#ஆசையே_விலகிப்_போ
குப்பை மேட்டில் எரியும்
குப்பையினின்று பறக்கும் சாம்பல்
துகள்களைப் போலே மனிதனில்
இருக்கும் பண ஆசையே விலகிப் போ!
காய்ந்த மரத்திலிருந்து உதிரும்
சருகுகளைப் போல் மனிதனில்
இருக்கும் காம ஆசையே விலகிப் போ!
பருத்தி மரக்காய்கள் பழுத்து,வெடித்துப் பறக்கும் பஞ்சு போலே மனிதனில்
இருக்கும் மது ஆசையே விலகிப் போ!
இரவை ஆட்டிப் படைத்தப் பனி
பகலவனைக் கண்டதும் பணிந்து
போவது போல் மனிதனில்
இருக்கும் பதவி ஆசையே விலகிப் போ!
மனிதனுள் இருந்து மனிதனை
ஆட்டிப் படைக்கும் இவ்வளவு
பேராசைகளும் விலகிப் போங்கள்!
றோய் குருஸ் அம்புறோஸ்,
Amburose Croos Roy.
torsdag 8. mars 2018
உலக மகளிர் தினம் கவிதை
#மாதம்_மூன்று_நாட்கள்_எட்டு
#உலகமகளிர்_தினம்
ஆராரோ ஆரிரரோ
அழுகுரலும் அடங்கிப்போகுமே
ஆறடி மண்ணுக்குள்ளே!
பெண்ணுக்குள்ளே உயிர் பெற்ற பெண்மையைப் போற்றிட,
புகழ்ந்தேற்றிட பல யுகங்கள்
போதாதே இங்கே!
உயிருக்குள் உயிர் சுமக்கும் உத்தமியைப் பெண்ணாய்க் கண்டானோ பிரம்மனவன்!
குவா குவா சத்தம்
நித்தம் சொட்டும்
மழலை முத்தம்
தத்தித் தத்திப் பிஞ்சு விரல்கள் நடக்கையிலே கெட்டியாக பற்றிக்கொள்வாள் பிஞ்சு கைவிரல்களை அன்னையவள்!
கத்திக் கத்திப் பேசினாலும் அன்போடு அணைத்திடுவாள் பெண் மகவைத் தாயவள்!
சிறு வயதிலே ஆண் பிள்ளை
அரை மேனியாய்த் திரிந்தாலும்
பெண் பிள்ளைதனை சிப்பிக்குள்
முத்தாய்ப் பார்த்திடுவாளே!
""என்ட செல்லமே வாமா ஓடியாம்மா இத போடும்மா போட்டுனு போம்மா""
"வேணா நீயே போடு போ"
என்ற மழலை மொழி கேட்டு
மனக்கவலை தீர்ப்பாளே!
அவளுக்குத்தான் தெரியும் பெண்மையின் மகத்துவம்
வளர வளர அவளுக்கே முக்கியத்துவம் முன்னுரிமை
ஆண் பிள்ளை வயதுக் வந்தால் சடங்கென்ன சம்பிரதாயம் என்ன
பெண் பருவமடைந்தால்......
அக்கா அக்கா ………
"என்ன செண்பகம் இந்த உச்சி வெயில்ல வேர்க்க வேர்க்க வந்திருக்க என்ன விசயம்……"
"அக்கா நாட்டுக்கோழி முட்டை இருந்தா தாங்கக்கா பின்னேரம் அவரு வேலையால வந்தப்பிறகு காசு கொணந்தாரன் தாங்கக்கா………"
முதல் தண்ணி
ஊத்திப் புட்டுக்களி கிண்டி
கொடுத்த பின்பு அவள் வயிற்றிலோ புளிக்கரைசல் மகவின் எதிர்கால வாழ்வை எண்ணியே!
எத்தனை சவால்கள்,
எத்தனை புகார்கள்,
எத்தனை விவாதங்கள்
அத்தனையும் பொறுத்துப் போவாளே தான் பெற்ற பெண் மகவுக்காக!
பள்ளியிலே கேளிக்கைப் பேச்சு,
வீதியிலே கோமாளிகள் கூத்து,
இவைகள் அனைத்தையும் எதிர்த்து நடை போடுவாளே இலட்சியப் படி கொடி பிடித்து!
காதல் என்ற போர்வையிலே
ஆயிரம் ஆசாபாசங்கள்,
கோப தாபங்கள்,
பாச நேசங்கள்
விசமாய்ப் போகக்கூடிய கட்டிளமைப் பருவ வேடங்களைத் தகர்த்து முன்னின்றுடுவாளே!
