பேசாலை துறை முகமும் எலிப்பொறியியலாளர் சங்கத்தின் அறிக்கையும்; பேசாலைதாஸ்
பொறியலாளர்களின் அறிக்கையை ஆய்வு செய்யுமுன், இரு திட்டங்கள் தொடர்பாக என் உறவுகளுக்கு விளக்கம் அளிக்க ஆசைப்படுகின்றேன். முதலாவது சீனாவின் முத்துமாலை திட்டம், அடுத்தது இந்தியாவின் சாஹர்மாலா திட்டம். சீனாவின் முத்து மாலை திட்டமானது தெற்கு ஆசியா பகுதியில், சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ கேந்திரங்களை ஸ்திரப்படுத்தலும், சீனாவின் ஆழ் கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்கும் உருவாக்கப்பட்டது. முக்கி யமாக இந்தியாவை குறிவைத்து இந்த திட்டம் உருவாக்கட்டுள்ளது. இந்த திட்டத்தின் உதவியுடன் கொழும்பு துறைமுகம், காலிதுறைமுகம் என்n பன புணரமைக்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல யாவா சுமாத்திர, கொங்கொங் போன்ற நாடுகளிலும் முத்துமாலை திட்டம் உருவா க்கடுகின்றது.
இதற்கு எதிராக உருவாக்கப்பட்டதே இந்தியாவின் சாஹர் மாலா திட்டம், இந்திட்டத்தின்படி இலங்கையின் வட பகுதி, தென் இந்திய கரையோர பகுதியில் துறைமுக பட்டிணங்களை உருவாக்கி அதன் மூலம் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இதனை அமுல்படுத்துகின்றது. இந்த இரு திட்டத்தின் எதிர்வினையானது ஈழத்தின் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அதற்கான போராட்டத்தின் தார்மிக நியாயத்தை அடக்கியுள்ளது
nnnசீனா மற்றும் இந்தியாவின் இந்த திட்டங்களுக்கு எதிராக ஈழ மக்களின் தனிநாட்டு அரசியல் போராட்டம் பாதமாக அமையும் என்ற காரணதினால், சர்வதேசம், சீனா உட்பட எல்லா நாடுகளும் இணைந்து ஈழ போராடத்தை அடக்கியுள்ளது. விடு தலை புலிகள் மட்டுமல்ல, வேறு எந்த இயக்கம் கூட இப்போராடத்தை முன்னெடுத்தாலும் அது அடக்கப்படும். தமிழர்களின் உரிமை மறுக் கப்படும். எனவே இந்த திட்டத்தின் வழியாக வ்ரும் துறை முகம் தமிழ ர்களின் உரிமையை மதிக்குமா? என்பதனை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!
இனி பொறியியலாளர் அறிக்கைக்கு வருவோம். இந்த அறிக்கையில் ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆழ்கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கின்றது? வழக்கமாக நடுக்குடா கடலை ஆண்கடல் என்றும் பேசாலை கடலை பெண்கடல் என்றும் எம்முன்னோர் கூறினார்கள், ஏனெனில் நடுக்குடா கடலானது நேரடியாக இந்து சமுத்திரத்தோடு இணைந்துள்ளது, அதுபோல பருத்திதுறை தொடக்கம் காலி வரை வங்காள விரிகுடா பெருங்கடலோடு இணைகின்றது.. மன்னார் தீவின் வடக்கே பாலைதீவு, நெடுந்தீவு கச்சை தீவு, இரணைதீவு உட்பட தமிழகத்தின் இராமேஸ்வரம் நாகபட்டிணம் பாக்கு நீரிணையால் முடக்கப்பட்ட ஓர் வலயமே பேசாலை கடல், கடல் என்றுதான் அழைக்கலமே தவிர ஆழ் சமுத்திரம் என்று அழைக்கமுடியாது! இங்கு பிடிக்கப்படும் மீன்கள் ஆழ்கடல் மீன்கள் அல்ல, எப்போதாவது சூரை மீன் பேசாலை கடலில் பட்டதுண்டா? ஆழ்கடலில் இறால்படுமா? நண்டு கணவாய் பிடிபடுமா? எப்படி பேசாலை கடலில் ஆழ்கடல் மீன்பிடியை எதிர்பார்க்கமுடியும்?
ஆழ்கடல் தொழிலுக்கு பெரிய படகுகள் அதாவது 11 தொன் எடைக்கு கூடிய பெரிய கப்பல்கள் தேவைப்படும், தற்பொதுள்ள இழுவை படகு நெடுந்துரம் சென்று மீன்பிடிக்க உகந்தவை அல்ல! ஒவ்வொரு பெரும் படகுகளும் சுமார் 75 இலட்சத்துக்கு மேற்பட் டவை அதாவது ஆறு சிலிண்டர் இயந்திரம் பொருத்திய ( Leyland Tata) லொறி இயந்திரம் பொருத்தப்படவை. அதனை எத்தனை பேசாலை மக்கள் வாங்க முடியும்? எனவேஇந்த துறைமுகம் பேசாலை மக்களுக் கானது அல்ல! அந்த பெரிய படகுகள் இந்து ஆழ் சமுத்திரத்து போகவே ண்டுமானால் தீடைகள ஊடறுக்கவேண்டும் அல்லது சோழக காலங்க ளில் பாக்கு நீரிணை கடந்து வங்காள விரிகுடாவுக்குள் இறங்க வேண் டும். இது சாத்தியமான ஒரு விடையமா?
