fredag 20. oktober 2017

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

உலகத்தமிழர் பேரவைத்தலைவர் அருட்திரு இம்மனுவேல் அடிகளாரின் இலங்கை விஜயம் குறித்து தமிழ் மக்களிடையே கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எனது பதிவை இங்கே எழுதுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் கடுமையன போர் நடந்து கொண்டிருக்கின்றது, மே 18 திகதி பிரபாகன் இறந்துவிட்ட அரசு செய்தியுடன் போர் முடிவுக்கு வருகின்றது அதற்கு முன்னைய நாள் நோர்வேயின் தேசிய நாள் மே 17, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பிரமாண்டமான பேரணி தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படுகின்றது, அதற்கு உரையாற்ற அருட்தந்தை அவர்கள் ஓஸ்லோ வந்திருந்தார். அவரோடு அன்று போராட்ட நிகழ்வுகள் குறித்து நீண்ட நேரம் அவரோடு உரையாடினேன். அப்போது அருட்தந்தையின் உணர்வுகளை என்னால் துள்ளியமாக எடைபோட முடிந்தது. தேசியதலைவரின் கணிப்புக்கும், அவரின் மரியாதைக்கும் இன்றும் என்றும் அருட்தந்தை அவர்கள் உரித்தானவர் தான். அருட்தந்தை அவர்களை இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்வதை இலங்கை அரசு தடை செய்தது, ஏன் இந்தியா கூட அவரின் இந்திய விஜயத்தில் குறுக்கிட்டது.  இப்படிப்பட்ட ஒருவர் இன்று கொழும்பில் இலங்கை அரசு மற்றும் அமெரிக்க தூதுவர்களோடு கைகுலுக்கி  பேசுகின்றார் என்றால் இதன் பிற்புலத்தில் ஏதோ ஒரு நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்பது மட்டும் உறுதியாகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், சிங்கள பெளத்த மத பிரிவேனாக்களின் ஆதரவோடு தான் இலங்கை அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இலங்கையின் தேசியவாத உணர்வு, மாகாவம்ச போதனையுடன் சிங்கள இனவெறியாக உருமாற்றப்பட்டுள்ளது. நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வு எவரிடமும் இல்லை அது வளர்த்து எடுக்கப்படவும் இல்லை. பெளத்த மத தலைவர்களை எதிர்த்து, இலங்கையின் தேசிய நலனை முன்னெடுக்க எவரும் துணியவில்லை அதற்கான ஆளுமையும் அருகதையும் சிங்கள அரசியல்வாதிகளிட‌ம் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென்றால் அது சிங்கள பெளத்த மத பீடத்தின் மனமாற்றதிலும், சிங்கள மக்கள் மீது ஏற்படும் ஒற்றுமை விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது.  ஆயுத போராட்டம் தமிழ் மக்களிடம் சிங்கள அரசினால் திணிக்கப்பட்டது என்ற மாபெரும் உண்மையை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ளன அதன் விழைவாக தமிழ் மக்கள் கடுந்துயர் அடைந்த கதை சிங்கள மக்களின் காதுகளுக்கு சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. போர்குற்றம் பற்றிய விழிப்புணர்வு சிங்கள மக்களிடையே விதைக்கப்படவேண்டும் என்று அருட்தந்தை கொழும்பில் கூறியதை இங்கு மீண்டும் கோடிட்டு காட்டவிரும்புகின்றேன். சிங்கள மதபீடத்தின் கடும் போக்கில் இருந்து அது இறங்கிவரவேண்டும் அவ்வாறு வருவதன் ஊடாகவே இனப்பிரச்சினை தீர்வில் காத்திரமான முன் எடுப்புகள் சத்தியமாகும். கடும் போக்கில் இருந்து பெளத்த மதபீடம் இறங்கி வரவேண்டுமானல் அதற்கான சமிஞ்சைகளை தமிழ் தரப்பிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.அந்த வகையில் தமிழ் இனப்பிரச்சனையில் கத்தோலிக்க கிறிஸ்தவ அருட்குருக்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.அருட்திரு இம்மானுவேல் அடிகளார் முன்னோடியாக இருப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு இருக்கையில், தமிழ் தரப்பு சாதாகமாக மத தலைவர்கள் சற்று இறங்கிவந்து நல்லெண்ண சமிக்ஞைகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது, அதனையே சர்வ தேச‌ சமூகமும் எதிர்பார்க்கின்றது. அதனை கருத்தில் கொண்டு அருட்குருவானவருக்கு  கத்தோலிக்க உயர் பிடமான வத்திக்கான் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது. மற்றப்படி தேசியதலைவரின் கடிகாரம் அருட்குரு இம்மானுவேல் அவர்களின் இடது கையில் டிக் டிக் டிக் என்று அடிதுக்கொண்டுதான் இருக்கிறது, கூடவே அவரின் இதயமும் டக் டக் டக் என்று தமிழுக்காகா அடித்துக்கொண்டுதான் இருக்கின்றது அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 19. oktober 2017

