fredag 24. mars 2017

என் ஊர் பேசாலை

என் ஊர் பேசாலை










நிலாச்சோறு, நிலா மழை நீண்டு மனதில்பதிந்த அந்த நிலாக்காலம் மீண்டு வருமோகடற்கரையின் கொண்டல் திசையிலே தெரியும்விராணா வெளிச்ச கோபுரம் விரக்தியில்விழிக்ககச்சான் பக்கமாயுள்ள பியர் இறங்கு துறைஇன்னமும் வெறிச்சோடிக்கிடக்கின்றது.


செக்கல் பொழுதில், சுக்கானில் கைவைத்த படிகச்சான் திசையிருந்து கொண்டல் நோக்கி,,மீண்டும் கொண்டலில் இருந்து கச்சான்முகமாய்அங்கும் இங்குமாய் அலைகின்ற இழுவை படகிலேஎன்னூரை விழித்து பார்க்கின்றேன்,,,,,,,,,


மாதா கோயில் கோபுரம் கம்பீரமாய் தெரியநாலாம் வட்டார வீடுகள் எல்லாம் சிறிதாய், அடுக்கிவைத்தபடி அழகாய் தெரியதென்னை மர சோலையில் காகங்கள் உட்கார்ந்து,,,,,


வைகரைப் பொழுதை வரவேற்க உற்சாகமாய் கரைந்து ஊரை எழுப்புகின்றனஎன் கனவுகள் மீண்டும் விழித்துக்கொள்ளஎன் ஊரையும் உறவுகளையும் நினைத்த படி,பனிவிழும் வனாந்திர நாட்டில் நான்,,,,,,,,,,,,,,

                                                       பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...