பொறியியலாளர் அறிக்கையே,இதனை மறை முகமாக ஒத்துக்கொண்டுள்ளது, அதாவது சிங்களவர்களின் படகின் வருகையால் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்ற பேசாலை மக்களின் கேள்விக்கு பதிலாக, சிங்களவரின் பெரும் படகுகள் தீடைகளை ஊடறுத்து வரமுடியாது எனவும், பாக்கு நீரினையால் வருவதென்றால், அவர்கள் பருத்திதுறையில் உள்ள துறை முகம் கடந்து வரவேண்டிய அவசியம் இல்லை என்கிறது. அப்படியானால் பேசாலை கடலில் தரித்து நிற்கும் பெரும் படகு மட்டும் எப்படி ஆழ்கடலுக்கு செல்லமுடியும்? பேசாலை மற்றும் இரணைதீவ் அடங்கலான இந்த சின்ன கடலை ஆழமாக்கப்போகின்றார்களா? புத்திசாலி பொறியியலார்கள் சற்று யோசித்திருக்கவேண்டும்?
இன்னொருவிடையும், துறைமுகத்தில் வ்ரும் கடைகள் வியாபார ஸ்தாபனக்கள் பேசாலை மக்களுக்கு கொடுக்கப்ப டுமாம்? யாரை ஏமாற்றுகின்றார்கள். பேசாலை புகையிரத காணியில், சாவன்னா பெரும் கடை திறந்து இருக்கின்றார் அதனை பேசாலை மக்கள் ஆலைய பங்கு சபை எதிர்த்தும் பயனில்லை அது அரசியல் செல்வாக்கினால் ஊரின் மத்தியில் உள்ள பெரும் கடை முஸ்லிம் வியாபாரிக்கு சென்றது மட்டுமல்ல, எணைய பேசாலை மக்களின் வியாபாரத்துக்கே சவாலாக அமைந்துள்ளது. இது மீண்டும் நடக்கது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பொறியியலளர் அறிக்கைப்படி 1983 ஆண்டில் 40% இருந்த மீன் உற்பத்தி 2015 இல் 15 விழுக்காடு குறைந்தது என்றும் இதற்கு காரணம் ஆழ்கடல் மின்பிடி இல்லை என காரனம் காட்டப்படுள்ளது. இது அப்பட்டமான பொய்! 1972 பிறகு இலங்கை அரசாங்கமானது மரபு ரீதி யான தெங்கு தேயிலை றப்பர் போன்றவை களுக்கு எதிராக மரபு ரீதியற்ற இறால், கடலட்டை கணவாய் நண்டு இவைகளை ஏற்றுமதி செய்வதினை ஊக்குவித்ததினால், இறாலுக்கு கிராக்கி அதிகம் எகிறி தங்கவிலைக்கு சென்ற பொழுது, பேராசை கொண்ட சில பேசாலை (கு )பட்டம் கொட்ட சில குடும்பத்தால் (பெயர் சொல்ல விரும்பவில்லை) இழுவைப்படகு பேசாலைக்கு கொண்டுவரப்பட்டது, அதில் வந்த சாபேக்கேடே இன்று நாம் அனுபவிப்பது! ட்றோலர் வந்த புதுசில், புதுப்பணக்கார்களும் (நாங்களும் உட்பட) டொயோட்டா கார்களும் வலம் வந்தன, இறால் குத்தகை அதனால் சிலர் திடீர் பணக்காரர்கள் ஆனார்கள். அன்னை மாதாவுக்கும் நல்ல வருமானம்தான்! சூறையாடும் பொருளாதார கட்டமைப்பு என்று அறியாமல் எமது வளங்களை நாமே அழித்தோம்! பற்றாக்குறைக்கு இந்தியக்கரன் உட்பட் இந்த அழிவுக்கு துணைபோனான்.
என் உறவுகளே! எண்ணிப்பாருங்கள்! பேசாலை என்பது பணத்தோட்டம் என அழைக்கப்பட்டது! கரைவலைகாரன், விடுவலை காரன், பாச்சுவலைகாரன் இவர்களின் மனைவிமார்களின் கழுத்தில் குறைந்தது பத்து பவுன் தாலியாவது தொங்கும் இப்போது எமது குமர் களின் கழுத்தில் ஒரு பட்டு நூல் போல் சின்ன ஒரு சங்கிலி! அவ்வளவுக்கு நாம் தேய்ந்து போனோம்! சூரை பட்டு அது தாளாமல் மடிகிழியும்! கத்தாளை பேச்சாலை மடி மடியாய் படுமே! கெழுறுபட்டால், எமது ஊரை நோக்கி படை எடுத்த உம்மாக்காள் எங்கே? வருடம் தோறும் மீன்பிடி, எங்கள் பெத்தாச்சி மால் முடித்தே தாலி செய்தாளாம், மாதாவுக்கு எங்கள் அம்மாக்கள் மால் பொத்தித்தான் அவ்வளவு நகையும் தேடினார்களாம், கம்பாங்கயிறு முறுக்குதல், வலைதெரிதல் அப்பப்பா எத்தனை சிறு தொழில்கள், அத்தனையும் அற்று போய்விட்டதே! என இரத்தகண்ணீர் ராதா மாதிரி நம்மை புலம்ப வைத்தது இந்த நாசாமாய்ப்போன ட்றோலர்தானே! அதை பாதுகாக்க ஒரு துறை முகமா?
அறிக்கை மேலும் சொல்கின்றது 200 மேற்பட்ட ட்றோலர் இருப்பதினால் துறைமுகம் தேவை என்கின்றது, தெப்பம் விடுவலை போன்ற பாதிக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு நஸ்ட ஈடாம்! முதலில் ஒவ்வொரு மீனவனுக்கும் காப்புறுதி திட்டம், ஓய்வு ஊதிய திட்டம் இவைகளை அமுல்படுத்த சொல்லுங்கள், புத்திசாலியான எலிப்பொறி யியலாளர்களே! நண்டு வளர்ப்பு கண்வாய் வளர்ப்பு இத்ற்கெல்லாம் பயிற்சி நிலையம் துறைமுகத்துக்குள் வருமாம்! ஏன் இப்ப அதனை ந்டைமுறைபடுத்தலாமே?