பட்டணத்துப் பெண்கள் மனதால்
வலியோரே வார்த்தைகளால் அவர்கள் மனக்கிடக்கைகள் யாருக்கும் புரியாதே!
கிராமத்துப் பெண்கள் பேச்சும்
அச்சு வெல்லமே நடை உடை
பாவனையால் மனதையும் தொடுவார்களே!
அவள் தாயாகித் தன் சேய்க்குப் பாட்டியானவளைத் தாங்கி ஆதரித்து அனுசரித்து வாழ் நாள் முடிவு வரை
அவளோடு தண்டவாளம் போலே பயணித்திடுவாளே!
தான் தத்தித் தத்தித் நடந்த போது
எட்டி எட்டிப் போகமல் கெட்டியாகப்
பற்றிக் கொண்டு சுட்டி நடை போட்டவளின் தள்ளாடும் வயதினிலே அவளைத் தள்ளாட விடாமல் பிறர் வாய்ச் சொல்லால் எள்ளி நகையாட விடாமல் தாங்கி நிற்பாளே பெண்ணவள்!
மண்ணைப் பெண்ணுக்கு ஒப்பிடுவார்கள் அவள் மண்ணைப்போல் மௌனித்து இருப்பதினாலோ!
பெண்ணுக்கு நிகர் கண்ணாடியில்
தோன்றும் அவளின் உருவமே!
உலகப் பெண்களை உளமாற வாழ்த்துவோம்!
CROOS.A.H
#உலகமகளிர்_தினம்
ஆராரோ ஆரிரரோ
அழுகுரலும் அடங்கிப்போகுமே
ஆறடி மண்ணுக்குள்ளே!
பெண்ணுக்குள்ளே உயிர் பெற்ற பெண்மையைப் போற்றிட,
புகழ்ந்தேற்றிட பல யுகங்கள்
போதாதே இங்கே!
உயிருக்குள் உயிர் சுமக்கும் உத்தமியைப் பெண்ணாய்க் கண்டானோ பிரம்மனவன்!
குவா குவா சத்தம்
நித்தம் சொட்டும்
மழலை முத்தம்
தத்தித் தத்திப் பிஞ்சு விரல்கள் நடக்கையிலே கெட்டியாக பற்றிக்கொள்வாள் பிஞ்சு கைவிரல்களை அன்னையவள்!
கத்திக் கத்திப் பேசினாலும் அன்போடு அணைத்திடுவாள் பெண் மகவைத் தாயவள்!
சிறு வயதிலே ஆண் பிள்ளை
அரை மேனியாய்த் திரிந்தாலும்
பெண் பிள்ளைதனை சிப்பிக்குள்
முத்தாய்ப் பார்த்திடுவாளே!
""என்ட செல்லமே வாமா ஓடியாம்மா இத போடும்மா போட்டுனு போம்மா""
"வேணா நீயே போடு போ"
என்ற மழலை மொழி கேட்டு
மனக்கவலை தீர்ப்பாளே!
அவளுக்குத்தான் தெரியும் பெண்மையின் மகத்துவம்
வளர வளர அவளுக்கே முக்கியத்துவம் முன்னுரிமை
ஆண் பிள்ளை வயதுக் வந்தால் சடங்கென்ன சம்பிரதாயம் என்ன
பெண் பருவமடைந்தால்......
அக்கா அக்கா ………
"என்ன செண்பகம் இந்த உச்சி வெயில்ல வேர்க்க வேர்க்க வந்திருக்க என்ன விசயம்……"
"அக்கா நாட்டுக்கோழி முட்டை இருந்தா தாங்கக்கா பின்னேரம் அவரு வேலையால வந்தப்பிறகு காசு கொணந்தாரன் தாங்கக்கா………"
முதல் தண்ணி
ஊத்திப் புட்டுக்களி கிண்டி
கொடுத்த பின்பு அவள் வயிற்றிலோ புளிக்கரைசல் மகவின் எதிர்கால வாழ்வை எண்ணியே!
எத்தனை சவால்கள்,
எத்தனை புகார்கள்,
எத்தனை விவாதங்கள்
அத்தனையும் பொறுத்துப் போவாளே தான் பெற்ற பெண் மகவுக்காக!
பள்ளியிலே கேளிக்கைப் பேச்சு,
வீதியிலே கோமாளிகள் கூத்து,
இவைகள் அனைத்தையும் எதிர்த்து நடை போடுவாளே இலட்சியப் படி கொடி பிடித்து!
