tirsdag 17. juli 2018
torsdag 12. juli 2018
பத்திமாவின்_வெற்றிக்களிப்பு
நிகழ்கால வலைத்தள
முத்துக்களே
பத்திமாவின் விளையாட்டு
மெட்டுக்களே
வடபுலமே ஆட்டம் கண்ட
வல்லுநர்களே
சிறப்பொன்றும் உண்டு
முதலிடமாய்
எம்மவரே கொண்டனரே
வெற்றி புகழிடமாய்
முத்துக்களே
பத்திமாவின் விளையாட்டு
மெட்டுக்களே
வடபுலமே ஆட்டம் கண்ட
வல்லுநர்களே
சிறப்பொன்றும் உண்டு
முதலிடமாய்
எம்மவரே கொண்டனரே
வெற்றி புகழிடமாய்
வழி நடத்தி முன்னின்ற
அருட்சகோதரருக்கும்
கள வழியாடி வாகை சூடவே
ரூபண்ணாவும் துணையாக
மனம் தளராமல் நிலை முதல்
வர தடகளம் ஓடியே
முழு திறன் வெளிக்காட்டி
வெற்றிக் கொடி நாட்டியே
அருட்சகோதரருக்கும்
கள வழியாடி வாகை சூடவே
ரூபண்ணாவும் துணையாக
மனம் தளராமல் நிலை முதல்
வர தடகளம் ஓடியே
முழு திறன் வெளிக்காட்டி
வெற்றிக் கொடி நாட்டியே
ஊரார் தலைமேலே கரம்
அசைத்து இசை பாட
மாணாக்கரும் கைலாகு இட்டு
வெற்றிக் களிப்பாடிட
முதல்த் தரமாய் வெற்றியெட்டி
பத்திமாவின் புகழைப் பரப்பி
மன்னார் தாண்டியே எம்மவரின்
புகழை வடபுலத்தில் பதித்த
அசைத்து இசை பாட
மாணாக்கரும் கைலாகு இட்டு
வெற்றிக் களிப்பாடிட
முதல்த் தரமாய் வெற்றியெட்டி
பத்திமாவின் புகழைப் பரப்பி
மன்னார் தாண்டியே எம்மவரின்
புகழை வடபுலத்தில் பதித்த
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இன் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
இவண்.
பழைய மாணவன்.
பழைய மாணவன்.
søndag 1. juli 2018
கண்ணீர் துளிகள் மட்டும் ,,,,,கவிதையின் காதலன் பேசாலை 14 hrs ·
கண்ணீர் துளிகள் மட்டும்
தூது போகும் காதல் தேசத்தில் என்னவளைத்
தொலைக்கிறேன்.
என் நினைவுத் துகள்களை கோர்த்து
நெஞ்சில் வழியும் வலிகளை ஊற்றி கண்ணீர் துளியாய் வார்த்து
வானத்து அஞ்சலகத்தில்
வைப்பில் இட்டு வருகிறேன் .
காற்று சுமந்து செல்லும்
அஞ்சல் பெட்டிகளில்
கண்ணீரின் கணம்
உடையாமல் உறைந்தே கிடக்கிறது !
கால் பிடித்து சொடுக்கெடுக்கையில் உதிர்ந்த புன்னகை ,
ஆரத்தழுவி முத்தமிடுகையில்
அவிழ்ந்து வீழ்ந்த நாணம்,
உதட்டை ருசிக்கையில்
மூச்சை மோகித்த
வெப்பக் காற்று என
நினைவுகளின் கருவூலத்தை
காவிச் செல்கிறது,
அக் காற்று அஞ்சல்!
நெடிய, வலிகள் சுமந்த பயணம் என்பதால்
வைப்பில் இட்டு வருகிறேன் .
காற்று சுமந்து செல்லும்
அஞ்சல் பெட்டிகளில்
கண்ணீரின் கணம்
உடையாமல் உறைந்தே கிடக்கிறது !
கால் பிடித்து சொடுக்கெடுக்கையில் உதிர்ந்த புன்னகை ,
ஆரத்தழுவி முத்தமிடுகையில்
அவிழ்ந்து வீழ்ந்த நாணம்,
உதட்டை ருசிக்கையில்
மூச்சை மோகித்த
வெப்பக் காற்று என
நினைவுகளின் கருவூலத்தை
காவிச் செல்கிறது,
அக் காற்று அஞ்சல்!