என் உறவுகளே சிங்கள ஆட்சியாளர்களின் இந்திய சதிவலைகளுக்குள் சிக்கிவிடாதீர்கள், முடிந்தவரை மீன்வளங்களை சூறையாடும் அழித்தொழிக்கும் இழுவை சுருக்கு பட்டாசு இவைகலி மற்ந்து மீண்டும் எமது பாரம்பரிய மரபு சார்ந்த கரைவலை பாய் ச்சுவலை தொழிலுக்கு மாறுவோம், நமது கடல் எல்லைகளூகூ அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய கஇழுவைகளை மடக்கி பிடிப்போம் முன்பும் பிடித்தோம் இப்பவும் அதை செய்வோம், ட்ரோலர் உரிமையாளர்களே பாய்ச்சுவலை ஏற்றி, புத்திசாலி எலிப்பொறியியலார்கள் சொல்லும் ஆழ் கலுக்குத்தான் சென்று மீன்பிடிக்க முயற்ச்சிசெய்யுங்கள், கண்ணை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
onsdag 3. oktober 2018
fredag 28. september 2018
அபிவிருத்தியா? இன அழிவா? பேசாலை துறைமுகம் சார்ந்த கேள்வி!
அபிவிருத்தியா? இன அழிவா? பேசாலை துறைமுகம் சார்ந்த கேள்வி! பேசாலைதாஸ்
அன்பர்களே பேசாலை கிராமத்தை துறை முக நகரமாக்கல் பற்றிய க்ருத்து பரிமாற்றம் பரவலாக இடம் பெறுகி ன்ற இவ்வேளையில் சில அம்சங்களை நாம் நினைவில் கொள்ளவேண் டும்! தமி ழர் பாரம்பரிய நிலங்களில் பொருளாதர அபிவிருத்தியை முன் னெடுக்கின்றோம், அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடி க்கை என்ற பெயரில் அவசர அவசரமாக பல திட்டங்களை அரசு செய்ய முற்படுவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இனவாத அரசுகள் ஒருபோதும் எண்ணி யது கிடையாது, மாறாக சுயசார்பு பொருளாதாரத்தில் இருந்து, தன்னில் முற்றுமுழுவதுமாக தங்கி இருக்க செய்யும் திட்டஙளையே முன்னெடுக் கின்றது, அதற்குள் சிங்கள குடியேற்றம், பெளத்த மத நிலநாட்டல் இடம் பெறுகின்றது. குறிபாக மாகாவலி அபிவிருத்தி நல்லதோர்பாடம், தற்போதும் ம்காவலி எல் திட்டம் வன்னியில் அமுலாகப்பட்டு, வன்னி நிலம் பறிபோகின்றது.
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பு பேசாலையில் டின் மீன் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது, ஆசியா விலே பிரமாண்டமான தொழில்சாலை அது, அதற்கு என்ன நடந்தது? பேசாலையில் எண்ணெய்வளம் இருப்பதாக தெரிந்து கொண்டும், அதற்கான வேலைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? அதற்கான முழு குத்தகையும் ஆள்புல அதிகாரத்தையும் இந்தியா கோரிநிற்கின்றது. முதலில் புலிகளை அழிக்க உதவுங்கள், பின்னர் எண்ணெய் பற்றி சிந்தி க்கலாம் என்று சொன்ன இலங்கை, இன்று இந்தியாவை ஏமாற்றுகின் றது. தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், அதுவும் முடியாது, இந்தியாவே பாலம் அமைத்து தர முன் வந்த பொழுதும், இலங்கை பின் வாங்குகின்றது, காரனம் அது தமிழர்க ளின் குறிப்பாக மன்னார் தீவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் என்ற நோக்கம்!
பேசாலையில் பாரிய துறைமுகம் அமைக்கும் அவசியம் என்ன? பேசாலை மக்களின் மீது அரசு கண்ட அக் கறையா? சரியாக சிந்தியுங்கள், பேசாலை கிராமம் தீவின் நட்ட நடுவே இருக்கின்றது, பேசாலை கடல்கரையில் ஒரு தளம் அமைத்தால், அதன் உதவியினால், மன்னார் வளைகுடாவை, தன் கண்காணிப்புக்குள் கொண்டுவரமுடியும், இரணை தீவு, பாலைதீவு, கச்சைதீவு நெடுந்தீவு போன்ற பல தீவுகளை கண்காணிக்கமுடியும்.. நமக்கு நன்றாக தெரியும் மன்னார் வளைகுடாவுக்குள் தரித்து நிற்கும், கடற்படைக்களம், வாடை காற்று பருவத்தில், தரித்து நிற்க முடியாது, கடற்படைகளம் யாவும் பாக்கு நீரிணையை ஊடறுத்து, இலங்கையை வலம் வந்துதான், நடுக் குடாவுக்கு செல்லமுடியும். பேசாலையில் பாரிய வீதியுடன், துறைமுகம் அமைத்துவிட்டால் எல்லாமே இலகுவாக இருக்கும், இதனை புலிகளு டனான யுத்தத்தில் இலங்க கடற்படை நன்றக உணர்ந்திருந்தது எனவே பேசாலை துறைமுகம் என்ற போர்வையில், கடற்படைத்தளத்தை விரிவா க்கும் உள்னோக்கம் இருக்கின்றது எனது ஊகம்!