என் நினைவில் நிற்கும் ஆசிரியை!

என் நினைவில் நிற்கும் ஆசிரியை!

என் பள்ளி வாழ்வில் பல ஆசிரியர்களை என்னால் மறக்கமுடிவதில்லை அவர்களிள் ஒருவர் தான் திருமதி ஜெகநாதன் ஆசிரியை, அவரின் கணவர் பேசாலை டின் மீன் தொழிற்சாலையின் முகாமையாளாராக  பணிபுரிந்தவர்.  ஜெகநாதன் ஆசிரியை பேசாலைக்கு வந்தபின்புதான் வெற்றித்தாயின் அனுக்கிரகத்தால் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள்! அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், வெற்றி அன்னையின் அருளால் தான் ஒரு மகனை பெற்றெடுத்ததாக அவரே கூறுவதுண்டு.  ஜெகநாதன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அதேவேளை ஒரு தாய்க்குரிய கருனை அவரிடம்  எப்பொழுதும் உண்டு.தன் மாணக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்று அறிவுறை கூறுவதுண்டு. அவர் தந்த ஊக்கமே எனக்கு லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில்  M.A  பட்டம் படிக்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளித்தது என்றால் அது மிகையாகது! ஜெகநாதன் ஆசிரியை பார்க்கும் போதெல்லாம் மஞ்சள் குங்குமம் பொங்கும்  மகா லட்சுமியை நினைவுக்கு கொண்டுவரும்.  அவர் எங்களுக்கு தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் படிப்பிக்கும் பாங்கு மிக நேர்த்தியானது. ஒருபோதும் பிரம்பை கையில் தொட்டதே இல்லை ஆனால் டீச்சர் பார்க்கும் ஒரு பார்வையே போதும், மாணவர்களுக்கு உள்ளூர வியர்த்து கொட்டும். எவ்வளவுதான் கண்டிப்பாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாக எங்களோடு உரையாடுவதுண்டு. எங்கள் வகுப்பிலே சகாயன் சில்வா என்ற குறும்புக்கார மாணவர் இருந்தார். அடிக்கடி ஏதாவது ஆங்கில வசனத்தை எடுத்துவிடுவான் அதற்கு உரிய அர்த்தம் அவனுக்கே தெரியாது. ஒரு முறை சகாயன் சில்வா, எமது சக மாணவியான மிரியம் குருஸுடன் வாய்த்தர்க்கம் செய்தான் அப்பொழுது திடீரென்று  I don't care   என்று ஒரு ஆங்கில வசனத்தை எடுத்துவிட்டான்.அப்பொழுது  நண்பி மிரியம் அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று சகாயன் சில்வாவிடம் கேட்ட பொழுது அவன் மிகச் சர்வ சாதாரணமாக  நான் ஒரு சாதாரண மனிதன் என்று சொன்னான். அவன் சொன்னதை நாங்களும் நம்பிவிட்டோம், அதே நேரம் பார்த்து வகுப்பறைக்குள் நுழைந்த ஜெகநாதன் டீச்சர் சாகயன் சில்வாவிடம் I don't care என்றால் அதன் அர்த்தம், நான் பொருட்படுத்தவில்லை என்று விளக்கம் கொடுக்க, உடனே சகாயன் சில்வா அதைத்தான் டீச்சர் நான் ஆங்கிலத்தில் சொன்னேன் என்று டக்கென்று பதில் சொன்னதும் டீச்சர் உட்பட நாங்கள் அனைவரும் குழுங்கி குழுங்கிச் சிரித்தோம்.
பள்ளி வாழ்க்கையே வண்ணமயமான கனவுக்கலவைதான்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

