torsdag 1. desember 2011

இலுப்பை மரம்

பேசாலைக்கிராமத்தின் ஒரு வரலாற்றுச்சின்னமாக இந்த மரம் பலகாலமாக பலராலூம் கருதப்பட்டு வந்தது இந்த மரம். ஆரம்பகாலத்தில் நன்றாக செழிப்பாக பூக்களோடும் காய்களோடும் வளர்ந்த மரம் பின்னார் அடைமழை, வெள்ளப் பெருக்கு இவைகளினால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடையத் தொடங்கியது. 1980களில் என நினக்கின்றேன் ஒரு மாரிகாலத்தில் அடர்ந்த மழையோடு சரிந்து வீழ்ந்தது அந்த இலுப்பை மரம். தாவிதுப்பீரிசு என்ற ஒரு முதியவரின் இறப்பும் சமகாலத்தில் நடந்திருக்க வேண்டும் என நினைக்கி ன்றேன். இந்த மரத்திற்கு ஏன்   இவ்வளவு பீடிகை? அதில் தான் விசயமே இருக்கின்றது. பேசாலை என்றால் வடக்கே கடல், தெற்கே நடுக்குடாக்கடல், மேற்கே புகைரதப்பாதை கிழக்கே இந்த இலுப்பை மரம் எல்லைகளாகக் கொண்டது. பேசாலைக்கு யாராவது வரவேண்டுமானால் இந்த இலுப்பைமரத் தைத்தாண்டித்தான் வரவேண்டும். எமது ஊருக்கு  யாரவாது பிரமுகர்கள் வந்தால் இந்த இலுப்பை மரத்தில் இருந்துதான் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார். அந்த அளவுக்கு பேசாலைமக்களின் அன்றாட நினைவுகளில் இந்த மரம் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்டது இந்த மரம்.

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...