torsdag 17. mai 2018

ஒத்தை நாவல் மரம்




ஒத்தை நாவல் மரம்.....
Emat Croos

பேசாலையின் தெற்குப் புறம்
செல்லும் வீதியின் வலப் புறம்
உயர்ந்து நிற்கும் தனிமரம்
குறிப்புக் காட்டும் ஒத்தை நாவல் மரம்.முளைத்து நிற்கும் நாம் பார்க்குமிடம்
இருந்தும் பெற்றதில்லை அவை சிறப்பிடம்
ஒத்தை நாவல் போல் தனியிடம்.
காய் கனி தந்திருந்தது பின்னைய நாளில்
மறுப்புச் சொல்வதற்கில்லை இவ்விரு நாளில்
முதிர்ச்சியால் பலன் ஓய்ந்தது இன்றைய நாளில்.
களைப்பாறும் அதன் நிழல் வாட்டம்
எடுத்த விறகை ஒன்று கூட்டும்
தலையில் சுமந்து வரும் மயிலாட்டம்.
கூடை மீனைத் தோளில் தாங்கி
தண்ணித்தாளை நின்று வீடு நோக்கி
வழியில் ஓய்வெடுப்பார் இதில் தங்கி.
ஊரில் இருந்து பார்க்கையிலே
இதன் இருப்பிடமோ அடர்ந்த காட்டினிலே
நம் கண்களுக்குத் தெரியும் தூரத்திலே.
ஊரும் பெருத்தது நாலா திக்குமாய்
குடிமனை காணிகள் அமைந்தது நெருக்கமாய்
ஒத்தை நாவலும் தெரியுது பக்கமாய்.
அதனுள் அழகிய கூடமைத்து
புனித அந்தோனியார் சுரூபம் வைத்து
வேண்டுதல் செய்தோம் அவர் செயல் நினைத்து.
வீழ்த்தியது அதை உடைத்துத் தள்ளி
பின் வாங்கவில்லை அதன் நிலையை எண்ணி
உருவாகியது அவ்விடம் புதிய பள்ளி.
பேய் பிசாசு அலையுதென்பார் சிறியார்
பில்லி சூனியம் நடக்குதென்பார் அறியார்
யாவையும் அடக்க வருகிறார் புனித அந்தோனியார்.

நம்ம காட்டில் உண்டு பல நாவல் மரம்
அதிகம் பூத்திருந்தது முன்னைய நாளில்
விறகெடுக்கும் பெண்கள் கூட்டம்
காவு தண்டி கூடை தூக்கி
முன்னைய ஆண்டு காலத்திலே
காலங்கள் கடந்தது வேகமாய்
ஒத்தை நாவல் குடைந்தெடுத்து
காலத்தின் சூது கவ்வி
முனிப்பாய்ச்சல் உண்டென்பார் பெரியார்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...