அந்த நாள்!

அன்பர்களே! நம் ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பருவ வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஏக்கம் மனதுக்குள் குடி கொள்ளும் அந்தக்காலம் திரும்பவராதா! என்ற அந்த ஏக்கம் தான் அது! நான் என் கிராமத்தை விட்டு 1978 ஆண்டில் இருந்தே பிரிந்துவிட்டேன், குருமடவாழ்வு, பல்லகலைக்கழக வாழ்வு, பின்னர் இந்தியாவில் சில வருடங்கள் அஞ்ஞாத வாசம் ( ஒரு போராளியாக) பின்னர் ஐரோப்பிய புலம் பெயர்வு, இப்படியே வாழ்க்கை அலைக்கழிந்துவிட்டது! இருந்தாலும் என் கிராமத்தின் நினைவுகள் இப்பவும் பசுமரத்தாணி போல மனதில்,,,,, இப்போது இருக்கும் கிராமம் என் மனப்பதிவில் இல்லை, இருப்பதெல்லாம் 1978 ஆண்டுகளுக்கு முன்பிருந்த என் கிராமத்து பதிவுகளைகளைத்தான் இப்பவும் நான் மீட்டிக்கொண்டிருக்கின்றேன். ஆலமரங்கள் இருக்கும், ஊஞ்சலாடிக்கழிக்க நீள விழுதுகள் தொங்கும், அருகிலே குட்டைக்குளம் இருக்கும், அதிலே பனைமரக்குற்றிகளை கப்பல் என நினைத்து அதில் ஏறிக்குதிக்கும் சின்னஞ்சிறார்கள், ட்ரெக்டர் வண்டியாய், கத்தாளை, அயலை என ஏரளமாய் மீன் பாயும் என் அழகான ஊர் இப்போது இல்லை. அப்போது உறவுக்காய் வாழ்ந்த உள்ளங்கள் இப்போது இல்லை, இப்போது இருப்பதெல்லாம் வரட்டு கெளரவமும் ஏளனம் கலந்த உள்ளங்கள் நிறையவே என் ஊரில் உண்டு, அந்த ஓலங்கள் இப்போது எதற்கு? விசயத்துக்கு வருகின்றேன். என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு ஓணான் பல்லி கிளிக்குஞ்சு அணில் குஞ்சு இவைகளில் அலாதி ஆசை, மற்ற நண்பர்கள் இந்திய சாரம் சரசரக்க தெருவெல்லாம் பருவங்களை சுற்றிய காலத்தில், இப்படி நான்!
அப்போ நான் ஒரு லூசுதானே! இருக்கட்டும், அணில் குஞ்சு பிடிக்க பள்ளிக்குட ஆலமரதின் கீழ் முட்டி வைத்து தேங்காய் சொட்டு, மிளகாய் வாட்டி அத்ற்குள் வைத்திருந்தேன். அதனை காக்கா கஸ்பார் பார்த்துவிட்டான்! மணி அடித்ததுதான் தாமதம் கஸபர் ஓடினான் என்முட்டியை எடுப்பதற்கு, முட்டியும் கவிழ்ந்து இருந்தது, நான் காக்கா கஸபாரை துரத்துகின்றேன். களைப்பாய் ஓடிய கஸ்பார் ஒரே மூச்சில் முட்டிக்குள் கைவிட்டு இழுத்தான் ஒரு பெரிய பாம்பு அவன் கையில்! நல்ல காலம் பாம்பு அவனை தீன்டவில்லை, அப்படி நடந்திரிந்தால் காக்க கஸப்பார் அமரர் கஸ்பாராகி 45 வருடங்கள் கழிந்திருக்கும், நினைக்க இப்பவும் அலாதி ஆனந்தம் தான் அன்புடன் பேசாலைதாஸ்

