tirsdag 16. mai 2017

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்

அம்மா
இன்னுமொரு பிறவி இருக்குமேயானால்
என் தாயின் செருப்பாகப் பிறப்பேன்.
தேய்வதற்காகவல்ல என்னைச் சுமந்தவளை
ஒரு முறையேனும் சுமப்பதற்காக.....
சொர்க்கம்
தாயின் கருவறையை பார்த்தபின்பு முடிவுக்கு வந்து விட்டேன் இருட்டாய் இருப்பது நரகம் மட்டுமல்ல சொர்க்கமும்தான்
புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன் ... ......அம்மா
அம்மாவுக்கென்று தனியாக கவிதை வேண்டாம் அன்பாகப்பழகிப்பார் அம்மாவே கவிதைதான்
உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வம்
அம்மா........
உயிர் எழுத்தில் அ எடுத்து
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர்மெய் எழுத்தில் மா எடுத்து
அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து அம்மா

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...