உண்மையில் இதய சுத்தியோடு தமிழர்களின் பொருளாதர மற்றும் நலனில் அக்கறை கொண்டிருக்குமா னால, மன்னார் ஆதார வைத்தியசாலையை தரம் உயர்த்த சொல்லுங் கள், மன்னார் மாவட்டத்தில் பொறியியல், தொழில் நுடப் கல்லூரிகளை நிறுவ சொல்லுங்கள், மன்னார் மாவட்டத்தில், நாலந்த றோயல் கல்லூ ரிகளின் தரத்துக்கு ஒப்ப,ஆங்கிலமொழி போதனையுடன் கூடிய, கல்லூ ரிகளை நிறுவச்சொல்லுங்கள், உள்ளூர் கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிக்க, விவசாய கடன்கள் , மாடு ஆடு கோழிவளர்ப்புக்கு உதவி செய்ய சொல்லுங்கள், இவைகள் தான் உண்மையில் ஏழை மக்களின் பொருளாதரம், இலங்கை பொருளாதாரத்தை மேன்மை அடையச் செய்யும். இது எதனையும் இனவாத அரசு செய்யமுன்வராது என்பது உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் துறை முகம் என்ற பொய்முகத்துக்கு இடம் கொடுத்தால் உங்கள் இருப்பை, உங்கள் அழிவை நீங்களே தேடிக்கொள்கின்றீர்கள். அன்புடன் பேசாலைதாஸ்
அன்பர்களே பேசாலை கிராமத்தை துறை முக நகரமாக்கல் பற்றிய க்ருத்து பரிமாற்றம் பரவலாக இடம் பெறுகி ன்ற இவ்வேளையில் சில அம்சங்களை நாம் நினைவில் கொள்ளவேண் டும்! தமி ழர் பாரம்பரிய நிலங்களில் பொருளாதர அபிவிருத்தியை முன் னெடுக்கின்றோம், அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடி க்கை என்ற பெயரில் அவசர அவசரமாக பல திட்டங்களை அரசு செய்ய முற்படுவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இனவாத அரசுகள் ஒருபோதும் எண்ணி யது கிடையாது, மாறாக சுயசார்பு பொருளாதாரத்தில் இருந்து, தன்னில் முற்றுமுழுவதுமாக தங்கி இருக்க செய்யும் திட்டஙளையே முன்னெடுக் கின்றது, அதற்குள் சிங்கள குடியேற்றம், பெளத்த மத நிலநாட்டல் இடம் பெறுகின்றது. குறிபாக மாகாவலி அபிவிருத்தி நல்லதோர்பாடம், தற்போதும் ம்காவலி எல் திட்டம் வன்னியில் அமுலாகப்பட்டு, வன்னி நிலம் பறிபோகின்றது.
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பு பேசாலையில் டின் மீன் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது, ஆசியா விலே பிரமாண்டமான தொழில்சாலை அது, அதற்கு என்ன நடந்தது? பேசாலையில் எண்ணெய்வளம் இருப்பதாக தெரிந்து கொண்டும், அதற்கான வேலைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? அதற்கான முழு குத்தகையும் ஆள்புல அதிகாரத்தையும் இந்தியா கோரிநிற்கின்றது. முதலில் புலிகளை அழிக்க உதவுங்கள், பின்னர் எண்ணெய் பற்றி சிந்தி க்கலாம் என்று சொன்ன இலங்கை, இன்று இந்தியாவை ஏமாற்றுகின் றது. தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், அதுவும் முடியாது, இந்தியாவே பாலம் அமைத்து தர முன் வந்த பொழுதும், இலங்கை பின் வாங்குகின்றது, காரனம் அது தமிழர்க ளின் குறிப்பாக மன்னார் தீவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் என்ற நோக்கம்!
பேசாலையில் பாரிய துறைமுகம் அமைக்கும் அவசியம் என்ன? பேசாலை மக்களின் மீது அரசு கண்ட அக் கறையா? சரியாக சிந்தியுங்கள், பேசாலை கிராமம் தீவின் நட்ட நடுவே இருக்கின்றது, பேசாலை கடல்கரையில் ஒரு தளம் அமைத்தால், அதன் உதவியினால், மன்னார் வளைகுடாவை, தன் கண்காணிப்புக்குள் கொண்டுவரமுடியும், இரணை தீவு, பாலைதீவு, கச்சைதீவு நெடுந்தீவு போன்ற பல தீவுகளை கண்காணிக்கமுடியும்.. நமக்கு நன்றாக தெரியும் மன்னார் வளைகுடாவுக்குள் தரித்து நிற்கும், கடற்படைக்களம், வாடை காற்று பருவத்தில், தரித்து நிற்க முடியாது, கடற்படைகளம் யாவும் பாக்கு நீரிணையை ஊடறுத்து, இலங்கையை வலம் வந்துதான், நடுக் குடாவுக்கு செல்லமுடியும். பேசாலையில் பாரிய வீதியுடன், துறைமுகம் அமைத்துவிட்டால் எல்லாமே இலகுவாக இருக்கும், இதனை புலிகளு டனான யுத்தத்தில் இலங்க கடற்படை நன்றக உணர்ந்திருந்தது எனவே பேசாலை துறைமுகம் என்ற போர்வையில், கடற்படைத்தளத்தை விரிவா க்கும் உள்னோக்கம் இருக்கின்றது எனது ஊகம்!
உண்மையில் இதய சுத்தியோடு தமிழர்களின் பொருளாதர மற்றும் நலனில் அக்கறை கொண்டிருக்குமா னால, மன்னார் ஆதார வைத்தியசாலையை தரம் உயர்த்த சொல்லுங் கள், மன்னார் மாவட்டத்தில் பொறியியல், தொழில் நுடப் கல்லூரிகளை நிறுவ சொல்லுங்கள், மன்னார் மாவட்டத்தில், நாலந்த றோயல் கல்லூ ரிகளின் தரத்துக்கு ஒப்ப,ஆங்கிலமொழி போதனையுடன் கூடிய, கல்லூ ரிகளை நிறுவச்சொல்லுங்கள், உள்ளூர் கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிக்க, விவசாய கடன்கள் , மாடு ஆடு கோழிவளர்ப்புக்கு உதவி செய்ய சொல்லுங்கள், இவைகள் தான் உண்மையில் ஏழை மக்களின் பொருளாதரம், இலங்கை பொருளாதாரத்தை மேன்மை அடையச் செய்யும். இது எதனையும் இனவாத அரசு செய்யமுன்வராது என்பது உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் துறை முகம் என்ற பொய்முகத்துக்கு இடம் கொடுத்தால் உங்கள் இருப்பை, உங்கள் அழிவை நீங்களே தேடிக்கொள்கின்றீர்கள். அன்புடன் பேசாலைதாஸ்
søndag 16. september 2018
பேசாலை கிராமத்துக்கு துறைமுகம் தேவைதானா?