நெடிய, வலிகள் சுமந்த பயணம் என்பதால்
இளைப்பாறும் இடங்களில்
ஊடல் தருணங்களை நினைத்து
ஓய்வைக் கழிக்கிறது, நினைவுகள்!
நாட்டு எல்லைச் சுங்கச் சாவடியில்
எனது அஞ்சல் பெட்டி புறக்கணிக்கப்பட்டதாக
முத்திரை குத்தப்படுகிறது!
வறள் நிலக் காதல்,
மழையை கேட்டால்
இயற்கை என்ன கொடுக்கவா போகிறது!
ஊடல் தருணங்களை நினைத்து
ஓய்வைக் கழிக்கிறது, நினைவுகள்!
நாட்டு எல்லைச் சுங்கச் சாவடியில்
எனது அஞ்சல் பெட்டி புறக்கணிக்கப்பட்டதாக
முத்திரை குத்தப்படுகிறது!
வறள் நிலக் காதல்,
மழையை கேட்டால்
இயற்கை என்ன கொடுக்கவா போகிறது!
நிராகரிப்பு புதிதல்ல, என்ற நிலை
என்றோ மனதில் பிறந்து விட்டது!
திருப்பியனுப்பிய கடிதம்
என்னவளைச் சேர
மாற்று வழி தேடி
புறவழிச்சாலையின் முடிவிடத்தில்
தக்க சமயம் பார்த்து
காத்துக் கிடக்கிறது!
காதலர் பூங்காவை
எல்லையில் ஊடறுத்து
தற்கொலைப் பள்ளத்தாக்கைக் கடந்தால்
என்றோ மனதில் பிறந்து விட்டது!
திருப்பியனுப்பிய கடிதம்
என்னவளைச் சேர
மாற்று வழி தேடி
புறவழிச்சாலையின் முடிவிடத்தில்
தக்க சமயம் பார்த்து
காத்துக் கிடக்கிறது!
காதலர் பூங்காவை
எல்லையில் ஊடறுத்து
தற்கொலைப் பள்ளத்தாக்கைக் கடந்தால்
சோதனைபுரியை அடையலாம்,
அதன் பின் என்னவளால்
வேதனைத் தீ அணையலாம் - என
சட்ட விரோத காதல் அஞ்சல்
கடத்தல்காரர் செவ்வியிட,
அகதியாய்
என்னவள் இதயம் தேடி
பயணிக்கிறது எனது நினைவு அஞ்சல்!
எல்லையில் நிசப்தம்!
முட்புதர் நடுவே எண்ண ஓட்டம்
என்னை கடத்திச் செல்கிறது!
என்னவள் குடிகொண்ட தேசத்தில்
யுத்த காண்டம்
ஈடேறிக் கொண்டிருப்பதாய்
அவசரத் தந்தி ஒன்று
என் நினைவுப் பெட்டகத்தை
உரசி செல்கிறது!
பதறியபடி போர்க்களத்தில்
என்னவளைத் தேடியலைகிறது ,
என் கண்ணீர் !
நினைவுச் செல்கள்
புற்றாய் அரித்ததில் பீடிக்கப்பட்டோரை
வதம் செய்யும் பட்டியலில் இணைத்து
அதன் பின் என்னவளால்
வேதனைத் தீ அணையலாம் - என
சட்ட விரோத காதல் அஞ்சல்
கடத்தல்காரர் செவ்வியிட,
அகதியாய்
என்னவள் இதயம் தேடி
பயணிக்கிறது எனது நினைவு அஞ்சல்!
எல்லையில் நிசப்தம்!
முட்புதர் நடுவே எண்ண ஓட்டம்
என்னை கடத்திச் செல்கிறது!
என்னவள் குடிகொண்ட தேசத்தில்
யுத்த காண்டம்
ஈடேறிக் கொண்டிருப்பதாய்
அவசரத் தந்தி ஒன்று
என் நினைவுப் பெட்டகத்தை
உரசி செல்கிறது!
பதறியபடி போர்க்களத்தில்
என்னவளைத் தேடியலைகிறது ,
என் கண்ணீர் !