tirsdag 16. mai 2017

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்

அம்மா
இன்னுமொரு பிறவி இருக்குமேயானால்
என் தாயின் செருப்பாகப் பிறப்பேன்.
தேய்வதற்காகவல்ல என்னைச் சுமந்தவளை
ஒரு முறையேனும் சுமப்பதற்காக.....
சொர்க்கம்
தாயின் கருவறையை பார்த்தபின்பு முடிவுக்கு வந்து விட்டேன் இருட்டாய் இருப்பது நரகம் மட்டுமல்ல சொர்க்கமும்தான்
புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன் ... ......அம்மா
அம்மாவுக்கென்று தனியாக கவிதை வேண்டாம் அன்பாகப்பழகிப்பார் அம்மாவே கவிதைதான்
உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வம்
அம்மா........
உயிர் எழுத்தில் அ எடுத்து
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர்மெய் எழுத்தில் மா எடுத்து
அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து அம்மா

søndag 16. april 2017

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!


உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரபு கலைவடிவம். இது பொம்மலாட்ட வைகையை சார்ந்ததாக இருப்பினும் இது பொம்மலாட்டம் அல்ல. மரத்தினாலும் வைக்கோல் உடம்பினாலும் உருவாக்கப்பட்ட உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் திருப்பாடுகளின் காட்சி ஆகும். மனிதர்களின் நடிப்பை வைத்து திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்படும் போது, அங்கு தெய்வீகம், அற்றுப்போய் இயேசுநாதாராக நடித்த அந்த நபரின் நடிப்பு பேசப்படுவதால் அங்கு தெய்வீகம் என்பது இல்லாது போகின்றது. ஆனால் பேசாலை மக்களினால் காட்டப்படும் திருப்பாடுகள். பேசாலை மக்களினால், பய பக்தியாய் ஆரதிக்கும் கர்த்தருடைய உடக்கு இங்கே நடிக்கும் போது, உண்மையில் நாம் வணங்கும் கார்த்தராகி இயேசு நம் கண் முன்னால் பாடுகள் அனுபவிப்பது போன்ற ஒரு பிரமையை மக்கள் மனதில் ஏற்படுத்தி விடுகின்றது. இதுவே பேசாலை உடக்கு பாஸின் மகாத்மியமாகும். உலகிலேயே வேறெங்கும் இல்லாத இந்த உன்னத கலை வடிவத்தினை, கடந்த இரு நூறுவருடங்களாக பேசாலை மக்கள் பாதுகாத்து பேணி வருவதையிட்டு பேசாலைதாஸ் என்ற ஒரு நபராக நான் பெருமை அடைகின்றேன். எமது மரபு சார்ந்த உடக்கு கலை வடிவம் பற்றி பேசாலைதாஸ் ஆகிய நான் என் பேசாலை உறவுகளுடன் பேசுகின்றேன்!                                                            கடந்த புனித வாரத்திற்கு முந்திய வாரத்தில் கான்பிக்கப்பட்ட உடக்கு பாஸ் பல சிறப்புகளை கொண்டிருந்தா லும், பல குறைபாடுகள் காட்சி முழுவதும் தொடர்கின்றது. உடக்கு பாஸின் உச்ச கட்டம் கடவுள் மரிக்கும் காட்சி. கடவுளே மரணிக்கி ன்றார் என்றால் அந்த காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே சற்று கற்பனை பண்ணிப்பாருங்கள்! மகா பயங்கரமாக இருக்கும். மத்தேயூ எழுதிய சுவிசேசத்தின் படி, பூகம்பம் உண்டா கியது. வானம் இருளாகியது. சூரியன் பிரகாசம் குன்றி ஒளி இழ ந்தான். கல்லறைகள் திறக்கப்பட்டு ஆவிகள் அலறின. ஆலய திரைச் சீலை கிழிந்தன. பறைவைகள் சோகம் காத்தான. நிலவு அழுதது அந்தோ! படைப்பின் கர்த்தர் பிதாவே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்று உரக்க கூவி தலை சாய்க்கி ன்றார். ஆனால் நடந்து முடிந்த காட்சியில் திடீரென கறுப்பு கலர் காண்பிக்கப்படுகின்றது. அதற்கு முன்னரே கர்த்தரின் ஆவி எங்கேயோ பறந்து போய்விட்டது. காரனத்தை ஆராய்ந்தால் நூல் அறுந்துவிட்டதாம். நூல் அறுந்து போனதுக்கும், அரசியல் காரனமா கின்றது! முன்பு சலோஸ்தியான் பீரிஸ் அவர்கள் மிக அவதானமாக, நூல் வேலைகளை செய்வார் அது அவரின் வாழ் நாள் வேலையாக இருக்கும்! அந்த வேலையை அவரின் வாரிசுகள் யாராவது செய்திரு ந்தால் நூல் அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடம் இல்லாது போயி ருக்கும். அந்த நூல் வேலையை கூட தமிழ் தேசியவாத உணர்ச்சி தான் இழுக்கவேண்டுமா? என்னே மடமைத்தனம்!