பேசாலை கிராமத்துக்கு துறைமுகம் தேவைதானா? பேசாலைதாஸ்
அன்பர்களே! பேசாலையில் அமையவிருக்கும் துறைமுகம் சார்ந்த எனது பதிவை முன்பு எழுதினேன்.இப்போது அதன் சாதக பாதக நிலைமகளை எனது சிற்றறிவுக்கு எட்டியவையில், உங்கள் முன் வைக்கின்றேன். முதலாவதாக எமது கிராமத்தின் மீன்பிடி தொழிலை எடுத்துக்கொண்டால், இழுவைப்படகினால் செய்யப்படும் தொழில் முறையை முற்றாக கைவிடவேண்டும். ஆனால் அதற்கு இந்தியாவின் இழுவைபடகு தொழில் பெரும் தடையாக இருக்கின்றது. கடந்த சுனாமியின் தாக்கத்தினால், ஜோர்ஜ் மற்றும் பேதுரு திடல்களில் இருந்த பவளப்பறைகள் பெருமளவு சேதம் அடைந்தன, இதனால் மீன்களுக்கு தேவையான பிளாங்டன் கடல்தாவரம், மற்றும் நுண்மீனுண்ணிகள் அழிந்தன், இதனால் மீன் உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்தது. இருக்கின்ற மீன் வளங்களை இழுவைப்படகின் பலகையால் அடிவாரி இழுப்பதால், மீன் குஞ்சுகள் முட்டைகள் முற்றாக அழிகின்றன. பற்றாக்குறைக்கு சுருக்கு வலை, பட்டாசு இவைகளினால் பெருமளவு மீன்வளம் குன்றிப்போய்யுள்ளது.இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதனை நாம் ஆய்வு செய்தல் வேண்டும். முதற்கட்டமாக எமது ஊரின் கடல் எல்லைக்குள். இழுவைப்படகு முற்றாக தடை செய்யப்பட வேண்டும். அத்துமீறி வ்ரும் இந்திய இழுவைபடகு அதன் பலகை, மடி, வலை ஏன் இழுவைப்படகே சேதம் அடையும் அளவுக்கு, எமது கடல்பரப்புக்குள் தடைகளை ஏற்படுத்தவேண்டும். பாரிய இரும்பு, மரங்கள், பெரும் கற்கள் கொண்டு கடலில் போடப்படுவதினால், அதில் உற்பத்தியாகும் பவளம், மற்றும் ஒட்டுண்ணி தாவரங்கள், கணவாய் முட்டைகள், என்பன பாரிய அளவில் பெருகும் வாய்ப்புகள். உண்டு. எமது பாரம்பரிய கரவலை தொழிலில் மரங்கள் கடலில் போடப்படுவதும். வள்ளத்தின் அடியில் புழால் எண்ணை தடவுவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எனவே எமது பாரம்பரிய, மரபு தொழிலுக்கு சற்றும் ஒத்துவராத இழுவைப்படகை எமது ஊரின் நன்மை கருதி, கைவிடவேண்டும். அந்த இழுவைப்படகு ஒன்றுக்கு மட்டுமே துணை போகும் இந்த துறைமுக வசதி எமது ஊருக்கு நன்மை அளிக்கப்போவதில்லை!
புயல்காலங்கலில் எமது வள்ளங்கள், படகுகளை காப்பாற்ற பாதுகாப்பான இடம் தேவை என்று நீங்கள் எதிர்வாதம் செய்யலாம். அதற்காக கோந்தைப்பிட்டிக்கு ஓடவேண்டிய அவசியம் இல்லை. கடல் நீரை நிலப்பரப்புக்குள் உள்வாங்கி செய்யப்படும் துறை முகத்தைவிட, கடற்கரையில் இருந்து கடலுக்குள், மண்ணையும் கற்களையும் கொண்டு, குடாவடிவிலான செயற்கை அனையை எமது ஊர்மக்களின் சிரமாதானம், மற்றும் சிறு பணமுதலீட்டுடன் இதனை செய்யலாம். அதனை எமது ஆலைய பங்குசபை செய்வதற்கு முன்வரவேண்டும். சிறிது சிறிதாக ஐந்து வருட எல்லையில் இதனை செய்யலாம். இதனால் இயற்கையான கடல் அரிப்பில் இருந்து, குறிப்பிட்ட எல்லைகளையாவது இது காப்பாற்றும். எதிர்கால சந்ததிக்கு, எமது ஊரிலே கடல் பாதுகாப்போடு கூடிய அணை வீதியை அமைத்து கொடுக்கலாம்.
பல்தேசிய (காபரேட்டு) உதவிகள் மூலமாக வரும், எந்த திட்டங்களையும் எமது கிராமம் உள்வாங்குவதினால் ஏற்படப்போகும் அபயங்களை உய்த்தறியவேண்டும்! ஆசிய அபிவிருத்தி என்ற எண்ண வடிவமே, முற்றும் முழுதும் சர்வதேச பல்தேசிய அபிவிருத்த்யின் நோக்கத்துக்கு உட்பட்டது. அதனால் சாதாரன உள்ளூர் மீனவனுக்கு என்ன இலாபம் என்பதனை அறியவேண்டும். இழுவை படகுகளின் தரிப்பிடத்துக்கும், பழுது பார்பதற்கு மட்டுமே இது எமது ஊரவனுக்கு பயண்படும். இழுவைபடகே சாபம் என்கின்றோமே! ஐஸ் தொழில்சாலை வரும் என்கின்றார்கள். உள்ளூர் மீனவனுக்கே சாப்பிட மீன் இல்லை. இதில் ஏற்றுமதிக்கு ஐஸ் தேவைதானா?
