# மண்முகட்டில் மருந்து பூச
பாலைவனத்தின் கள்ளிக்காடு நான்,
பாசம் கற்று வேரூன்றியவன் இன்று
வறட்சி போக்க முத்த மழை கேட்கவில்லை, சருகுப் புண் ஆற்ற வார்த்தைப் பனி பொழியக் கேட்கிறேன்.
மண் மாதாவின் மடியில்
மயிரிழையில் ஊசலாடும்
காதல் அடிமையைப் பார்!
என் ஏக்கம் என்னவென்றாவது கேள் !
ஓ உன்னத புராணம் இசைக்கும் காதல் துளிர் விட்ட சக பேரீச்சைகளே..!
சாகத்தான் வழியில்லை..
வாழ என்னவள் வாசலுக்கு,
வசந்தக் காற்றையாவது
அனுப்பி வையுங்கள்!
உதிரம் சுட்டு, உண்டி சுருங்கிடும்
வறுமை வாசி நான்..,
காதல் கொஞ்சம் கடனாய் ஈந்தாள்
கால் வயிரேனும் கழுவிக் கொள்வேன்!
கட்டியணைத்த பொழுதுகள்
கரை தட்டிய மணல்மேடாய் கற்சிலையானதே!
என் மணல் மேட்டுப் புழுதிக் காற்றில் மல்லிகை வாசம் பூக்காதா?
என் கள்ளிப் பூவைச் சுவைக்க
என் கன்னிக் காதலி துணிய மாட்டாளா?
ஒட்டகத்தின் தாடைகள்
சேர்த்து வைத்த நீர்
கெட்டுப் போனதுண்டோ? இவை போல்
என்னுள் ஒட்டியுள்ள காதலும்
உன் ஒன்றை வார்த்தைக்காய்
செத்திடாமல் வாழுதடி..!
மேகங்கள் என்னை நிழலிடையில் கொடுத்தனுப்பிய கடிதங்கள்
உன் மீது என் வலிகளைத்
தூவாமல் போனது ஏனடி ?
இன்று ஏக்கக் குறிகள் தாக்க,
பாலைத் தென்றலின் ஏழனச் சிரிப்பில்
என் தூக்கம் கொள்ளை போனதே!
காதலில் கரைந்த இம் மண்முகட்டுத் தாவரத்தை, ஈற்றில் சருகான பின்
அள்ளிப் போடவாவது தரிசனம் தா! அதுவரை என் கள்ளித் தோட்டத்தின்
தேகப் புண்கள் வெயிற் காற்றை
மருந்தாய் பூசட்டும்...!
கவிதையின் காதலன்..
fredag 26. januar 2018
onsdag 24. januar 2018
கற்பிழந்தவன் கல்லறை கேட்கிறேன்
ஆண் காதலில் துகில் கொள்கிறாய்
ஆனாலுமே வதை செய்கிறாய்
ஆகாததை அமிர்தென்கிறாய்
மென்மையைச் சீண்டித் துகிலுரித்தாய் -
ஆகாததை அமிர்தென்கிறாய்
மென்மையைச் சீண்டித் துகிலுரித்தாய் -
மெளனப் புன்னகை தந்தேன்.
உள்ளுணர்வை முள்கம்பி கொண்டிழுத்தாய் -
உள்ளுணர்வை முள்கம்பி கொண்டிழுத்தாய் -
குருதியிலும் கருணை சொரிந்தேன்.
தாயைப் பழித்து காதல் கோடு கிழித்தாய் -
தாயைப் பழித்து காதல் கோடு கிழித்தாய் -
அழுதும் முகம் மலர்ந்தேன்.
காதலைப் பிழிந்து சாயம் வெளுக்கிறாய் -
காதலைப் பிழிந்து சாயம் வெளுக்கிறாய் -
காய்ந்தும் சருகாய் உடன் அமர்கிறேன்.
வார்த்தை ஒறுத்து தனிமை செய்கிறாய் -
வார்த்தை ஒறுத்து தனிமை செய்கிறாய் -
மெல்லிசை நுகர்ந்து உன் திசை படிக்கிறேன்.
இதழ் மொழிகளில் வெறுப்பை உமிழ்கிறாய்-
இதழ் மொழிகளில் வெறுப்பை உமிழ்கிறாய்-
இலை பட்ட நீராய் துளிர் விட்டு நிற்கிறேன்.
வாழ்கைக்காக வாழ்வை வெறு என்கிறாய்-
வாழ்கைக்காக வாழ்வை வெறு என்கிறாய்-
இலக்கை கழற்றி இதயம் கேட்கிறேன்.