                                திருப்பாடுகளின் காட்சியின் முக்கிய இயக்குணர் கலாபூசணம் மிராண்டா ஆசிரியர் அவர்கள், அவருக்கு பின்னர் இதனை நெறிப்படுத்தும் பக்குவம் அடுத்த இளம் தலைமுறைக்கு கொடுக்கப்படவேண்டும். மேலை நாடுகளின் நவீன நாடகங்களை இயக்கி வெற்றி பெற்றவன் என்ற எனது சிறுமதியை வைத்து சொல்கின்றேன். திருப்பாடுகளின் நெறியாள்கை நிறைய குறைபாடு களைக் கொண்டுள்ளது.                                                              முதலில் ஒலி அமைப்புக்கு வருவோம், நமது உடக்குகளுக்கு வாய் பேசாது எனவே குறைந்த பட்சம் மாதா இயேசு இவர்கள் வசனம் பேசும் போது அந்த உரையாடல் அங்கிருந்து வரவேண்டும். அடுத்ததாக வசனங்கள் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை கொண்டு வசனம் அமைக்கப்பட்டிருந்தது. உரையாடலின் வசனத்திற்கு ஏற்ப உடக்குகளினால் அசைந்து காண்பிக்க முடியாது எனவே வசன உரையாடைலை தெளிவாகவும். உள் ஆழக் குரலாக இருந்திருக்கவேண்டும். வானொலியில் பணியாற்றியவர்களுக்கு நான் சொல்வது புரியும்                                                                          இயேசு வசனம் பேசும் போது அவரின் வசனம் கருக்குள்ள பட்டயம் போல இதயத்தை ஆழ ஊடுருவும் அது அங்கு இல்லை. பூங்காவனத்தில் வந்த தொய்வு, சிலுவையில் தொங்கும் வரை இயேசுவுக்கு இருந்ததா? குதிரை ஒரு பரிட்சார்த்த‌ முயற்ச்சி முதலில் அதனை பாராட்டுவோம் ஆனால் உண்மையான குதிரையின் பொழிவு அதில் இல்லை. குதிரை நிற்கின்றது ஆனால் டொக்கு டொக்கு சத்தம் மட்டும் நிற்கவில்லை! நாலுபேர் குதிரை யை தூக்கிக் கொண்டு அலைவது அப்படியே வெளியே பார்வை யாளர்களுக்கு தெரிகின்றது. ஒளிவடிவம் காட்சிக்கு ஏற்ற விதத்தில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் வரவேயில்லை. அடுத்ததாக காட்சிகளை தொடர்பு சாதனத்துக்கு அனுப்பும் போது பக்கத்தில் இருப்பவர்களின் அநாவசிய குரல்கள் கலந்து வெளிப்பட்டது காட்சி க்கு குந்தகம் விளைவித்தது. இப்படி  இலகுவில் திருத்த கூடிய குறை பாடுகள் அதிகம். உடக்குகள் இன்னும் பூரணமான வடிவத்திற்கு வரவில்லை, இரும்பு கம்பிகளினால் கைகள் இயக்கப்படுவது, திமிர்வாதக்காரகள் போல உடக்குகள் இன்னமும் இருக்கின்றது. குறிப்பாக கள்ளவர்கள் உடக்கு, வெருளிகள் போல, நகைப்புக்கு உள்ளாகி இருந்தது. மரணித்த காட்சி மகா மட்டமாக இருந்தது. 
                                                           இன்னும் நாம் இரு நூறு வருடத்திற்கு பின் தள்ளியே இருக்கின்றோம். எந்தவித முன்னேற்றம் இல்லை. கை, கால், தலை, வாய் கண் இவைகள் இயங்கக்கூடிய  உருவங்கள் டென்மார்க் நாட்டில் செய்கின்றார்கள் ஒரு உடலுக்கு 35 ஆயிரம் மட்டில் முடிகின்றது. நாம் நமக்கு வேண்டிய ஒப்பனைகளை செய்ய வேண்டியதுதான் மிச்சம். இனிவ்ரும் காலங்களில் திட்டமிட்டு செயல்படுவோம் வெற்றியும் காண்போம். பாடுபட்டு உழைக்க எம் ஊரவர்கள் முன்வரும் போது, சிறப்பாக காட்டி, எமது பாரம்பரிய உடக்கு பாஸை நவீனப்படுத்துவோம். மற்றப்படி பிரமாண்டமான மேடை, எம் ஊரவர்களை கட்டாயம் பாராட்டவேண்டும். தயவு செய்து ஆலையத்திலும். கடவுளிடமும். கலைவடிவத்திலும் அரசி யலை புகுத்தவேண்டாம். திறமைகளுக்கு முன் உரிமை கொடுத்து, இளம் தலைமுறைகளுக்கு வழிவிட்டு, எமது உடக்கு பாஸ் கலை வடிவத்தை மெருகூட்டுவோம் நன்றி  
 அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

