tirsdag 28. mars 2017

வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!

வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!


வாடைக்காற்று தன் மூர்க்கத்தை இழந்து, மெல்ல வீசிகொண்டி ருந்தது. சித்திரை தொடங்கிவி ட்டாலே வாடைக்காற்று தன்  மூர்க்கம் தணிந்து, வரவிருக்கும் சோழக அத்தானுக்காக காத்திரு க்கும். வாடைக்காற்று தன் ஆக்ரோசமெல்லாம் இழந்து மெல்ல வீசுகின்ற போது, கரை யோர மக்கள் மனதிலும், அவர்க ளின் உடலிலும் இனம் புரியா சோர்வு தொற்றிக்கொள்ளும். தென்னை வட்டுக்குள், நிழலுக்காக உட்கார்ந்த பெண் குயில், ஏதோ ஒரு தவிப்பில் தன் இணையை கூவியழைக்கின்றது. மிக நீண்ட பொழுதாய் தன் இணை தேடி அலைவதைப்போல அதன் இனிய குரலில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியது. அந்த குயிலின் குரலை கேட்க மீராவின் கண்களில் கண்ணீர் சுரந்து அவளின் பட்டுப்போன்ற மிருதுவான கண்ணங்களில் உருண்டன. கூடவே அவள் எண்ணங்களும் சோகத்தை அடை காத்தன. " மா பாவி இவன்இப்படி செய்துபோட்டானே, ஆண்கள் தன் காதலை வெளிப்படுதினால், பெண்கள் அதனை நிராகரிப்பதை அவமானமாக கருதும், இந்த ஆண் ஆணவப் போக்கை, கடவுள் எப்போதுதான் ஆண்களின் மனதில் இருந்து நீக்கப்போகின்றாரோ? ஒருவேளை கடவுளும் இதனை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கின்றாரோ,,, "  மீராவின் மனம், அவள் எண்ணங்களோடு  போராடியது
                                          ஆத்திதன் அவனை ஆதி என்றுதான் ஊர்க்காரர்கள் அழைப்பார்கள். கட்டழகனாக இருந்தாளும், ஊர் சுற்றும் கட்டாக்காலி அவன். அழகான பெண்களுக்குப் பின்னால் தெரு நாய் போல அழைவது, அவன் இயல்பு. கொஞ்சகாலம் அவன் மீராவை வளைய வளைய சுற்றித்திரிந்தான். மீராவோ, அவன் காதலை அடியோடு வெறுத்தாள், அவன் சேட்டைகள் பொறுக்கமா ட்டாள் மீரா ஊரில் உள்ள அருட்குரு ஒருவரிடம் விசயத்தை சொல்லி, ஆதியின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். காலங்கள் உருண்டன. ஆதி வன்னியில் ஒரு அகதி பிள்ளையோடு தொடர்பு கொண்டு வன்னிக்கே போய், அங்கே இருந்துவிட்டான். மீராவுக்கு பெற்றோர்கள் மட்டக்களப்பில் இருந்து நல்ல படித்த பையனை கல்யாணம் செய்துவைத்தார்கள். மீராவை பெண்பார்க்க வந்த இடத்தில் ரமேஸ் மீராவின் அழகில் மயங்கி சீதனம் எதுவும், வேண்டாம், மீராவுடன் இந்த ஊரிலேயே வாழ்வேன் என்று, ஒரே அடியாக சொல்லிவிட்டான்.பட்டதாரியான ரமேஸ், வங்கியில் மேலாளராக வேலை பார்த்தவன் மீராவுக்காக வேலையில் இடம் மாற்றம் கேட்டு, மீராவின் ஊருக்கே வந்துவிட்டான். மீரா ரமேஸ் இல்லறவாழ்வு இனிமையாக நகர்ந்தது.

