்த தொழில் நுட்ப முறையை நோர்வேயில் இயங்கும் ஒரு நிறுவணத்திற்காக செய்திருந்தார் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன், கணனியில் பல வல்லுணர்கள் எமது ஊரிலே இப்போது இருக்கின்றார்கள் அவர்களின் உதவியை நாடலாம்.
                                                                          இணையத்தளத்தின் நிதி துறையில், பங்கு சபைக்கு வரும் அத்தனை வருவாய், செல வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்,   அதற்கான கேள்விகள் கேட்பதற்கான Feed back முறை அங்கு இருக்க வேண்டும். இதனைவிட்டு பொதுச்சபை கூடி, ஒரு குருவா னவரை நடுவே நிறுத்தி கேள்வி கேட்டு அவமானப்படுத்தல் முறையான செயல் அல்ல, தகவல் அறியும் சட்டப்படி பங்கு மக்களுக்கு பங்கு நிதியில் என்ன நடக்கின்றது என்பதை பங்கு சபை அறிவிக்க க‌டமைப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு தகவல் பரிவர்த்தணை சிறப்பக இருக்குமேயானல், ஊழல், மோசடிகள் என்பன நடக்கவாய்ப்பே இல்லை. மேலும் இணை யத்தளம் ஊடாக கத்தோலிக்க இணைய வானொலி, வத்தி க்கான் வானொலி இவைகளை இணைத்து ஆன்மீகத்தில் முன்னேற முடியும் அதற்கான உதவிகளை நான் எப்பொழும் செய்ய தயாராக உள்ளேன்.
அன்புடன் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...