ஊடலில் விருப்பில்லை தள்ளி நில் என்கிறாய்-
ஊடலில் விருப்பில்லை தள்ளி நில் என்கிறாய்-
காமக் களத்திலும் வேடிக்கை பார்க்கிறேன்.
கடைசி நொடி வரை காதல் பொய் என்கிறாய் -
கடைசி நொடி வரை காதல் பொய் என்கிறாய் -
உடல் கிழித்து என் உள்ளத்தை காட்டினேன்.
வேலை அற்ற நீ வெறும் பயல் என்கிறாய்-
வேலை அற்ற நீ வெறும் பயல் என்கிறாய்-
தேடல் களத்தில் நான் முனைவன் என்கிறேன்.
சிதைக்கிறாய் , உதைக்கிறாய், வலிகளை தாங்கினேன்.
சிதைக்கிறாய் , உதைக்கிறாய், வலிகளை தாங்கினேன்.
நற்பை பகைத்தும் உன் கற்பை பற்றினேன்.
கடைசியில் சொல்கிறாய் வக்கற்றவனுக்கு
கடைசியில் சொல்கிறாய் வக்கற்றவனுக்கு
வாழ்க்கை எதற்கென்று இழப்பினில் இதயம் வெடித்து
கற்பிழந்தவன் நான் கல்லறை கேட்கிறேன்.
கற்பிழந்தவன் நான் கல்லறை கேட்கிறேன்.
கவிதையின் காதலன் பேசாலை
tirsdag 23. januar 2018
கண்ணீர்
ஆனந்தமே கொண்டாலும்
அழுகையுமே என்றாலும்
கண்களில் கண்ணீர் கசியுமே//
அழுகையுமே என்றாலும்
கண்களில் கண்ணீர் கசியுமே//
கண்ணீர் சிந்தி சிதற
கண்ணோரம் கரையுண்டு
கண்ணீர் சிந்தும் மக்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கண்ணோரம் கரையுண்டு
கண்ணீர் சிந்தும் மக்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கடல் நீர் முட்டி மோத
கடற்கரை உண்டு
கடலில் வாழ்வுக்காக
தத்தளிக்கும் மீனவர்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கடற்கரை உண்டு
கடலில் வாழ்வுக்காக
தத்தளிக்கும் மீனவர்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கண்ணோரம் ஆயிரம் கதைகள்
பேசுமே கண்ணம்மா !
கதைகள் முற்றிப்போனால்
மனது விசும்பி ஏங்குமே //
பேசுமே கண்ணம்மா !
கதைகள் முற்றிப்போனால்
மனது விசும்பி ஏங்குமே //
கண்ணகியின் கண்ணீர்
மதுரையை எரித்தது
ஒற்றை கால் சிலம்பையும்
அறுத்து எறிந்தது //
மதுரையை எரித்தது
ஒற்றை கால் சிலம்பையும்
அறுத்து எறிந்தது //
கற்காலம் தொடங்கி
தற்காலம் வரை கண்ணீரின்
மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்
மனித வாழ்விலே தொடர்
கோடுகளே தோழமைகளே //
இவண்.
CROOS.A.H
Amburose Croos Roy
தற்காலம் வரை கண்ணீரின்
மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்
மனித வாழ்விலே தொடர்
கோடுகளே தோழமைகளே //
இவண்.
