torsdag 19. april 2018

நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி)

நம்ம ஊரு இலுப்பையடி...
(இலுப்பை மரத்து அடி)

நம்ம ஊரு இலுப்பையடி
சொல்லும் பல சேதியடி
கடந்து வந்த பாதையடிஅதை திரும்பிப் பார்த்தால்நியாயமடி!வரவேற்பு அன்னை சுருபமடி
எம்மை அழைப்பாள் கையை விரித்தபடி
வருவோர் போவோர் நின்றபடி
அதை வணங்கிச் செல்வார்
முறைப்படி!
பாட்டி கதைகள் சொல்லும்படி
முன்னர் இலுப்பை மரமொன்று நின்றதடி
அதன் காரணம் கருதிக் கொண்டபடி
பின்னர் இலுப்பையடியென பெயர் பெற்றதடி!
வரலாற்றுக் குறிப்பில் உள்ளபடி
நம்மவர் ஒன்று சேர்ந்த படி
உயர் மக்கள் வரவை ஏற்ற படி
மகிழ்ந்து செல்வார் அழைத்த படி!
ஈர்பத்து வருடங்களின் முன்னமடி
இவ்விடம் காவல் இடப்பட்டு இருந்ததடி
ஊரின் கண் நாம் வாழ்ந்த படி
நம்மவர் பட்ட துன்பமோ கோடியடி!
வெற்றி அன்னை வரும் பாதையடி
தடைபட்டு போனது பல வருடமடி
அன்னையின் பாதம் பட்டதடி
இவ்விடம் புத்துயிர் மீண்டும் பெற்றதடி!
பழைய சந்தைக் கட்டிடம் உடைந்ததடி
மின் தரும் நிலையமும் தகர்ந்ததடி
பல கடைகள் பாழ் அடைந்ததடி
இருந்த இலுப்பை மரமும் வீழ்ந்ததடி!
இன்றைய நிலையில் உள்ளபடி
பல வர்த்தக நிலையங்கள் இயங்குதடி
புதிய நூல் நிலையமும் அமையுதடி
மீண்டும் பரபரப்பு இவ்விடம் ஆகுதடி!
எத்தேசமும் வாழு ஊர் கடந்தபடி
எத்தனை நாள் கழி நீ இஷ்டப்படி
ஊர் திரும்பும் வேளை சிரித்தபடி
உன்னை வரவேற்கும் நம்ம ஊரு இலுப்பையடி!
சொர்க்கமே என்றாலும்
நம்ம ஊரப் போல வருமா?
18/4/2018

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...