torsdag 6. april 2017

இயேசுவின் இரட்சனியம் உடக்கு பாஸ் பேசாலை 2017

இயேசுவின் இரட்சனியம் 
உடக்கு பாஸ் பேசாலை 2017





                                         
உடக்கு பாஸ் பேசாலை 2017 Part 1

உடக்கு பாஸ் பேசாலை 2017 Part 2

உடக்கு பாஸ் பகுதி 3 
















                               





























                                                   

எமது ஊரின் சில முக்கிய காண்னொளிக்காட்சிகள்

எமது ஊரின் சில முக்கிய காண்னொளிக்காட்சிகள்



         முன்னாள் பேசாலை பங்கு தந்தை அவிதப்பரின் 
                                                     மரண திருப்பலி

ஆத்துமாக்கள் திருநாள்
                           
                           பாடசாலை விளையாட்டு போட்டி

                                   கரைவலை பேசாலை

                   கிறிஸ்மஸ் விழா பேசாலை இளையோர்

                             ஆலைய நிதிக்காக கரவலை

                       எமது ஊர் முதியோர் விழா காட்சி    


அன்னை மரியின் திருச்சுருப பவனி

பெரிய வெள்ளி  ஆண்டவரின் திருவுடல் ஊர்வலம்  ஆசந்தி





                 
                        மூவிராசாக்கள் வாசாப்பு ஏடு திறப்பு!