lørdag 7. april 2018

காதல் கவிதை கேட்கிறேன் ...

கற்பனை தீண்டாமல் தொகுத்தவை என்று நிராகரிக்கப்பட்ட காதல் புத்தகம் ஒன்றை ஆண்டுகள் சில கழித்து தூசு தட்டிப் பார்த்த போது .....

காதல் கவிதை கேட்கிறேன் ...

உள்ளத்திடம் - அவை

ஒப்பாரியில் தீட்டிய 
என் காதல் ஏட்டை,
படி என்று தூக்கிப் போட்டது !

கிழிந்த தாள்கள்,
என் எண்ணச் செல் அரித்ததில்
கிழிந்ததோ ?
எழுத்துக்கள் சுமந்த காயங்களில்
குருதி கசிந்ததால்
பாழ்பட்டுப் போன தோ ?
நீ போட்ட வடுக்கள்
வீங்கி உரசல் கொண்டதில்
தாள்களை நசுங்கியதோ ?
உன்னால் நான் வெந்த,
ஈரமில்லா கனங்களைத் தானே
ஏட்டில் பதித்தேன் !
எப்படி பசை போல் ஒட்டிக் கொண்டது?
ஓ ! அவை என் அழுகையை உறுஞ்சியதால் வந்த விளைவுதானா!
பக்கங்களை புரட்ட முயல்கிறேன்,
தாள்கள் பொசுங்கி - கையில்
வாக்கிய வடுக்களை பதிக்கிறதே !
சுண்டு விரலால்
ஒற்றையின் மத்தியை
அழுத்தி புரட்டுகிறேன் !
என் இதயத்தின் நாளங்களில்
படிந்த காதலை, விரல்களால்
சுரண்டிய உணர்வாய் வலிக்கிறதே !
மெதுவாய் எச்சிலை விழுங்கி
வரிகளில் புதைகிறேன்!
அவளெனும் மேகம்
என்னில் நிழலாட
உருகிக் கரைகிறேன்!
நான் எழுதிய விடைகளின் வினாக்களை இன்று தான் இரை மீட்கிறேன்!
பழமை என்னை
வெட்கித் தெளியச் செய்கிறது...!
அவளின் சந்திப்புக்களில்
நகைத்து நானம் கொண்டது
நானா? அவளா ?
நானியது நான்!
நகைத்தது அவள் !
அழுகை ஆயுதம் அதிகம் ஏந்தியது
நானா ? அவளா ?
அழுகையை ஏந்தியது நான் !
அதை ஆயுதமாக்கியது அவள் !
முத்தத்தில் புதைகையில்
முகம் சுழித்தது
நானா ? அவளா ?
முத்தத்தில் புதைந்தவன் நான்!
முகம் சுழித்தது அவள்!
காதல் வலிகளை
வார்த்தையால் உணர்த்தியது
நானா ? அவளா ?
காதலை உணர்ந்தது நான் !
வலிகளை உணர்த்தியது அவள் !
பிரிவை மறந்து வாழ்வேனோ ?
வினவியது,
நானா? அவளா ?
பிரிவை வினவியது நான் !
என்னை மறந்து வாழ்வது அவள் !
செருப்பாணியாய் தைத்த
விடைகளில் மீளாது
ஏட்டை மடக்கினேன்.
ஆழி நுரையாய்
ஆயிரம் கேள்விகள் என்னுள் !
என் புராண ஏட்டின் எழுத்துக்கள்
என்னை முகர்ந்து வார்த்தவை
என்றல்லவோ நினைத்தேன்!
அச்சில் பிம்பம் மாறி நிற்குதே !
ஐயோ!
என் பக்குவப் பிழைகளுக்கு
சவுக்கடி கொடுத்தல் அறமே !
கையறுத்து காதல் வடித்த கறைகள்,
உக்கிப் போயிருக்கும்
என்றல்லவா எண்ணினேன் !
அவை தேகத்தில் தழும்பாகவும்,
உள்ளக் குழியில் எலும்பாகவும்
பொறுத்து நிற்கிறதே!
மறதிகள் ஒட்டிக் கொண்ட தேகத்தில் நினைவுகள் மட்டும் மழுங்கடிக்கப் படவில்லையே!
ஐயகோ !
காதல் அமானுஸ்ய பொக்கிசமே !
# கவிதையின் காதலன் பேசாலை

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...