காதல் என்ற போர்வையிலே
ஆயிரம் ஆசாபாசங்கள்,
கோப தாபங்கள்,
பாச நேசங்கள்
விசமாய்ப் போகக்கூடிய கட்டிளமைப் பருவ வேடங்களைத் தகர்த்து முன்னின்றுடுவாளே!
பட்டணத்துப் பெண்கள் மனதால்
வலியோரே வார்த்தைகளால் அவர்கள் மனக்கிடக்கைகள் யாருக்கும் புரியாதே!
கிராமத்துப் பெண்கள் பேச்சும்
அச்சு வெல்லமே நடை உடை
பாவனையால் மனதையும் தொடுவார்களே!
அவள் தாயாகித் தன் சேய்க்குப் பாட்டியானவளைத் தாங்கி ஆதரித்து அனுசரித்து வாழ் நாள் முடிவு வரை
அவளோடு தண்டவாளம் போலே பயணித்திடுவாளே!
தான் தத்தித் தத்தித் நடந்த போது
எட்டி எட்டிப் போகமல் கெட்டியாகப்
பற்றிக் கொண்டு சுட்டி நடை போட்டவளின் தள்ளாடும் வயதினிலே அவளைத் தள்ளாட விடாமல் பிறர் வாய்ச் சொல்லால் எள்ளி நகையாட விடாமல் தாங்கி நிற்பாளே பெண்ணவள்!
மண்ணைப் பெண்ணுக்கு ஒப்பிடுவார்கள் அவள் மண்ணைப்போல் மௌனித்து இருப்பதினாலோ!
பெண்ணுக்கு நிகர் கண்ணாடியில்
தோன்றும் அவளின் உருவமே!
உலகப் பெண்களை உளமாற வாழ்த்துவோம்!
CROOS.A.H
tirsdag 6. mars 2018
நிழல் தேடிய பயணத்தில் CROOS.A.H
நினைவான நிலவே
என் நிறைவேறாத
ஆசைகள் எத்தேனையோ!
பூமி வாழ் மானிடன் நான்
அருகில் வர தொட ரசிக்க
ஏக்கங்கள் கோடியே
ஆனாலும் தெருக்கோடியே!
நீ என்றாவது என்னைப் பற்றி
சிந்தித்ததுண்டா என்னைக் காண
பூமி தரையிரங்கி வந்ததுண்டா
எப்போ வருவாய் பதிலுரை!
என்னைப் போலே எண்ணற்ற
எண்ணங்களுடன் எண்ணற்ற
மனிதர்களின் எண்ணங்களுக்கு
எப்போது விடை தருவாய்!
வான் வீதி விட்டு மண் வீதி
இறங்கி வா மதியே
பதில் தா கேள்விகளுக்கு
ஏமாற்றாதே நான் ஏமாந்திடுவேனே!
CROOS.A.H
mandag 5. mars 2018
அப்பா
#அப்பா(ஐயா)
அப்பா இல்லையெனில்
பிள்ளையாகுமே தப்பாய்
அப்பா இருந்தாலே பிள்ளை
வாழ்க்கை இருக்குமே சிறப்பாய்/
இன்று வரை அணிந்ததில்லை
கால்களுக்குப் பாதணி
என் நினைவு தெரிந்த
நாள் முதலாய்க் கண்டதில்லை
அவர் கைகளில் தங்க நகையணி/
நரை தாடி வயதிலும்
ஓடி ஓடி உழைத்திடுவாரே
நடை,உடை இன்று வரைத்
தள்ளாடிக் கண்டதில்லையே/
-
காண்போரிடம் இன்முகம்
காட்டி உறவாடிருவாரே
உறவுகளுக்கு முன்மாதிரியாய் நிலைத்திடுவாரே/
இல்லத்திலே எனக்கு மூத்தோர்
மூன்று சகோதரர்களே
அவர்களுக்கெல்லாம் மூத்த
சகோதரர் அவராமே/
அகவை எழுபதிலும் நேரிய பார்வையும்,நிமிர்ந்த நடையிலும் இம்மியளவும் குறைந்ததில்லையே/
மாற்றாரைக் குறைப்பாடு
உரைக்கவென குரலும்
ஓங்கியதில்லையே
குறைகண்டு வந்தவரையும்
நிலை தாழ்த்தி உரைத்ததில்லையே/
மாலையிட்ட நாள் முதலாய்
அதிகாரம் அம்மாவிடம்
கொாண்டதில்லையே
தன் இரத்த உறவுகளிடம்
அகங்காரப் பேச்சும்
உரைத்ததில்லையே/
அன்னையவள் கொண்டாளே
ஐயிரண்டு மாதக் கர்ப்ப வலி
தந்தையவர்க்கு நானோ இன்று
வரை தலைவலி ஆனாலும்,
கையுதறி விட்டதில்லையே/
உழைத்த கைகள் வரி வரியாய்க்
காய்ந்து போனாலும்,
மனதிலே பசுஞ்சோலை
வனம் போலே ஈரம் உற்றவரே/
அப்பாவைப் பற்றியியம்ப
சிறப்புற்ற தமிழே நீ வாழும்
காலம் வரைக்கும்
அப்பாவின் வாழ் நாள் நீளட்டுமே/
றோய் குருஸ் அம்புறோஸ்,
Amburose Croos Roy.