நினைவுச் செல்கள்
புற்றாய் அரித்ததில் பீடிக்கப்பட்டோரை
வதம் செய்யும் பட்டியலில் இணைத்து
என்னவள் கொல்லப்படுகிறாள் !
கொலைக் கள ஒப்பாரிகளில்
காதல் மணந்து
என் கண்மணி கருகிட
கழுகின் கால்களில் இரையாய் சாகிறேன்!
என் கண்ணீர் அஞ்சல்
காற்றில் சாம்பலாகி
கரைந்தே விடுகிறது!
அதற்குள் என்னை விட்டு பிரிந்த
என் சீவன் அதைத் தாங்கிப் பிடித்து
நொந்து கொள்கிறது.
# கவிதையின் காதலன்.
கொலைக் கள ஒப்பாரிகளில்
காதல் மணந்து
என் கண்மணி கருகிட
கழுகின் கால்களில் இரையாய் சாகிறேன்!
என் கண்ணீர் அஞ்சல்
காற்றில் சாம்பலாகி
கரைந்தே விடுகிறது!
அதற்குள் என்னை விட்டு பிரிந்த
என் சீவன் அதைத் தாங்கிப் பிடித்து
நொந்து கொள்கிறது.
# கவிதையின் காதலன்.
søndag 17. juni 2018
மறக்குமோ நெஞ்சம்.... (17-06-2006 - 17-06-2018)
மறக்குமோ நெஞ்சம்....
ஆனதம்மா ஆண்டு பனிரெண்டு
மறையவில்லை காட்சி எம் விழியிரண்டு
கோரத் தாண்டவத்தின் பிடியில் நின்று
பாதுகாத்ததம்மா உன் கரம் அன்று.
இன வெறியர்களின் அழித்தொழிப்பு
எம்மவர் கொண்ட பரிதவிப்பு
துப்பாக்கிச் சன்னங்களின்
சலசலப்பு
இவற்றை மறக்குமோ எம் நினைப்பு.
எம்மவர் வாழ்வாதாரத்தை
எரித்தான்
அதைக் கடல் நீரோடு கரைத்தான்
அக்கினியால் எம்மை அழித்தான்
சொல்லொண்ணா துயரத்தைக் கொடுத்தான்.
கொலை வெறிப் படையினை மறித்தாய்
வீசிய குண்டின் வீரியம் குறைத்தாய்
சீறிய சன்னங்களை காலில் மிதித்தாய்
உன் பிள்ளைகள் முழுவதையும் நீ காத்தாய்.
ஊர் கூடி முழுவதும் ஓலமிட்டோம்
எம் கண்ணீர் வெள்ளத்தால் உன் பாதம் தொட்டோம்
அகலட்டும் இன்நிலை என
அபாயமிட்டோம்
உன் அன்பின் கருணையை அன்று கண்டோம்.
சில நூறு துப்பாக்கிகள் எம்மை நோக்கியது
பல நூறு தோட்டாக்கள் எம்மைத் தாக்கியது
அத்தனை வாதைகளும் பனி போலாகியது
வெற்றி அன்னையின் அருட்கரம் எம்மைத் தாங்கியது.
வாதை உன் கூடாரத்தை அண்டவில்லை
பல இரவைக் கழித்தோம் இங்கு வீடு சென்று விடவில்லை
அட்டூழியத்தின் சுவடுகள் இன்னும் மறையவில்லை
கொடிய காட்சிகளை நெஞ்சம் மறக்கவில்லை..
இவற்றை மறக்குமோ எம் நெஞ்சு?
fredag 25. mai 2018
உடக்கு பாஸ் மண்டபம்...
உடக்கு பாஸ் மண்டபம்...
திருப்பாடுகளின் காட்சிக் கூடமிது
தத்ரூபமாய் அரங்கேறும் இடமிது
நம் முன்னோரின் கலை வடிவமிது
எமது பாரம்பரிய கலைப் பொக்கிஷமிது. எழுபத்தைந்து அடி நீளமானது
அகலமோ அறுபத்தியொன்று அடியானது
முருகைக் கற்களால் உயர்ந்தது
சுண்ணாம்புக் களியும் அதனுடன் சேர்ந்தது.