பேசாலைப்பாடு பேசாலை ஊரவனுக்கும் பேசாலைபங்குக்கும் உரியது! எமது மனைவிமாரை அடுத்தவனுக்கு கொடுத்தாலும், எமது பாட்டை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்கின்ற எனது ஊரவனின் மனக்கிடக்கையை சற்று எண்ணிப்பார்க்கவேண்டும். உத்தேச துறைமுகத்தின் அதிகார பிரயோகம், தீர்மானம் யார் கையில்? பேசாலை ஆலைய நிர்வாகத்திடமா? பல்தேசிய நிறுவணத்திடமா? அரசாங்கத்திடமா? இது முக்கியமான கேள்வி! ஜாக்கிரதையாக இருங்கள், என் உறவுகளே! அபிவிருத்தி என்ற போர்வையில், தமிழ் கிராமங்களின் தனித்தன்மை சிதறடிக்கப்பட்டு, அதன் வழியாக இனக்கலப்பு செய்து, தமிழருக்கான தேசிய எண்ணத்தை சிதைக்கும் மறுவடிவம் அபிவிருத்தி என்கின்ற செப்படி வித்தை என்பதனை கண்டுகொள்ளுங்கள்! நான் உண்மையில் அபிவிருத்திக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அபிவிருத்தியும், இன சிக்கலுக்கான தீர்வும் ஒரே பாதையில் முன்னெடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றேன். புண்ணில் இருக்கும், அழிக்கும்கிருமிகளை அகற்றாமல், புண்ணுக்கு துணிகட்டி மறைப்பது போல, நல்லாட்சி அரசு அபிவிருத்தி என்ற நாடகத்தை நடத்துகின்றது. எல்லா அபிவிருத்திகளும், பொருளாதார நலன்களும் ஒரு இரவோடு இரவாக இனவாத பூதம் விழுங்கிவிடும். ஜாக்கிரதை!
மீன்பிடியில் தலைசிறந்த நோர்வே நாட்டில் நான் வசிக்கின்றேன். அங்கிருக்கின்ற கடலோடு உறவு கொண்ட, சிறு சிறு குட்டைகளும், குடாக்கரைகளும், கற்பாறைகளும், அதன் இடுக்குகளும், நோர்வே மீன் வளத்துக்கு துணை போகின்றன. மீன்கள் குஞ்சி பொறிக்க இப்படியான நீர் நிலைகள் அவசியம். தாழஞ்செடிகள், சவுக்கு பற்றைகள் இவைகள் எமது கடற்கரையில் உண்டு எமது மீன்வளத்தை பெருக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. நான் கோடை விடுமுறைகளில் கிரேக்க தீவுகளுக்கு சென்றுவருகின்றேன். அங்குள்ள கடற்கரைகளை விட எமது கடற்கரை அழகானவை ஆனால் பராமறிப்பு இல்லை. காகிதப்பூக்கள்(போகன்வெலா) இதுதான் கிரேக்க கடற்கரையோரம் வளர்க்கபடுகின்றன, சுத்தமான வெண்மணல் கடற்கரை அழகிய பூக்கள், வெப்பம், இதுதான் கிரேக்க கடற்கரையின் இரகசியம். அது எமது ஊரில் இல்லையா? கிரேத்தா என்ற தீவு, மன்னார் தீவு போல இரு மடங்கு, தினம் தோறும் 10 விமானம் வந்துபோகின்றது, அப்படியானல் அந்த தீவின் வருமானம் பற்றி எண்ணிப்பாருங்கள்!
இவனுக்கு என்ன வெளிநாட்டில் இருந்து கொண்டு சுகமாக, சும்மா பேசுகின்றான் பேசாலைதாஸ் என்று எண்ணிவிடாதீர்கள்! . என் குடும்பம் மட்டில் சில இலட்சியத்தோடு வாழ்கின்றேன். கிட்டதட்ட வெற்றி பெற்றுவிட்டேன், விரைவில் வருவேன் என் இறுதிக்கால வாழ்வு என் ஊருக்காக, என் அன்னைக்காக என்ற எண்ணத்தோடு,,,,,,,,,,
என்றும் பேசாலைதாஸ்
tirsdag 17. juli 2018
கடவுளின்_கனவு
கடவுள் படைக்கும் முன்னும்
படைப்பின் பின்னும்
கண்ட கனவு பலிக்கின்றது
அவ்வாறு படைப்பேன்
இவ்வாறு படைப்பேன் என்றே படைத்தார்
அவ்வாறு உலகைப் படைத்தார்
இவ்வாறு மனிதனைப் படைத்தார்
அவனே மாறிக்கொண்டான்
உலகத்தையும் மாற்றிக் கொண்டான்
மாறிய மனிதன்
மார்க்கத்தைக் கண்டான்
மனதிலே ஏக்கத்தைக் கண்டான்
மன நோயையும் கண்டான்
மருந்தும் தந்தான் பலனில்லையே
உடல் நோய்களையும் கடனாக
வட்டி போட்டு வாங்கிக் கொண்டான்
தேடியது பல நாடியது சில ………
தெரு வீதிகளில் அலங்கோலமாய் நாற்றமானது கணக்கில் இல்லை
பல்கிப் பெருகச் சொன்னான்
அழுகிச் சாகச் சொல்லவில்லையே
கொடுத்து உதவச் சொன்னான்
தடுத்து சேர்க்கச் சொல்லவில்லை
கடவுள் நினைத்ததை
மனிதன் மாற்றினான்
கடவுள் மறைத்ததை
நினைவுகளில் முதலாக்கினான்
நினைத்ததையும் முடித்தான் நினையாததையும் முடித்தான்
குழப்பத்தில் தானே வீழ்ந்தான்
இறுதியில் கடவுளின்
சிந்தை துளிர்கின்றது
தன்னால் படைக்கப்பட்டவன்
தன் பிள்ளையாய் நடக்க வேண்டும்