அப்பா இல்லையெனில்
பிள்ளையாகுமே தப்பாய்
அப்பா இருந்தாலே பிள்ளை
வாழ்க்கை இருக்குமே சிறப்பாய்/
இன்று வரை அணிந்ததில்லை
கால்களுக்குப் பாதணி
என் நினைவு தெரிந்த
நாள் முதலாய்க் கண்டதில்லை
அவர் கைகளில் தங்க நகையணி/
நரை தாடி வயதிலும்
ஓடி ஓடி உழைத்திடுவாரே
நடை,உடை இன்று வரைத்
தள்ளாடிக் கண்டதில்லையே/
-
காண்போரிடம் இன்முகம்
காட்டி உறவாடிருவாரே
உறவுகளுக்கு முன்மாதிரியாய் நிலைத்திடுவாரே/
இல்லத்திலே எனக்கு மூத்தோர்
மூன்று சகோதரர்களே
அவர்களுக்கெல்லாம் மூத்த
சகோதரர் அவராமே/
அகவை எழுபதிலும் நேரிய பார்வையும்,நிமிர்ந்த நடையிலும் இம்மியளவும் குறைந்ததில்லையே/
மாற்றாரைக் குறைப்பாடு
உரைக்கவென குரலும்
ஓங்கியதில்லையே
குறைகண்டு வந்தவரையும்
நிலை தாழ்த்தி உரைத்ததில்லையே/
மாலையிட்ட நாள் முதலாய்
அதிகாரம் அம்மாவிடம்
கொாண்டதில்லையே
தன் இரத்த உறவுகளிடம்
அகங்காரப் பேச்சும்
உரைத்ததில்லையே/
அன்னையவள் கொண்டாளே
ஐயிரண்டு மாதக் கர்ப்ப வலி
தந்தையவர்க்கு நானோ இன்று
வரை தலைவலி ஆனாலும்,
கையுதறி விட்டதில்லையே/
உழைத்த கைகள் வரி வரியாய்க்
காய்ந்து போனாலும்,
மனதிலே பசுஞ்சோலை
வனம் போலே ஈரம் உற்றவரே/
அப்பாவைப் பற்றியியம்ப
சிறப்புற்ற தமிழே நீ வாழும்
காலம் வரைக்கும்
அப்பாவின் வாழ் நாள் நீளட்டுமே/
றோய் குருஸ் அம்புறோஸ்,
Amburose Croos Roy.