                                                                           இந்தியாவின் உதவியுடன் வீட்டுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலம் அது, ரமேஸ் வீட்டு திட்டத்திட்டங்களின் பணிப்பாளராக அவனது வங்கியால் நியமிக்கப்பட்டிருந்தான். ஊரில் உள்ளவர்களின் படிவங்களின் தன்மைக்கு ஏற்ப, ரமேஸ் வீட்டுத்திட்டத் திற்கான கடனையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தான். ஆதித்தனும் வன்னியில் இருந்து, குடும்ப மாக அவ்வூருக்கு வந்திருந்தான். எல்லோரையும் போலவே ஆதியும் வீட்டு திட்ட கடனுக்காக மனுச் செய்திருந்தான். ஆனால் அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரனம், ஆதி, வீட்டுத்திட்டத்திற்காக மனுப்பண்ணின காணி, முருகன் கோவிலுக்கு சொந்தமானது என காரனம் காட்டி, வேறு ஒரு சொந்த கானியை சமர்ப்பிக்கும் படி கேட்டு, ஆதியின் கடன் விண்ணப்பம் ரத்தாகி இருந்தது, இது மீராவின் கணவனின் திட்டமிட்ட செயல் என்றும், மீரா சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்குகி ன்றாள் என்று தனக்குள்ளே கொதிப்படைந்தான் ஆதி.

                                                                        ஆத்திரம் கொண்ட ஆதி, நேராக வங்கிக்கு சென்றான். ரமேஸிடம் கடன் விண்ணப்ப‌ம் ரத்தாகியது தவறு என்றும், ரமேஸும் அவன் மனைவியும் தன்னை பழி வாங்குகின்றார்கள் என்றும், ரமேஸின் மனைவி தனது முன்னாள் காதலி என்றும், தனக்கும் அவளுக்கும் தொடர்பு இருந்தது என்றும், நான் அவளின் காதலை நிராகரித்தமையால், தன் கணவனின் அதிகாரத்தை தவறாக பயண்படுத்தி தன்னை பழிவாங்குவதாக சத்தமிட்டு வங்கியில் கத்தினான். வாடிக்கையாளர்கள், அலுவல ர்கள் மத்தியில் மீராவை பழி சுமத்துகின்றானே என எண்ணி, ரமேஸ் தலை குனிந்து நின்றான்.
                
                                                                           அன்று வீட்டுக்கு திரும்பிய ரமேஸ், மீராவிடம் முகம் நிமிந்து பேசவே இல்லை. சோர்ந்து போயிருந்தான்.
கையில் காபியுடன் வந்த மீரா " என்னங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க, தலை வலியா,, மாத்திரை ஏதாச்சும்,,,,," என்று இழுத்தவளை, ரமேஸ் இடை மறித்து " மீரா யார் அந்த ஆதி?" சற்றும் எதிர்பாராமல் ரமேஸிடம் இருந்து வந்த அந்த கேள்வியால் நிலை குழைந்தாள் மீரா! ஒருமாதிரி தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு,நடந்தை   அப்படியே விபரித்தாள் மீரா. 

" மீரா இதை நீ ஏன் என்னிடம் முன்பே சொல்ல வில்லை?" 
 "முன்பு என்றால் நம் திருமணத்திற்கு முன்பா? பின்பா?" அச்சத்துடனும், வியப்புடனும் மீரா கேட்டாள்.
 "அதுவல்ல பிரச்சனை எதுவாயிருந்தாலும் மீரா,  எதுவானாலும் எனக்கு தெரியும் முன்னே நீயாக உன் வாயால் நான் கேட்டிருக்க வேண்டும். அடுத்தவன் வாயால்,,,,, அவமானமாக கருதுகின்றேன்" இது ரமேஸ்.
 " இதில் என் தப்போ தவறோ இல்லை, அதைவிட அது ஒன்றும் எனக்கு பெரிய விடயமாக தெரியவில்லை" இது மீரா சொன்னது. 

இந்த உரையாடலுக்குப் பின் இருவருக்கும் இடையில் கலகலப்புகள், ஊடல் சில்மிஸங்கள். சிணுங்கல்கள் எல்லாமே வற்றிப்போயி ருந்தன. வற்றிய‌ குளத்து கொக்கு போலத் துவண்டாள் மீரா.