என்ற கொள்கை சுடர் விடுகின்றது
அவன் கண்ட கனவாக……
torsdag 12. juli 2018
பத்திமாவின்_வெற்றிக்களிப்பு
நிகழ்கால வலைத்தள
முத்துக்களே
பத்திமாவின் விளையாட்டு
மெட்டுக்களே
வடபுலமே ஆட்டம் கண்ட
வல்லுநர்களே
சிறப்பொன்றும் உண்டு
முதலிடமாய்
எம்மவரே கொண்டனரே
வெற்றி புகழிடமாய்
முத்துக்களே
பத்திமாவின் விளையாட்டு
மெட்டுக்களே
வடபுலமே ஆட்டம் கண்ட
வல்லுநர்களே
சிறப்பொன்றும் உண்டு
முதலிடமாய்
எம்மவரே கொண்டனரே
வெற்றி புகழிடமாய்
வழி நடத்தி முன்னின்ற
அருட்சகோதரருக்கும்
கள வழியாடி வாகை சூடவே
ரூபண்ணாவும் துணையாக
மனம் தளராமல் நிலை முதல்
வர தடகளம் ஓடியே
முழு திறன் வெளிக்காட்டி
வெற்றிக் கொடி நாட்டியே
அருட்சகோதரருக்கும்
கள வழியாடி வாகை சூடவே
ரூபண்ணாவும் துணையாக
மனம் தளராமல் நிலை முதல்
வர தடகளம் ஓடியே
முழு திறன் வெளிக்காட்டி
வெற்றிக் கொடி நாட்டியே
ஊரார் தலைமேலே கரம்
அசைத்து இசை பாட
மாணாக்கரும் கைலாகு இட்டு
வெற்றிக் களிப்பாடிட
முதல்த் தரமாய் வெற்றியெட்டி
பத்திமாவின் புகழைப் பரப்பி
மன்னார் தாண்டியே எம்மவரின்
புகழை வடபுலத்தில் பதித்த
அசைத்து இசை பாட
மாணாக்கரும் கைலாகு இட்டு
வெற்றிக் களிப்பாடிட
முதல்த் தரமாய் வெற்றியெட்டி
பத்திமாவின் புகழைப் பரப்பி
மன்னார் தாண்டியே எம்மவரின்
புகழை வடபுலத்தில் பதித்த
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இன் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
இவண்.
பழைய மாணவன்.
பழைய மாணவன்.
søndag 1. juli 2018
கண்ணீர் துளிகள் மட்டும் ,,,,,கவிதையின் காதலன் பேசாலை 14 hrs ·
கண்ணீர் துளிகள் மட்டும்
தூது போகும் காதல் தேசத்தில் என்னவளைத்
தொலைக்கிறேன்.
என் நினைவுத் துகள்களை கோர்த்து
நெஞ்சில் வழியும் வலிகளை ஊற்றி கண்ணீர் துளியாய் வார்த்து
வானத்து அஞ்சலகத்தில்
வைப்பில் இட்டு வருகிறேன் .
காற்று சுமந்து செல்லும்
அஞ்சல் பெட்டிகளில்
கண்ணீரின் கணம்
உடையாமல் உறைந்தே கிடக்கிறது !
கால் பிடித்து சொடுக்கெடுக்கையில் உதிர்ந்த புன்னகை ,
ஆரத்தழுவி முத்தமிடுகையில்
அவிழ்ந்து வீழ்ந்த நாணம்,
உதட்டை ருசிக்கையில்
மூச்சை மோகித்த
வெப்பக் காற்று என
நினைவுகளின் கருவூலத்தை
காவிச் செல்கிறது,
அக் காற்று அஞ்சல்!
நெடிய, வலிகள் சுமந்த பயணம் என்பதால்
வைப்பில் இட்டு வருகிறேன் .
காற்று சுமந்து செல்லும்
அஞ்சல் பெட்டிகளில்
கண்ணீரின் கணம்
உடையாமல் உறைந்தே கிடக்கிறது !
கால் பிடித்து சொடுக்கெடுக்கையில் உதிர்ந்த புன்னகை ,
ஆரத்தழுவி முத்தமிடுகையில்
அவிழ்ந்து வீழ்ந்த நாணம்,
உதட்டை ருசிக்கையில்
மூச்சை மோகித்த
வெப்பக் காற்று என
நினைவுகளின் கருவூலத்தை
காவிச் செல்கிறது,
அக் காற்று அஞ்சல்!
நெடிய, வலிகள் சுமந்த பயணம் என்பதால்
இளைப்பாறும் இடங்களில்
ஊடல் தருணங்களை நினைத்து
ஓய்வைக் கழிக்கிறது, நினைவுகள்!
நாட்டு எல்லைச் சுங்கச் சாவடியில்
எனது அஞ்சல் பெட்டி புறக்கணிக்கப்பட்டதாக
முத்திரை குத்தப்படுகிறது!
வறள் நிலக் காதல்,
மழையை கேட்டால்
இயற்கை என்ன கொடுக்கவா போகிறது!
ஊடல் தருணங்களை நினைத்து
ஓய்வைக் கழிக்கிறது, நினைவுகள்!
நாட்டு எல்லைச் சுங்கச் சாவடியில்
எனது அஞ்சல் பெட்டி புறக்கணிக்கப்பட்டதாக
முத்திரை குத்தப்படுகிறது!
வறள் நிலக் காதல்,
மழையை கேட்டால்
இயற்கை என்ன கொடுக்கவா போகிறது!
நிராகரிப்பு புதிதல்ல, என்ற நிலை
என்றோ மனதில் பிறந்து விட்டது!
திருப்பியனுப்பிய கடிதம்
என்னவளைச் சேர
மாற்று வழி தேடி
புறவழிச்சாலையின் முடிவிடத்தில்
தக்க சமயம் பார்த்து
காத்துக் கிடக்கிறது!
காதலர் பூங்காவை
எல்லையில் ஊடறுத்து
தற்கொலைப் பள்ளத்தாக்கைக் கடந்தால்
என்றோ மனதில் பிறந்து விட்டது!
திருப்பியனுப்பிய கடிதம்
என்னவளைச் சேர
மாற்று வழி தேடி
புறவழிச்சாலையின் முடிவிடத்தில்
தக்க சமயம் பார்த்து
காத்துக் கிடக்கிறது!