#மூவிராசப்_பட்டிணம்_கலைப்_பட்டறை #ஆக்கம்:- #மூவிராசப்_பட்டிணக்_குழுமம் (#இது_ஒரு_கழகம்_அல்ல)
#மூவிராசப்_பட்டிணம்_கலைப்_பட்டறை
மூவிராசப் பட்டிணம் மூச்சடங்கா
முயற்சியுடையோரின் கருவூலம்/
எங்கள் மூதாதையரின் பழம் பெருங்கதை
சொல்லுமே பெயர் சாலை தெருவோரம்/
கடற்கரையோரம் நிலை கொண்ட
எங்கள் பழம் பெரும் நகரோரம்/
வந்தாரை வாழ வைத்து பெயர் பெற்ற
இருபக்க நீர்ப்பரப்போரம்/
நாங்கள் எடுத்த முயற்சி
கைகூடுமே வான் வீதிவரையோரம்/
பல திறன் கொண்ட கலைஞர்கள்
எங்கள் வலக்கரமோரம்/
அடுத்தடுத்து ஆக்கம் படைப்போரின் பெரும் கலைப்பட்டறை எங்கள் கையோரம்/
இனி எங்கிலும் காண்போம் திறமைகளின் படைப்புக்கலை எங்கள் இளைஞர்களின் விரலோரம்/
ஆக்கம் கொண்டு பிரகாசித்திடுவோம்
இணையத்தின் எல்லைவரையோரம்/
ஊக்கம் கொடுத்தால் சென்றிடுவோம்
உலக எல்லைவரையோரம்/
உயர்ந்து நிற்போம் தாழ்ந்தோனை
உயர்த்தி வைப்போம்/
#ஆக்கம்:- #மூவிராசப்_பட்டிணக்_குழுமம்
(#இது_ஒரு_கழகம்_அல்ல)
மூவிராசப் பட்டிணம் மூச்சடங்கா
முயற்சியுடையோரின் கருவூலம்/
எங்கள் மூதாதையரின் பழம் பெருங்கதை
சொல்லுமே பெயர் சாலை தெருவோரம்/
கடற்கரையோரம் நிலை கொண்ட
எங்கள் பழம் பெரும் நகரோரம்/
வந்தாரை வாழ வைத்து பெயர் பெற்ற
இருபக்க நீர்ப்பரப்போரம்/
நாங்கள் எடுத்த முயற்சி
கைகூடுமே வான் வீதிவரையோரம்/
பல திறன் கொண்ட கலைஞர்கள்
எங்கள் வலக்கரமோரம்/
அடுத்தடுத்து ஆக்கம் படைப்போரின் பெரும் கலைப்பட்டறை எங்கள் கையோரம்/
இனி எங்கிலும் காண்போம் திறமைகளின் படைப்புக்கலை எங்கள் இளைஞர்களின் விரலோரம்/
ஆக்கம் கொண்டு பிரகாசித்திடுவோம்
இணையத்தின் எல்லைவரையோரம்/
ஊக்கம் கொடுத்தால் சென்றிடுவோம்
உலக எல்லைவரையோரம்/
உயர்ந்து நிற்போம் தாழ்ந்தோனை
உயர்த்தி வைப்போம்/
#ஆக்கம்:- #மூவிராசப்_பட்டிணக்_குழுமம்
(#இது_ஒரு_கழகம்_அல்ல)
விக்டரியன்ஸ் கொடி பறக்கும்.... # கவிதையின் காதலன்.
விக்டரியன்ஸ் கொடி பறக்கும்....
வெற்றிக் கோயில் மணியடிக்க
எட்டுத்திக்கும் அனல் பறக்க,
நடந்து வரும் படையை பாரு!
இவர் திறனுக்கு முன்,
துணிந்து நின்று
திணறியவர் கதைய கூறு!
மொத்த தீவும் நடு நடுங்க,
ஒத்த கொடி பிடிச்சு கொண்டு
விக்டறியன் நடந்து வந்தா,
கத்தும் கடல் புலன் அடக்கும்,
வெட்டும் தீயின் பொறி பறக்கும்.
பத்திமாவில் அடிய வச்சு,
கபடி சொல்லி கால் மடிச்சா,
லூர்த்து பாட்டில் வெடிமுழங்கும்!
கெபியடியும் நடுநடுங்கும்!
மணல் பறக்க அடியெடுத்து,
கடல் மடியில தடிய நட்டு,
மட்டைப் பந்து அடிக்கையிலே
மேகத் தட்டும் குல நடுங்கும்
வழி கொடுத்து ஒதுங்கி நிக்கும்.
தடகளத்தில் மிதிய வச்சு
தசைகள் எல்லாம் நடுநடுங்க,
விசையை கொண்டு
ஓட்டம் கண்டால்
திசைகள் எல்லாம் பறபறக்கும்
பேசாலை சிலு சிலுக்கும் .
வசவுகளை உதறித் தள்ளி
நெசவுகளாய் உறவை அள்ளி
விக்டரியன் விசையின் புகழ் விண்வரைக்கும் முழங்கி நிற்க,
ஊர்ச்சோலை மரங்களெல்லாம்
பேசாலைப் புகழ் படிக்கும்!
# கவிதையின் காதலன்.
வெற்றிக் கோயில் மணியடிக்க
எட்டுத்திக்கும் அனல் பறக்க,
நடந்து வரும் படையை பாரு!
இவர் திறனுக்கு முன்,
துணிந்து நின்று
திணறியவர் கதைய கூறு!