நூற்றுக்கணக்கில் படிக்கட்டுக்களானது
உயர் வில் வடிவில் சுவர் உண்டானது
திருப்பங்களையும் தளங்களையும் கொண்டது
அன்றைய பெறுமதியோ பதினைந்தாயிரமானது.
கட்டி முடித்து நூறாண்டு கடந்தது
இருந்தும் இது உறுதியாய் நிற்குது
பல தலைமுறைகள் கூடக் கடந்தது
நம் கண்களுக்கு இன்றும் வியப்பானது.
பரந்த பரண்கள் ஏற்பாடானது
கீழே சுரங்க அறைகளும் உண்டானது
உயர்ந்த கூரை முகடுகள் தோன்றுது
பல பொறியியலாளர்களையும் இது கவருது.
வன் செயல் நாட்டில் உண்டானது
நம்மவர் வாழ்விடம் ரெண்டானது
பாஸ் மண்டபம் அகதி முகாமானது
லட்சம் ரூபா பொருட்களும் களவானது.
மண்டபத்தின் நிலையோ உருக்குலைந்தது
பல கலைப் பொருட்களும் பழுதடைந்தது
ஆண்டுகள் பல விரைவாய் கடந்தது
பல கலைஞர்களின் உயிரும் பிரிந்தது.
ஊரின் அமைவும் விசாலமானது
சனத் தொகையின் அளவும் அதிகமானது
பாஸ் மண்டபத்தின் பயன்பாடு குறைந்தது
இன்று வௌவ்வால்களின் உறைவிடமானது.
நடக்குமோ பாஸ் என்ற கேள்வி எழுந்தது
எம்மவர் இதயத்தை அது ஆழ குத்தியது
இளைஞர் படையணி விளித்தெழுந்தது
பெரியோரின் துணையும் அதனுடன் இணைந்தது.
காலத்தின் தேவைக்கேற்ப அரங்கு அமைந்தது
அதைப் பார்த்தவர் கண்கள் அகல விரிந்தது
இவன் பேசாலையான் என வியக்குது
நம்மவர் கலைப் பயணம் இன்றும் தொடருது.
torsdag 17. mai 2018
ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா !
ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா !
ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா ! நினைவால் என் நெஞ்சம் பிளக்கு தம்மா ! என் அண்ணனின் கல்லறை வெடிக்குதம்மா ! உள்ளக் குமுறலில் மனம் துடிக்கு தம்மா !
ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா ! நினைவால் என் நெஞ்சம் பிளக்கு தம்மா ! என் அண்ணனின் கல்லறை வெடிக்குதம்மா ! உள்ளக் குமுறலில் மனம் துடிக்கு தம்மா !
நந்திக் கடலில் என் அம்மாவின்
சதையைக் கழுவிக் கரைக்கையில்
ஒட்டிய ரத்தம் இன்றும் மணக்குதே!
பட்டினிக் கடலில் மூழ்கியே மடிந்த என் தம்பியின் வயிற்றுக் குடல் நெஞ்சத்தில் கனக்குதே !சேற்றுத் தண்ணீர்
செங்குருதி கொப்பளிக்க,
மேனிப் புண்களில் சகதி வறண்டு
சாக்கடை வாசம் தெளிக்க,
கிரவல் தண்ணீரில்
நாவை நனைத்ததை
நினைத்திட வலிக்குதே !
பகையே அறியா பருவக் குருத்துக்கள் உலோகக் கோல்களால்
உரசிச் சரிந்ததை நினைத்தால்
நெஞ்சம் பிளக்குதே !
வெண்ணுடலின் புண்ணுடல் ஆற்றிட,
பச்சிலை பறித்ததை
உள்ளம் நினைக்குதே!
வடலிக் கருக்கில் குடலைப் பிழந்து
அழுகிய துண்டை வீசினோம்.
தமிழின் அம்மனப் படுக்கை
நிலையைக் கண்டு
அனுதாப அலைகளை வீசினோம் !
விடத்தல் முள்ளால் உடம்பில் புதைந்த தோட்டாக்கள் அளந்தோம்!
மொட்டக் கத்தியால் முள்ளந் தண்டுகள் வெட்டிப் பிளந்தோம்!