                                             தென்னம் வட்டுக்குள் நிழலுக்காக ஒதுங்கிக் கொண்ட அந்த குயிலின் சோக அழைப்பு,,, சோக ராகமாக காற்றிலே 
கலந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. கன்னங்களில் உருண்ட கண்னீரை துடைத்துக்கொண்டு, எதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் கடிதம் ஒன்றை எழுதினாள்,,, 

                                      என் அன்பு ரமேஸுக்கு. நீங்கள் எனக்கு கிடைத்தது இறை வரம் என்று தான், இதுவரையும் எண்ணுகின்றேன். இனிமை குன்றாதா உங்கள் அன்பில், நான் திளைத்து இருந்தேன். தேனுக்குள் விழுந்த எறும்பாக, உங்கள் தித்திப்பான அன்பிலே உலகை மறந்தேன். என் அன்பே! எதுவானலும் நான் உங்களிடம் முன்பே சொல்லி இருக்கவேண்டும். சொல்லாதது என் தவறுதான். எதோ ஒரு குற்ற உணர்வு என்னை வாட்டுகின்றது. என் அன்பே என்னை மன்னி த்துவிடு! இந்த கடிதம் நீங்கள் வாசித்த பின். ஏற்கனவே உயிரை மாய்த்துக்கொள்ள, வாங்கியிருக்கும் பொலிடோல் போத்தல் கலியாகிவிடும். என்னை மன்னித்து விடுங்கள் ரமேஸ்! இப்படிக்கு உங்கள் தித்திக்கும் அன்பை இழக்கும் அபாக்கியவதி மீரா.

                                                   கடிதத்தை எழுதி முடித்த மீரா, அதை ரமேஸின் கைகளில் கிடைக்கும் படியாக, ரமேஸின் மோட்டர் சைக்கில் திறப்பு க்கோர்வையை அதன்மேல் வைத்து,   கடிதத்தை  மேசை மீது வைத்து விட்டாள். வழமைபோல ரமேஸ் வங்கிக்கு கிளம்பினான். மேல் மாடி யின் விறாந்தாவில் ரமேஸின் கை அசைவுக்காக வழமை போல காத்திருந்தாள் மீரா.  . ரமேஸ் கை ஏதும் அசைக்காமல் விருட்டென்று கிளம்பிவிட்டான் மாடியை விட்டு கீழே வந்த மீரா. கடிதத்துக்கு மேலே. மோட்டார் சைக்கிள் திறப்புக்கோர்வை இருப்பதைக் கண்டு வியப்புற்றாள். 
     
                                             அப்போதுதான் அவள் நினைவுக்கு வந்தது அவர் நேற்று தன் மோட்டார் சைக்கிள் பழுதுதாகி அதை  கராஜில் விட்டு விட்டு தன் நண்பரின் சைக்கிளில் வீட்டுக்கு வந்தது. கடிதத்தை வாசித்தார இல்லையா என்று அறிய மீரா கடிதத்தை எடுத்தாள். அதில் ரமேஸின் கை எழுத்துக்கள்,,, 

                                   என் அன்பு மீரா! உன்னை பற்றி எனக்கு தெரியாதா என் வானம் என்ற இதயத்தில் கொழுவிருக்கும் இதய நிலா நீ. நான் அன்று உன்னிடம் கேட்டதை அன்றே நான் மறந்துவிட்டேன். அதை நீ எனக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். நீ தான் வீணாக உன் மனதை குழப்பி ஒரு வாரமாக எனக்கு வரவேண்டிய முத்தங்கள், இறுக்கமான அணைப்பு க்கள், இன்பமான உரைஞ்சல்கள் எல்லாவற்றையும் எனக்கு தர மறந்துவிட்டாய்,, நான் தவித்த தவிப்பு எனக்கல்லவா தெரியும். என் அன்பே பொலிடோல் போத்தல் முழுவதையும் குடித்து          என்னை இறுதியில் வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!! குடித்த பின் பாதியை வை, நானும் குடித்து அன்னோடு மாய்கின்றேன். நிலவில்லாமல் ஒரு வானமா அது நானா?    இப்படிக்கு உன் ரமேஸ்.
                                                       கடிதத்தின் இறுதி பந்தியை ஓராயிரம் முறை படித்தாள் மீரா!  வாடா, வா ரமேஸ!, இன்று உன்னை என்ன செய்கின்றேன்  பார். நீ போதும் போதும் என்று சொல்லும் வரை,,,,,,,,,,,
 மனசில் எதோ நினைத்துக் கொண்டு, ஆவேசமாக லீப்ஸ்டிக்கை தன் உதட்டில் தேய்க்கின்றாள் மீரா!     யாவும் கற்பனையே,,,

                                                          பேசாலைதாஸ்    

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...