søndag 29. mai 2011

திரு N.S.Croos (சூசையப்பு குருஸ்)

திரு. நீக்கிலாஸ் சூசையப்பு குருஸ்!
                                                                             என் மனதில் இடம்பிடித்த ஒரு மனிதர் இவர். மென்மையான சுபாவாம், நல்ல பண்பாளன், நல்ல பக்திமான். இவரது தலைமகன் ஒரு குருவாக இருப்பது நமக்கு பெருமையாக இருக்கின்றது.
மென்மையான சுபாவம் கொண்டு இவர் இருப்பதால் பேசாலையில் பழைய நாடககதாநாயகனாக இவர் நடித்ததாக என் தாய் எனக்கு சொன்னதுண்டு. அன்பே வா அழைகின்ற எந்தன் மூச்சே! என்ற ராஜா ஜிக்கி பாடிய பாடலை பாடிக்கொண்டு மேடையிலே தோன்றும் போது பெண் ரசிகரால் பெரிதும் கவரப்பட்டவர். அருளானந்தம் நாடகத்திலே இவர்தான் அருளானாந்தர் இவரை குப்பை லோகு என்ற மாமிசமலை போன்ற என் ஊர்க்காரன் ஒருவர் இவரை அடித்து உதைப்பார். எங்கட சனங்கள் ஓவென்று கதறி அழுவதை நான் சின்னவயதில் பார்த்திருக்கின்றேன். கல்யாணம் என்று என் ஊரிலே நடந்தால் இவர்தான் முதல் ஆளாக வந்து மாப்பிள்ளை அழைப்புவிடுப்பார். செத்தவீடு நடாந்தாலும் இறுதிக் கிரிகைகளை இவரே முன்நின்று நடத்துவார். தற்போது வயதாகி வீட்டிலே முடங்கிப்போயிருக்கும் இவரைப்பற்றி நான் துருவநாட்டு பனிப்படலத்தை
பார்க்கும் போதெல்லாம் நினைவுபடுத்துவதுண்டு.
                                   பனிபடர்ந்த மலைகளுக்கிடையே நினைவு மீட்டுகும் அன்பு
                                                                                 பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...