பீரிட்ட குருதியை பீரங்கி தடம் தந்த மண்ணள்ளித் தடுத்தோம்!
வேர் விட்ட விழுதுகள்
தூரோடு குடை சாய
வாய் பொத்தி அழுதோம்!
கருவுக்குள் சிசுவுக்குச்
சமாதிகள் - வெந்தோம்!
எம் குறும்புகள் உடல் மீது
எறும்பூறக் கண்டோம்!
வன்னி நிலங்களை
வயிற்றால் உழுது,
குருதிப் புலங்களைக் கட்டி அழுது,
உரமாய் புதைத்த
தமிழ்த்தாயின் புதல்வரை ,
மரமாய் வியந்து மரியாதை செய்கிறோம் .
வலியை சுமந்தும் கருவைப் பிசைந்தும் உடலைச் சிதைத்திட்ட போதிலும் ,
எம் கனவைச் சுமந்து மணலில் புதைந்த உறவின் நினைவில் கூடுவோம் !
மே 18 எம் உணர்வலைகளை முகாரியாக்கி மனிதம் தொலைத்தோர் செவிப்பறைகளில் பெருவெடிப்பை உதிர்க்கட்டும் !
# கவிதையின் காதலன், பேசாலை .
ஒத்தை நாவல் மரம்
ஒத்தை நாவல் மரம்.....
Emat Croos
செல்லும் வீதியின் வலப் புறம்உயர்ந்து நிற்கும் தனிமரம்
குறிப்புக் காட்டும் ஒத்தை நாவல் மரம்.முளைத்து நிற்கும் நாம் பார்க்குமிடம்
இருந்தும் பெற்றதில்லை அவை சிறப்பிடம்
ஒத்தை நாவல் போல் தனியிடம்.
காய் கனி தந்திருந்தது பின்னைய நாளில்
மறுப்புச் சொல்வதற்கில்லை இவ்விரு நாளில்
முதிர்ச்சியால் பலன் ஓய்ந்தது இன்றைய நாளில்.
களைப்பாறும் அதன் நிழல் வாட்டம்
எடுத்த விறகை ஒன்று கூட்டும்
தலையில் சுமந்து வரும் மயிலாட்டம்.
கூடை மீனைத் தோளில் தாங்கி
தண்ணித்தாளை நின்று வீடு நோக்கி
வழியில் ஓய்வெடுப்பார் இதில் தங்கி.
ஊரில் இருந்து பார்க்கையிலே
இதன் இருப்பிடமோ அடர்ந்த காட்டினிலே
நம் கண்களுக்குத் தெரியும் தூரத்திலே.
ஊரும் பெருத்தது நாலா திக்குமாய்
குடிமனை காணிகள் அமைந்தது நெருக்கமாய்
ஒத்தை நாவலும் தெரியுது பக்கமாய்.
அதனுள் அழகிய கூடமைத்து
புனித அந்தோனியார் சுரூபம் வைத்து
வேண்டுதல் செய்தோம் அவர் செயல் நினைத்து.
வீழ்த்தியது அதை உடைத்துத் தள்ளி
பின் வாங்கவில்லை அதன் நிலையை எண்ணி
உருவாகியது அவ்விடம் புதிய பள்ளி.
பேய் பிசாசு அலையுதென்பார் சிறியார்
பில்லி சூனியம் நடக்குதென்பார் அறியார்
யாவையும் அடக்க வருகிறார் புனித அந்தோனியார்.
நம்ம காட்டில் உண்டு பல நாவல் மரம்
அதிகம் பூத்திருந்தது முன்னைய நாளில்
விறகெடுக்கும் பெண்கள் கூட்டம்
காவு தண்டி கூடை தூக்கி
முன்னைய ஆண்டு காலத்திலே
காலங்கள் கடந்தது வேகமாய்
ஒத்தை நாவல் குடைந்தெடுத்து
காலத்தின் சூது கவ்வி
முனிப்பாய்ச்சல் உண்டென்பார் பெரியார்
Abonner på:
Innlegg (Atom)
-
நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா) ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள்...
-
பணங்கா வாடி கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும், புளிச்ச வாசத்தில் வண்டுருளும், வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, அருவா கத்திய துணைக்கு வச்சு...









Emart Croos