CROOS.A.H
Amburose Croos Roy
கருணை இல்லம்
கண்டதும் கொண்டதே காதல்
சதை பிண்டங்களின் மோகம்//
சதை பிண்டங்களின் மோகம்//
முகத்திரை இட்டு மோசமாய்
திரையின் பின்னே வேசமாய் //
திரையின் பின்னே வேசமாய் //
கணப்பொழுதுக்கு இன்பமாய்
நாம் எங்கனமும் துன்பமாய்//
நாம் எங்கனமும் துன்பமாய்//
கருணை இன்றி பரிதவிப்பாய்
கைவிடப்பட்ட எங்களுக்காய்//
கைவிடப்பட்ட எங்களுக்காய்//
இயற்கை அன்னையவள்
இரக்கம் கொண்டவளாய்//
இரக்கம் கொண்டவளாய்//
ஏற்ற இறக்கம் அற்றவளாய்
கருணையாய்க் கொடுத்தாளே//
கருணையாய்க் கொடுத்தாளே//
கருணை இல்லம் அதை
முன் பின் முகமறியாமல்//
முன் பின் முகமறியாமல்//
அன்பும் பண்பும் பாசமுமாய்
அதிகாரமற்ற அழைப்பினால்
ஆதரவளித்த அன்னையர்கள்//
அதிகாரமற்ற அழைப்பினால்
ஆதரவளித்த அன்னையர்கள்//
குல கோத்திரம் பாராமல்
முகம் முறியா இன்முகமாய்//
முகம் முறியா இன்முகமாய்//
எல்லோரிடனும் பண்புடனும்
பாராமுகமற்றும் பாசமாயும்//
பாராமுகமற்றும் பாசமாயும்//
பழகும் என்னைப்போலவே
பெற்றோரால் மறுக்கப்பட்ட//
பெற்றோரால் மறுக்கப்பட்ட//
குப்பையில் வீசியெறியப்பட்ட
அனாதையில்ல வாயிலில்//
அனாதையில்ல வாயிலில்//
ஆளரவம் அற்ற வேளையில்
யார் யாரென தெரியாதவராய்//
யார் யாரென தெரியாதவராய்//
கைவிடப்பட்ட எங்களை
அன்றும் இன்றும் என்றும்//
அன்றும் இன்றும் என்றும்//
அன்போடு அனைத்திடும்
கருணையில்லம் கண்ணால்
காணும் தெய்வமே எமக்கு.
கருணையில்லம் கண்ணால்
காணும் தெய்வமே எமக்கு.
mandag 8. januar 2018
ஊரச்சுத்தி ஓடிப்பாரு எங்க பேசாலை பெயர் சொல்லும் பாரு //
ஊரச்சுத்தி ஓடிப்பாரு எங்க
பேசாலை பெயர் சொல்லும் பாரு //
வெற்றியன்னை துணை கொண்டு
எங்க வாழ்க்க நல்லா ஓடுது பாரு //
பேசாலை பெயர் சொல்லும் பாரு //
வெற்றியன்னை துணை கொண்டு
எங்க வாழ்க்க நல்லா ஓடுது பாரு //
ஊருக்குள்ள வரும்போதே
ஆசிவழங்கும் இலுப்பையடி
வரவேற்பு மாதாவே சரணமம்மா //
ஊரார் பிள்ளைகள் கல்விக்கடலில்
நீந்த துணையுற்ற பத்திமா
அன்னையே சரணமம்மா //
ஆசிவழங்கும் இலுப்பையடி
வரவேற்பு மாதாவே சரணமம்மா //
ஊரார் பிள்ளைகள் கல்விக்கடலில்
நீந்த துணையுற்ற பத்திமா
அன்னையே சரணமம்மா //
ஊரசுத்தி.........
கிட்டிபுள்ளு அடிச்சு விளையாடுன
தெருவெலாம் தாரோட்டா ஆச்சுதம்மா //
தாரோடா இருந்த மெயின்ரோட்ல
பள்ளாங்குழி ஆடத்தோணுதம்மா //
ரேசர் வண்டி தள்ளி விளையாடின
இடத்துல இப்போ இரும்பு வண்டி
புகை கக்குதம்மா //
தாரோடா இருந்த மெயின்ரோட்ல
பள்ளாங்குழி ஆடத்தோணுதம்மா //
ரேசர் வண்டி தள்ளி விளையாடின
இடத்துல இப்போ இரும்பு வண்டி
புகை கக்குதம்மா //
ஊரச்சுத்தி......
சிலையடில கேட்டுபாருங்க
சொந்தகதையும் சொலுமம்மா
சோகக்கதையும் கூடவே வருகுதம்மா //
சொந்தகதையும் சொலுமம்மா
சோகக்கதையும் கூடவே வருகுதம்மா //
கடலன்னை போல எம்மவர்
பஞ்சம் தீர்ப்பவர் யாரம்மா //
பனைவளம் கொழிக்கும்
அழகிய வன ஊரம்மா //
வெற்றி மேல் வெற்றியீட்டி தரும் வெற்றிமாமரியே வாழ்கவே //
பஞ்சம் தீர்ப்பவர் யாரம்மா //
பனைவளம் கொழிக்கும்
அழகிய வன ஊரம்மா //
வெற்றி மேல் வெற்றியீட்டி தரும் வெற்றிமாமரியே வாழ்கவே //
ஊரச்சுத்தி.....
இவண்.
CROOS.A.H
CROOS.A.H
Abonner på:
Innlegg (Atom)
-
நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா) ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள்...
-
பணங்கா வாடி கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும், புளிச்ச வாசத்தில் வண்டுருளும், வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, அருவா கத்திய துணைக்கு வச்சு...