மொத்த தீவும் நடு நடுங்க,
ஒத்த கொடி பிடிச்சு கொண்டு
விக்டறியன் நடந்து வந்தா,
கத்தும் கடல் புலன் அடக்கும்,
வெட்டும் தீயின் பொறி பறக்கும்.
பத்திமாவில் அடிய வச்சு,
கபடி சொல்லி கால் மடிச்சா,
லூர்த்து பாட்டில் வெடிமுழங்கும்!
கெபியடியும் நடுநடுங்கும்!
மணல் பறக்க அடியெடுத்து,
கடல் மடியில தடிய நட்டு,
மட்டைப் பந்து அடிக்கையிலே
மேகத் தட்டும் குல நடுங்கும்
வழி கொடுத்து ஒதுங்கி நிக்கும்.
தடகளத்தில் மிதிய வச்சு
தசைகள் எல்லாம் நடுநடுங்க,
விசையை கொண்டு
ஓட்டம் கண்டால்
திசைகள் எல்லாம் பறபறக்கும்
பேசாலை சிலு சிலுக்கும் .
வசவுகளை உதறித் தள்ளி
நெசவுகளாய் உறவை அள்ளி
விக்டரியன் விசையின் புகழ் விண்வரைக்கும் முழங்கி நிற்க,
ஊர்ச்சோலை மரங்களெல்லாம்
பேசாலைப் புகழ் படிக்கும்!
# கவிதையின் காதலன்.
lørdag 3. mars 2018
முத்த தோட்டாக்கள்
புருவங்களை இமைகள் காவு கொள்ள,
காதல் குளத்தில் பார்வைகளின் தற்கொலைத் தாக்குதல்!
இரு பால் இனமும் சம பாதிப்பில்,
ஆனால் உள் காயங்களால்
அதிகம் உழன்றது அவன் இதயம்.
அவளின் உதட்டுப் பிளவுகளின் வண்ணத்தை இவன் அபகரிக்க
உச்ச கட்ட மோகத்தில்
மோதல் கொள்கிறது - இந்த
காதலர் தினப் பனிப் போர்!
கைகள் கட்டப்பட்ட இப் போரில்,
முகங்கள் உணர்வுகளைக் கூட்டி போரிடுகின்றன!
எச்சில் தோட்டாக்கள்
வாய்வழிச் சுரங்கத்தில் மாறி மாறி தாக்குதல் நடத்த,
அவ்வப்போது நாக்குகள்
முறியடிப்புத் தாக்குதல் நடத்துகின்றன!
காதல் கோட்டையை
தக்க வைத்துக் கொள்ள,
நடக்கும் இவ் உள்நாட்டுப் போரில்,
உஷ்ணக் காற்றுக்கு மட்டும்
உட்புகுந்து வெளிவர அனுமதி!
வலிய யுத்தத்தில்
பற்கள் ஒவ்வொரு முறையும்
இருப்பை தக்க வைக்க
பற்றிப் பிடித்து
தாக்குதல் நடத்துகின்றன!
அவற்றுக்கு உதவியாக
நாக்கு அவ்வப்போது
பதுங்கித் தாக்குதல் புரிகின்றன!
உக்கிரப் போரின் முடிவில்
விதிமுறைகள் தளர்கின்றன, கட்டவிழ்க்கப்பட்ட கைகள்,
திடீரென அவளின்
தாடை தேசத்தில் கை வைக்க,
மோகப் பிழம்பில் எச்சில் காட்டாறு பெருக்கெடுத்து ஓடுகிறது!
அமைதி கேட்ட அங்கங்கள் யாவும்
புரட்சி ஆயுதம் ஏந்தியதால்,
இரு தேசங்களும் செய்வதறியாது நின்றன!
ஊடல் போர் வரக்கூடா தென்பதில் தெளிவான அவளரசியும், அவனரசனும் ஈற்றில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்கின்றனர்!
இழப்பீடுகள் வழங்கப்படா
இப்போரில் வலிகளூடே நிவாரணம்
வழங்கியது சிறப்பு!
ஆனாலும் இGet ரு தேசத்து அங்கங்களிலும் ஏக்கம் என்னும் வறுமை
தொற்றிக் கொண்டதை
யாராலும் தடுக்க முடியவில்லை!
# கவிதையின் காதலன்.
Abonner på:
Innlegg (Atom)
-
நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா) ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள்...
-
பணங்கா வாடி கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும், புளிச்ச வாசத்தில் வண்டுருளும், வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, அருவா கத்திய துணைக்கு வச்சு...








