onsdag 14. februar 2018
விதி மீறும் காதல் தா......!கவிதையின் காதலன் பேசாலை
விதி மீறும் காதல் தா......! கவிதையின் காதலன்பேசாலை
இது தான் நீதியோ !
வலி தான் என் சாதியோ!
மனக் கூட்டில் மண்டிக் கிடக்கும்
கவியே என் ஆறுதல்!
புலம்பல் காவியப் பூக்களில்
இன்று நான் புது மலர் !
வாடா வசந்தங்கள்
என்னுள் வந்திட
வரம் கேட்டு வருகின்றேன்!
நிராகரிப்புக் கோப்பையின்
நீராகாரம் நான் - என்னை
மண்ணில் தெளிப்பதும்
அமிர்த்தப் பாலாய்
அள்ளி நுகர்வதும்
உன் வாயிலே உள்ளது!
வெட்டுண்ட வாளைகள்,
துளிர் விட வாய்ப்பில்லை!
விதிமுறை மீறி காதல் கேட்கிறேன். இரவலாக அல்ல இதயமாக......!
இனிய காதலர் தின வாழ்த்துகள்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
-
நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா) ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள்...
-
பணங்கா வாடி கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும், புளிச்ச வாசத்தில் வண்டுருளும், வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, அருவா கத்திய துணைக்கு வச்சு...

Ingen kommentarer:
Legg inn en kommentar