tirsdag 28. mars 2017

கருப்பை இழ‌ந்த என் கடல் அன்னை!

கருப்பை இழ‌ந்த என் கடல் அன்னை!

என் ஆசை நண்பா அப்புகாமி
எப்படி இருக்கின்றாய் நலம் தானே!
உயிரான என் ஊர் எப்படி இருக்கின்றது.
கலவரக்காலங்களில் காடுகளுக்குள்
நம் நட்பு இறுகியது, நாட்கள் செல்ல‌
கலவரத்தால் இணைந்த நாம்
கடல்களால் தள்ளி நிற்கின்றோம்.
துருவத்தில் நான் துயரத்தில் நீ!
இயக்கத் தோழன் துரம் எப்படி?
எப்போதும் வட்டக்கோடில் ஜெயிக்கும்
என் பக்கத்து வீட்டு பார்வதி எப்படி?
கடல் பாம்பின் வால் பிடித்து
சுழற்றி நீ விளையாடுவது சுற்றிச் சுற்றி
என் நினைவுச் சுழியில் வந்து போகிறதே!
கடற்கரையின் வலைக் கும்பத்தையும்,
விரிந்து கிடக்கும் படகுப் பாய்களையும்
நான் விசாரித்ததாச் சொல்லிவிடு.
இடியன் குஞ்சுகளும், ஓட்டு கணவாயும்
கலர்களும், காரலும் காணாமல் போனதாமே!
வாரிச் சுருட்டி, வயிற்றில் போடும்
இந்திய இழுவைப்படகுப் பலகைகளுக்கு
பகுத்தறியும் பழக்கமுண்டோ சொல்!
கருப்பைகள் அகற்றப்படும் போது
பாவம் கடல் அன்னை என்ன செய்வாள்?
பஞ்சமும் பட்டினியும் பரிசாய் நமக்கு இனி
என்பதை என் ஊரவரருக்கு ஒருதரம்
என் சார்பாய் சொல்லிவை நண்பா!

             இப்படிக்கு பேசாலைதாஸ்

fredag 24. mars 2017

என் ஊர் பேசாலை

என் ஊர் பேசாலை










நிலாச்சோறு, நிலா மழை நீண்டு மனதில்பதிந்த அந்த நிலாக்காலம் மீண்டு வருமோகடற்கரையின் கொண்டல் திசையிலே தெரியும்விராணா வெளிச்ச கோபுரம் விரக்தியில்விழிக்ககச்சான் பக்கமாயுள்ள பியர் இறங்கு துறைஇன்னமும் வெறிச்சோடிக்கிடக்கின்றது.


செக்கல் பொழுதில், சுக்கானில் கைவைத்த படிகச்சான் திசையிருந்து கொண்டல் நோக்கி,,மீண்டும் கொண்டலில் இருந்து கச்சான்முகமாய்அங்கும் இங்குமாய் அலைகின்ற இழுவை படகிலேஎன்னூரை விழித்து பார்க்கின்றேன்,,,,,,,,,


மாதா கோயில் கோபுரம் கம்பீரமாய் தெரியநாலாம் வட்டார வீடுகள் எல்லாம் சிறிதாய், அடுக்கிவைத்தபடி அழகாய் தெரியதென்னை மர சோலையில் காகங்கள் உட்கார்ந்து,,,,,


வைகரைப் பொழுதை வரவேற்க உற்சாகமாய் கரைந்து ஊரை எழுப்புகின்றனஎன் கனவுகள் மீண்டும் விழித்துக்கொள்ளஎன் ஊரையும் உறவுகளையும் நினைத்த படி,பனிவிழும் வனாந்திர நாட்டில் நான்,,,,,,,,,,,,,,

