tirsdag 1. mai 2018

#வைகாசி_01

ழ,ல,ள கரங்கள் இணைந்து
தொழிலாளி ஆனானே !
சிகரங்களும் அண்ணார்ந்து பார்க்க வானாளாவி நின்றானே !
தகரங்களிலும் தங்கத்தை
அழகுற வார்ப்பானே !
முக்காலத்திலும் ஓய்வின்றி
உழைத்து ஓடாய் ஆனானே !
திரைகடலோடியும் தேனான
திரவியங்கள் சேர்ப்பானே !
திறனற்ற நிலத்தையும் உழுது
பலன் கண்டு களிப்பானே !
ஆடிப்போன வீதியிலும் வாகனத்தை
ஆடாது செலுத்திடுவானே !
வாழ்வில் தீராத துன்பங்கள்
கண்டாலும் துவளாது துடிப்பாயிப்பானே !

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...