காதலர் பூங்காவை
எல்லையில் ஊடறுத்து
தற்கொலைப் பள்ளத்தாக்கைக் கடந்தால்
சோதனைபுரியை அடையலாம்,
அதன் பின் என்னவளால்
வேதனைத் தீ அணையலாம் - என
சட்ட விரோத காதல் அஞ்சல்
கடத்தல்காரர் செவ்வியிட,
அகதியாய்
என்னவள் இதயம் தேடி
பயணிக்கிறது எனது நினைவு அஞ்சல்!
எல்லையில் நிசப்தம்!
முட்புதர் நடுவே எண்ண ஓட்டம்
என்னை கடத்திச் செல்கிறது!
என்னவள் குடிகொண்ட தேசத்தில்
யுத்த காண்டம்
ஈடேறிக் கொண்டிருப்பதாய்
அவசரத் தந்தி ஒன்று
என் நினைவுப் பெட்டகத்தை
உரசி செல்கிறது!
பதறியபடி போர்க்களத்தில்
என்னவளைத் தேடியலைகிறது ,
என் கண்ணீர் !
நினைவுச் செல்கள்
புற்றாய் அரித்ததில் பீடிக்கப்பட்டோரை
வதம் செய்யும் பட்டியலில் இணைத்து
அதன் பின் என்னவளால்
வேதனைத் தீ அணையலாம் - என
சட்ட விரோத காதல் அஞ்சல்
கடத்தல்காரர் செவ்வியிட,
அகதியாய்
என்னவள் இதயம் தேடி
பயணிக்கிறது எனது நினைவு அஞ்சல்!
எல்லையில் நிசப்தம்!
முட்புதர் நடுவே எண்ண ஓட்டம்
என்னை கடத்திச் செல்கிறது!
என்னவள் குடிகொண்ட தேசத்தில்
யுத்த காண்டம்
ஈடேறிக் கொண்டிருப்பதாய்
அவசரத் தந்தி ஒன்று
என் நினைவுப் பெட்டகத்தை
உரசி செல்கிறது!
பதறியபடி போர்க்களத்தில்
என்னவளைத் தேடியலைகிறது ,
என் கண்ணீர் !
நினைவுச் செல்கள்
புற்றாய் அரித்ததில் பீடிக்கப்பட்டோரை
வதம் செய்யும் பட்டியலில் இணைத்து
என்னவள் கொல்லப்படுகிறாள் !
கொலைக் கள ஒப்பாரிகளில்
காதல் மணந்து
என் கண்மணி கருகிட
கழுகின் கால்களில் இரையாய் சாகிறேன்!
என் கண்ணீர் அஞ்சல்
காற்றில் சாம்பலாகி
கரைந்தே விடுகிறது!
அதற்குள் என்னை விட்டு பிரிந்த
என் சீவன் அதைத் தாங்கிப் பிடித்து
நொந்து கொள்கிறது.
# கவிதையின் காதலன்.
கொலைக் கள ஒப்பாரிகளில்
காதல் மணந்து
என் கண்மணி கருகிட
கழுகின் கால்களில் இரையாய் சாகிறேன்!
என் கண்ணீர் அஞ்சல்
காற்றில் சாம்பலாகி
கரைந்தே விடுகிறது!
அதற்குள் என்னை விட்டு பிரிந்த
என் சீவன் அதைத் தாங்கிப் பிடித்து
நொந்து கொள்கிறது.
# கவிதையின் காதலன்.
søndag 17. juni 2018
மறக்குமோ நெஞ்சம்.... (17-06-2006 - 17-06-2018)
மறக்குமோ நெஞ்சம்....
ஆனதம்மா ஆண்டு பனிரெண்டு
மறையவில்லை காட்சி எம் விழியிரண்டு
கோரத் தாண்டவத்தின் பிடியில் நின்று
பாதுகாத்ததம்மா உன் கரம் அன்று.
இன வெறியர்களின் அழித்தொழிப்பு
எம்மவர் கொண்ட பரிதவிப்பு
துப்பாக்கிச் சன்னங்களின்
சலசலப்பு
இவற்றை மறக்குமோ எம் நினைப்பு.
எம்மவர் வாழ்வாதாரத்தை
எரித்தான்
அதைக் கடல் நீரோடு கரைத்தான்
அக்கினியால் எம்மை அழித்தான்
சொல்லொண்ணா துயரத்தைக் கொடுத்தான்.
கொலை வெறிப் படையினை மறித்தாய்
வீசிய குண்டின் வீரியம் குறைத்தாய்
சீறிய சன்னங்களை காலில் மிதித்தாய்
உன் பிள்ளைகள் முழுவதையும் நீ காத்தாய்.
ஊர் கூடி முழுவதும் ஓலமிட்டோம்
எம் கண்ணீர் வெள்ளத்தால் உன் பாதம் தொட்டோம்
அகலட்டும் இன்நிலை என
அபாயமிட்டோம்
உன் அன்பின் கருணையை அன்று கண்டோம்.
சில நூறு துப்பாக்கிகள் எம்மை நோக்கியது
பல நூறு தோட்டாக்கள் எம்மைத் தாக்கியது
அத்தனை வாதைகளும் பனி போலாகியது
வெற்றி அன்னையின் அருட்கரம் எம்மைத் தாங்கியது.
வாதை உன் கூடாரத்தை அண்டவில்லை
பல இரவைக் கழித்தோம் இங்கு வீடு சென்று விடவில்லை
அட்டூழியத்தின் சுவடுகள் இன்னும் மறையவில்லை
கொடிய காட்சிகளை நெஞ்சம் மறக்கவில்லை..
இவற்றை மறக்குமோ எம் நெஞ்சு?
Abonner på:
Innlegg (Atom)
-
நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா) ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள்...
-
பணங்கா வாடி கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும், புளிச்ச வாசத்தில் வண்டுருளும், வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, அருவா கத்திய துணைக்கு வச்சு...











Emart Croos