                                                       பேசாலைதாஸ்

கியூபட் அவர்களின் இறுதிக் கவிதை


søndag 1. mars 2015

கோயில் பூனை

                   கோயில் பூனை 

கோயில் பூனை  தேவனை மதியாது என்பது ஒரு தமிழ்               முதுமொழி ஆனால் அந்த முதுமொழியை தன் அர்ப்பண        வாழ்வில் பொய்யாக்கியவர் திரு. அம்புறோஸ் குலாஸ்               அவர்கள். அவரது  தெய்வபக்தியும் சேவைமனப் பான்மை              யும் இதற்கு சான்று. இன்று அவர் தனது நாற் பது வருட ஆலையப்பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார். அவரது               பணியை பற்றிய ஒரு மீளபார்வையை இந்தவேளையில்             எழுதுவது சாலப்பொருந்தும் என்று என் சிறுமதி எனக்கு    சொல்கின்றது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒரு                 கோயில் பீடப்பரிசாரகச் சிறுவனாக இருந்திருக்கின்றேன்.                   நேரம் தப்பினாலும் மூவேளையிலும் எமது ஆலைய திரு           ந்தாதி மணி, தவறியதே இல்லை. எமது ஆலைய மணியை             தொங்கி தொங்கி இழுத்தடிப்பது சிறுவராகிய எங்களுக்கு      அலாதியான ஒரு அனுபவமும் சந்தோசமும் எப்போதும்            நிறைந்தே இருக்கும். இதற்காகவே அம்புறோஸ் ஐயாவை     என்போன்ற சிறுவர்கள் சதா சுற்றி சுற்றி வருவார்கள்..தவ        க்காலம் அதுவும் பெரிய கிழமை, வியாழனில் இருந்து சனி சாமம்பூசையில் வரை, ஆலய மணி ஒலிக்காது அதற்கு பதி          லாக கிறில் அடிப்பது வழக்கம். அந்த கிறில் சுழற்றியை              ஊருக்குள் கொண்டு சென்று அடிப்பதில் இருக்கும் ஆனந்தம்         அப்பப்பா சொல்லவே முடியாது அதை நினைத்தால் கூட              இப்போது எதையோ தொலைத்துவிட்ட  ஒரு நெருடல்                  மனதுக்குள்ளே! அந்த கிறில் சுழற்றிகளை அப்புறோஸ் ஐயா     நன்றாக எண்ணை தடவிவைத்திருப்பார், விதவிதமான அந்த கிறில்களை கைப்பற்றிக்கொள்வதில் சிறுவர்களாகிய எங்களு      க்குள் சண்டைகள் மூளும் அதனை அம்புறோஸ் ஐயா, இலாவ     கமாககையாண்டு தீர்த்துவைப்பார்.
                                                                 பாலன் குடில் அமைப்பதில்  அம்புறோஸ் ஐயா அவர்களின் ரசனை இப்போதும் மனதில் நிழலாடுகின்றது. அம்புறோஸ் ஐயா சிறந்த நாடக இயக்குணர்       அவரின் சில நாடகங்களை நான் இப்போது கூட நினைத்துப்பார்ப துண்டு. சுமதி என் சுந்தரி, மனக்கோயில் உனக்காக என்பன இவ        ரது சிறந்த சமூக நாடகங்கள்.. இவர் ஒரு நாடக இயக்குணர்     மட்டுமல்ல ஒரு சிறந்த விறு விறுப்பான அறிவிப்பாளரும் கூட      அவரது அறிவிப்பு பாணியை இப்போது நான் கூட கையாள்வது     ண்டு. சிலவருடங்களுக்கு முன்னர் பேசாலையில் கலைஞர்களை பாராட்ட, வாழும் போது வாழ்த்துவோம் என்ற நிகழ்சியை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். அந்த நிகழ்விலே அம்புறோஸ் ஐயா அவர்கள் கெளவுரவப்படுத்தப்பட்டார். இன்றும்       அவர் கெளரவிக்கப்படும் போது சந்தோசம் அடைகின்றேன்.

                                                                  அன்புடன் பேசாலைதாஸ்